search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்எல்ஏ உள்பட 11 பேர் பலி"

    அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் என்பிபி கட்சி எம்.எல்.ஏ.வான திரோங் அபோ உள்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    இடாநகர்:

    அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தின் தேசிய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வந்தவர் திரோங் அபோ.

    இந்நிலையில், மேற்கு கோன்சா பகுதியில் உள்ள திரப் மாவட்டத்தில் இன்று பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் என்.பி.பி. கட்சி எம்.எல்.ஏ.வான திரோங் அபோ உள்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த தாக்குதல் சம்பவத்துக்கு மேகாலயா மாநில முதல் மந்திரி கன்ராட் சங்மா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

    அருணாசலப்பிரதேசத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றதில்லை. எம்.எல்.ஏ மீதான தாக்குதல் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என மாநில உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார். 

    அருணாசலப்பிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மேற்கு கோன்சா பகுதியில் போட்டியிட்டவர் திரோங் அபோ என்பதும், 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
    ஒப்போ நிறுவனம் தனது எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போனின் அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷனை அறிமுகம் செய்தது. #OPPO



    ஒப்போ நிறுவனம் எஃப்11 ப்ரோ மார்வெல் அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனினை மலேசியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன் புளு நிறத்தில் கிளாஸி ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் கிரேடியன்ட் எஃபெக்ட்கள் மற்றும் அவெஞ்சர்ஸ் லோகோ உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது.



    ஸ்மார்ட்போனின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கேப்டன் அமெரிக்காவை தழுவிய கேஸ் ஒன்றும் வழங்கப்படுகிறது. இந்த கேஸ் கேப்டன் அமெரிக்காவின் ஷீல்டு போன்ற உருவம் கொண்டிருக்கிறது. இதனை போனின் ஹோல்டர் போன்று  பயன்படுத்திக் கொள்ளலாம். 

    இத்துடன் மார்வெல் அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷன் பெட்டியில் அவெஞ்சர்ஸ் சின்னம், ஸ்டேம்ப்டு பேட்ஜ் மற்றும் சிறப்பு பரிசு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.



    சிறப்பம்சங்களை பொருத்தவரை ஒப்போ எஃப்11 ப்ரோ மாடலில் 6.5 இன்ச் FHD+  பானரோமிக் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். பிராசஸர், 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஓ.எஸ். 6.0, இயங்குதளம், 48 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    ஒப்போ எஃப்11 ப்ரோ மார்வெல் அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷன் 128 ஜி.பி. மாடல் விலை 1399 மலேசியன் ரிங்கிட் (இந்திய மதிப்பில் ரூ.23,665) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
    ஒப்போ நிறுவனத்தின் எஃப்11 ப்ரோ அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #OPPO



    ஒப்போ நிறுவனம் தனது எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போனினை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. தற்சமயம் ஒப்போ தனது எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போனின் அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனினை ஏப்ரல் 24 ஆம் தேதி மலேசியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.

    புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனில் புளு மற்றும் ரெட் நிற அவெஞ்சர்ஸ் லோகோ இடம்பெற்றிருக்கிறது. இதில் 128 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. ஒப்போ எஃப்11 ப்ரோ ஸ்டான்டர்டு எடிஷனில் 64 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டிருக்கிறது. புதிய அவெஞ்ர்ஸ் லோகோ தவிர புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.



    அந்த வகையில் ஒப்போ எஃப் 11 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் FHD பிளஸ் பானாரோமிக் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். பிராசஸர், 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஓ.எஸ். 6.0 வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, அல்ட்ரா நைட் மோட், டேசிள் கலர் மோட் மற்றும் 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. என்ஜின், அல்ட்ரா-க்ளியர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் 3D கிரேடியன்ட் பேக், தண்டர் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. புதிய ஒப்போ எஃப் 11 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4000 எம்.ஏ.ஹச். பேட்டரி மற்றும் VOOC ஃபிளாஷ் சார்ஜ் 3.0 வழங்கப்பட்டுள்ளது.
    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ 48 எம்.பி. பிரைமரி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. #OppoF11Pro #Smartphone



    ஒப்போ நிறுவனம் இந்தியாவில் மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. புதிய ஒப்போ ஸ்மார்ட்போன்கள் 2019 ஆண்டின் முதல் காலாண்டிற்குள் அறிமுகமாகும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், புதிய ஸ்மார்ட்போன்கள் ஒப்போ எஃப்11, எஃப்11 ப்ரோ மற்றும் ஆர்17 நியோ என அழைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

    புதிய ஸ்மார்ட்போன்களின் ஹார்டுவேர் அம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், ஒப்போ எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போனின் ரென்டர் வெளியாகியுள்ளது. அதில் ஸ்மார்ட்போனின் கேமரா பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது. புதிய ஒப்போ ஸ்மா்ட்போனின் ரென்டர்களை 91மொபைல்ஸ் வெளியிட்டிருக்கிறது.

