search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்பிக்கள் அமளி"

    மேகதாது அணைத்திட்டத்திற்கு எதிராக மாநிலங்களவையில் அதிமுக எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. #WinterSession #RajyaSabhaAdjourned
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிராக அதிமுக எம்பிக்களும், ஆந்திர தலைநகர் அமராவதிக்கு சிறப்பு நிதி தொகுப்பு வழங்க வலியுறுத்தி தெலுங்குதேசம் கட்சி எம்பிக்களும் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் காங்கிரஸ் எம்பிக்கள் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பாராளுன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடியது. மாநிலங்களவை கூடியதும் அதிமுக மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானம் செய்த அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, பல்வேறு மசோதாக்களும் விவாதங்களும் நிலுவையில் இருப்பதால் ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். அதிமுக உறுப்பினர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்தார். 

    ஆனாலும் எம்பிக்களின் அமளி நீடித்தது. இதையடுத்து முதலில் 15 நிடங்களுக்கும், அதன்பின்னர் மதியம் 12 வரையிலும் அவை ஒத்திவைக்கப்பட்டது. 12 மணிக்கு அவை கூடியபோதும் இதே நிலை நீடித்தது. இதையடுத்து இரு அவைகளும் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

    2 மணிக்கு மாநிலங்களவை கூடியபோது அதிமுக உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இனி நாளை காலை 11 மணிக்கு மாநிலங்களவை கூடும். #WinterSession #RajyaSabhaAdjourned
    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் இன்று அதிமுக தெலுங்குதேசம் கட்சிகளின் எம்பிக்களின் அமளி காரணமாக இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. #WinterSession #ParliamentAdjourned
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிராக அதிமுக எம்பிக்களும், ஆந்திர தலைநகர் அமராவதிக்கு சிறப்பு நிதி தொகுப்பு வழங்க வலியுறுத்தி தெலுங்குதேசம் கட்சி எம்பிக்களும் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் காங்கிரஸ் எம்பிக்கள் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பாராளுன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடியது. மக்களவை கூடிய சிறிது நேரத்தில் அதிமுக எம்பிக்கள் எழுந்து கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பினர். மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டபடியே அவையின் மையப்பகுதிக்கு சென்றனர். கைகளில் கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

    பின்னர் அவர்களுடன் தெலுங்குதேசம் கட்சி எம்பிக்களும் இணைந்துகொண்டனர். இதனால் அவையை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவையை மதியம் வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.


    இதேபோல் மாநிலங்களவையில் அதிமுக மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானம் செய்த அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, பல்வேறு மசோதாக்களும் விவாதங்களும் நிலுவையில் இருப்பதால் ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். அதிமுக உறுப்பினர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்தார்.

    ஆனாலும் எம்பிக்களின் அமளி நீடித்தது. இதையடுத்து முதலில் 15 நிமிடங்களுக்கும், அதன்பின்னர் மதியம் 12 வரையிலும் அவை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு அவை கூடியபோதும் இதே நிலை நீடித்தது. இதையடுத்து இரு அவைகளும் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. #WinterSession #ParliamentAdjourned
    ×