search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு"

    எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு சரியான பாடத்தை புகட்டியிருப்பதாக அமைச்சர் சிவி சண்முகம் கூறினார். #MLAsDisqualificationCase #CVShanmugam
    சென்னை:

    தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்ற மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளார். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்றும், தகுதிநீக்கம் தொடர்பாக சபாநாயகர் எடுத்த முடிவில் தவறு இல்லை என்றும் நீதிபதி அறிவித்தார். மேலும், தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மனுக்களையும் தள்ளுபடி செய்தார்.

    இந்த தீர்ப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பு டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு சரியான பாடத்தை புகட்டியுள்ளது என சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்தார்.

    தீர்ப்பை நீதிபதி வாசித்து முடித்ததும் முதல்வர் தரப்பினர் இந்த வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர். அமைச்சர்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.



    இந்த தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாகவும், ஜனநாயக நெறிகளுக்கு எதிரானது என்றும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 பேர் தரப்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டால், அவர்களுக்கு வெற்றி கிடைக்கும் என்றும் கூறினார். #MLAsDisqualificationCase #CVShanmugam
    எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கை விசாரிப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மூன்றாவது நீதிபதி விமலாவுக்கு பதில் சத்தியநாராயணாவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது. #MLAsDisqualificationCase #SCJudge
    புதுடெல்லி:

    தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து, இந்த வழக்கு 3-வது நீதிபதியின் அமர்வுக்கு மாற்றப்பட்டது. 3-வது நீதிபதியாக, நீதிபதி விமலா அறிவிக்கப்பட்டார்.

    ஆனால், இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு விசாரித்தால் காலதாமதமாகும் என்பதால் சுப்ரீம் கோர்ட்டு அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் தங்க தமிழ்ச்செல்வனை தவிர மற்ற 17 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்தனர். அதேசமயம் தமிழக அரசு மற்றும் சட்டப்பேரவை செயலாளர் சார்பில் கேவியட் மனுக்களும் தாக்க்ல செய்யப்பட்டன.



    இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் 3-வது நீதிபதியாக சத்யநாராயணாவை பரிந்துரை செய்தது.

    மேலும், 3-வது நீதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை திரும்பப் பெற வேண்டும் என்றும், நீதிபதிகள் மீது இதுபோன்று குற்றச்சாட்டு மனுவை இனி தாக்கல் செய்யக்கூடாது என்றும் வழக்கு தொடர்ந்த 17 பேருக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. #MLAsDisqualificationCase #SCJudge
    18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் நீதிபதிகளின் இருவேறு மாறுபட்ட தீர்ப்புகளை அடுத்து, 3-வது நீதிபதியாக நீதிபதி விமலா நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #MLAdisqualifiedcase #TNassembly
    சென்னை:

    ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் சிக்கல்களில் ஆளும் அதிமுக அரசுக்கு ஏற்பட்ட மிக முக்கிய சிக்கல்களில் ஒன்று 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் ஆகும். சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவுடன், அவர்களுக்கு ஆதரவாக இருந்த 18 எம்.எல்.ஏக்கள் ஆளுநரை சந்தித்து முதல்வரை மாற்ற வேண்டும் என மனு அளித்தனர்.

    இதனை அடுத்து, அதிமுக சட்டமன்ற கொறடா கோரிக்கையின் பெயரில் 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

    இதையடுத்து, பெரும்பான்மையில் அதிமுக அரசு ஆட்டம் கண்டது மட்டுமல்லாமல், சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது பெரும் தலைவழியாக அமைந்தது. வழக்கு விசாரணை கடந்த ஜனவரி மாதம் முடிந்தாலும், தீர்ப்பு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.



    இந்த வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். 18 எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்கம் செல்லும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பு வழங்கினார். ஆனால், நீதியரசர் சுந்தரோ, சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது தவறு என்றும், தகுதிநீக்கம் செல்லாது என்றும் தனது தீர்ப்பை அறிவித்தார்.

    மாறுபட்ட தீர்ப்பு காரணமாக இந்த வழக்கை 3-வது நீதிபதி விசாரித்து இறுதி தீர்ப்பு அளிப்பார் என அறிவிக்கப்பட்டது. மூன்றாவது நீதிபதி யார் என்பதை, மூத்த நீதிபதி குலுவாடி ரமேஷ் தேர்வு செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, இந்த வழக்கை வாபஸ் பெற்று விடுவதாகவும், அந்தந்த தொகுதிகளில் இடைத்தேர்தலை அறிவிக்குமாறும், 18 எம்.எல்.ஏக்களில் ஒருவரான தங்கத்தமிழ்ச்செல்வன் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், இதர எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்யவும் அறிவுறுத்தினார்.

    இந்நிலையில், 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதியாக, மூத்த நீதிபதி விமலா நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #MLAdisqualifiedcase #TNassembly
    ×