    அதில் ஒப்போ எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஃபுல் ஸ்கிரீன், பெசல்-லெஸ் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. முன்புறம் செல்ஃபி கேமரா காணப்படவில்லை என்பதால் விவோ நெக்ஸ் போன்று ஒப்போ ஸ்மார்ட்போனிலும் பாப்-அப் ரக கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.


    புகைப்படம் நன்றி: 91Mobiles

    ஸ்மார்ட்போனின் பின்புறம் டூயல் கேமரா செட்டப் வழங்கப்பட்டிருக்கிறது. கேமரா சென்சார்களின் கீழ் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. புதிய ஒப்போ எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போனில் கிரேடியன்ட் கலர் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் புளு மற்றும் பர்ப்பிள் நிறங்களை தழுவியிருக்கிறது.

    ஒப்போ எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போனில் 48 எம்.பி். சிமாஸ் கேமரா வழங்கப்படுகிறது. இதேபோன்ற கேமரா ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனிலும் வழங்கப்பட்டிருக்கிறது. ஒப்போ தவிர விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போனிலும் 48 எம்.பி. கேமரா சென்சார் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 

    புதிய ஒப்போ எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போன் மீடியாடெக் சிப்செட், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
    இந்தியாவில் இணைய தள சேவை வேகத்தை அதிகரிக்க செய்யும் ஜி சாட்-11 செயற்கைக் கோள் 5-ந்தேதி விண்ணில் ஏவப்படுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. #GSAT11 #ISRO
    புதுடெல்லி:

    இந்தியாவில் இணைய தள சேவை வேகத்தை அதிகரிக்க செய்வதற்காக ஜி சாட்-11 எனும் அதி நவீன செயற்கைக் கோளை இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.

    கடந்த மே மாதமே இந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டனர். ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுவது ஒத்திவைக்கப்பட்டது.

    தற்போது ஜி சாட்-11 செயற்கைக்கோள் தயாரிப்பு பணி முழுமையாக நிறைவடைந்து விட்டது. இந்த செயற்கைக்கோள் 5854 கிலோ எடையில் மிக, மிக பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

    கடந்த மார்ச் மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட் 6ஏ செயற்கைக்கோள் இஸ்ரோவின் கட்டுப்பாட்டை இழந்து எங்கோ விலகி சென்று விட்டது. கடந்த மார்ச் 29-ந்தேதி அந்த செயற்கைக்கோள் தனது தொடர்பை முழுமையாக இழந்து விட்டது.

    எனவே இஸ்ரோ விஞ்ஞானிகள் ஜி சாட்-11 செயற்கைக்கோளில் கூடுதல் கவனம் செலுத்தி தயாரித்துள்ளனர்.



    ஜி சாட்-11 செயற்கைக் கோளை பிரெஞ்சு கயனாவில் இருந்து விண்ணில் செலுத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி நாளை மறுநாள் அதிகாலை 2.07 மணி முதல் 3.23 மணிக்குள் விண்ணில் செலுத்த உள்ளனர்.

    ஏரைன்-5 ராக்கெட் மூலம் ஜி சாட்-11 செயற்கைக்கோள் விண்ணில் பாய உள்ளது. ஜி சாட்-11 செயற்கை கோளில் 40 அதிநவீன டிரான்ஸ்பாண்டர்கள் இடம் பெற்றுள்ளன.

    இதனால் இணையத்தள வேகம் கூடுதலாக கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது. #GSAT11 #ISRO
    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 11-ம் தேதி தொடங்கப்படும் என பாராளுமன்ற விவகாரங்கள் துறை அறிவித்துள்ளது. #ParlimentWinterSession #CCPA
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டில் குளிர்கால கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிடவில்லை.

    சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா உள்பட ஐந்து மாநில தேர்தல் நடைபெற உள்ளதால் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பு தாமதமாகலாம் என எதிர்க்கட்சிகள் கருதி வந்தன.

    இந்நிலையில், பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 11-ம் தேதி முதல் தொடங்க உள்ளது என பாராளுமன்ற விவகாரங்கள் துறை இன்று அறிவித்துள்ளது. 

    இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், பாராளுமன்ற விவகாரங்கள் துறையின் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 11-ம் தேதி தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், குளிர்கால கூட்டத்தொடரை ஜனவரி 8-ம் தேதி வரை நடத்தவும் முடிவானது என தெரிவித்துள்ளது. #ParlimentWinterSession #CCPA
    ஜோர்டான் நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலியாகியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #JordanFloods
    அம்மான்:

    ஜோர்டான் நாட்டில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பெட்ரா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப் பெருக்கில் சிக்கி 10 பேர் பரிதாபமாக பலியாகினர். தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.



    ஜோர்டான் நாட்டின் பழமையான பாலைவன நகரமான பெட்ராவில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.

    தகவலறிந்து ஜோர்டான் நாட்டு ராணுவம் ஹெலிகாப்டர்களில் சென்று சுற்றுலா பயணிகளை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். #JordanFloods
    விவோ நிறுவனத்தின் வி11 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் அம்சங்கள் மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #VivoV11Pro



    விவோ வி11 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 6.41 இன்ச் FHD சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 1.76 மில்லிமீட்டர் மெல்லிய பெசல்கள், 91.27% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டுள்ளது.

    இத்துடன் ஸ்னாப்டிராகன் 660 AIE மற்றும் 6 ஜிபி ரேம், 12 எம்பி பிரைமரி கேமரா, F/1.8 அப்ரேச்சர், 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. சீன் டிடெக்ஷன், 25 எம்பி செல்ஃபி கேமரா, ஏ.ஐ. பியூட்டி அம்சம், ஐ.ஆர். ஃபேஸ் அன்லாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.



    விவோ வி11 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 6.41 இன்ச் 1080x2340 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED 19.5:9 டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 14nm பிராசஸர்
    - அட்ரினோ 512 GPU
    - 6 ஜிபி ரேம்
    - 64 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம்
    - ஃபன்டச் ஓ.எஸ். 4.5 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - 12 எம்பி டூயல் பிடி பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்இடி ஃபிளாஷ், f/1.8, 1/2.8 சென்சார், 1.28 μm 
    - 5 எம்பி இரண்டாவது கேமரா, f/2.4
    - 25 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3,400 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

    விவோ வி11 ப்ரோ ஸ்மார்ட்போன் ஸ்டேரி நைட் பிளாக் மற்றும் டேஸ்லிங் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ரூ.25,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள வி11 ப்ரோ விற்பனை அமேசான் வலைத்தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. விவோ வி11 ப்ரோ முன்பதிவு செப்டம்பர் 6-ம் தேதி துவங்கி, விற்பனை செப்டம்பர் 120ம் தேதி முதல் விற்பனை துவங்குகிறது.
    விவோ நிறுவனத்தின் புதிய வி11 ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Vivo


    விவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் வெளியீடு டீசர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. விவோ வி9 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக உருவாகி இருக்கும் வி11 ப்ரோ புதிய ஸ்மார்ட்போன் செப்டம்பர் 6-ம் தேதி அறிமுகமாகிறது.



    விவோ வெளியிட்டிருக்கும் புதிய டீசரின் படி ஸ்மார்ட்போனில் டிஸ்ப்ளே நாட்ச், ஃபுல் வியூ மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. இதனுடன் டீசர் படத்தில் #UnlockTheAmazing ஹேஷ்டேக் இடம்பெற்றிருக்கிறது.

    ஏற்கனவே வெளியான தகவல்களின் படி விவோ ஸ்மார்ட்போனில் 6.41 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 661 AIE சிப்செட், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 12 எம்பி + 5 எம்பி டூயல் பிரைமரி கேமராக்கள், 25 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம் என கூறப்பட்டு இருந்தது.



    சமீபத்தில் வெளியான புகைப்படம் ஒன்றில் புதிய விவோ ஸ்மார்ட்போனில் கிரேடியன்ட் பாடி கொண்டிருக்கும் என கூறப்பட்டது. முன்னதாக விவோ X23 ஸ்மார்ட்போனின் டீசரும் வெளியிடப்பட்டிருந்தது. இரு ஸ்மார்ட்போன்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வடிவமைப்பு மற்றும் பின்புறம் 3D அரோரா ஃபினிஷ் கொண்டிருக்கிறது.

    விவோ வி11 ப்ரோ ஸ்மார்ட்போனின் இதர விவரங்கள் வரும் வாரங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #UnlockTheAmazing
    ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள பரா மாகாணத்தில் இன்று சாலையோர குண்டுவெடித்ததில் பேருந்தில் சென்ற 11 பேர் உயிரிழந்தனர். 30 பேர் படுகாயமடைந்தனர். #Roadsidebomb #Afghanbomb
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹேரட் மாகாணத்தில் இருந்து அந்நாட்டின் தலைநகரான காபுல் நோக்கி இன்று ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது.

    நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ஃப்ரா மாகாணம், பலா பலுக் மாவட்டத்தின் வழியாக வந்தபோது தலிபான் பயங்கரவாதிகள் சாலையோரத்தில் புதைத்து வைத்திருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு திடீரென்று வெடித்து சிதறியது.



    இந்த தாக்குதலில் பேருந்தில் வந்த 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சுமார் 30 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

    ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிக்கும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கா தலைமையிலான ‘நேட்டோ’ படைகள் கடந்த 2014-ம் ஆண்டு அங்கிருந்து வெளியேறிய பின்னர் தலிபான்கள் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் நாட்டின் பல பகுதிகளில் தலைவிரித்தாடுகிறது.

    இந்த ஆண்டில் இதுவரை நடைபெற்ற பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 1692 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை கண்காணிப்பகம் கவலை தெரிவித்துள்ளது. #Roadsidebomb #Afghanbomb 
    ×