search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்ஜினீயரிங் கல்லூரி மாணவி"

    காதலரையும் தன்னையும் கொன்றுவிடுவதாக மிரட்டும் குடும்பத்தாரிடம் இருந்து தங்களை பாதுகாக்க வேண்டும் என வாட்ஸ்அப் மூலம் கல்லூரி மாணவி அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Whatsapp
    நாகர்கோவில்:

    குமரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் எழுதிய கடிதமும், அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதபடி பேசும் காட்சிகள் அடங்கிய வீடியோவும் இன்று வாட்ஸ்-அப்பில் பரவியது.

    அந்த வீடியோவில் பேசும் மாணவி, நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருவதாக கூறுகிறார். அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் காதல் மலர்ந்தது.

    இது மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. அவர்கள் மாணவியை எச்சரித்தனர். ஆனால் மாணவி காதலை கைவிட மறுத்தார். இதனால் பெற்றோர் அவரை வீட்டிலேயே சிறை வைத்து விட்டனர்.

    வீட்டில் சிறை வைத்ததால் வீட்டை விட்டு வெளியே வர முடியாததால் இந்த வீடியோவை வாட்ஸ்-அப்பில் வெளியிடுவதாகவும், இதை பார்ப்பவர்கள் தங்களுக்கு உதவும்படியும் மாணவி கண்ணீர் விடுகிறார். என்னை வீட்டில் சிறை வைத்த பெற்றோர் என் காதலன் மீது நான் போலீசில் புகார் செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்துகிறார்கள். காதலன் மீது புகார் கொடுக்காவிட்டால் அவரை கொன்று விடுவதாகவும் மிரட்டுகிறார்கள்.

    இந்த ஜனநாயக நாட்டில் காதலிக்க உரிமை இல்லையா? காதலித்தால் கொலை செய்யப்பட வேண்டுமா? என்றும் மாணவி கேள்வி எழுப்பி உள்ளார். இந்த வாட்ஸ்-அப் வீடியோ இன்று காலை முதல் தான் முக்கிய பிரமுகர்களின் செல்போனில் பரவ தொடங்கியது.

    மின்னல் வேகத்தில் இந்த செய்தி பலரது செல்போனிலும் பரவியதை தொடர்ந்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் வாட்ஸ்-அப்பில் வெளியான வீடியோ குறித்து விசாரணையில் இறங்கி உள்ளனர். அதில் கூறப்பட்ட விலாசத்தில் அத்தகைய சம்பவம் நடந்து உள்ளதா? மாணவி சிறை வைக்கப்பட்டிருக்கிறாரா? என்பது பற்றியும் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். #Whatsapp
    நீட் தேர்வு காரணமாக மருத்துவ கனவு கலைந்ததால் என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கோயம்பேடு:

    சேலையூர், மகாலட்சுமி நகர், புறநானூறு தெருவை சேர்ந்தவர் எட்வர்ட். தாம்பரம் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார்.

    இவரது மகள் ஏஞ்சலின் சுருதி (வயது 19). செம்மஞ்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று காலை அவர் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே தனது அறையில் இருந்தார். நீண்ட நேரம் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை உடைத்து சென்றனர்.

    அப்போது அங்குள்ள படுக்கை அறையில் ஏஞ்சலின் சுருதி உயிருக்கு போராடியபடி கிடந்தார். அவரது தலையில் பாலித்தீன் கவர் மாட்டப்பட்டு, செல்போன் வயர் கட்டப்பட்டு இருந்தது. அவர் தற்கொலைக்கு முயன்று இருப்பது தெரிந்தது.

    இதனை கண்டு பதறிய பெற்றோர் ஏஞ்சலின் சுருதியை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஏஞ்சலின் சுருதி பரிதாபமாக இறந்தார். இதனை கண்டு பெற்றோர் கதறி துடித்தனர்.

    இது குறித்து சேலையூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ‘நீட்’ தேர்வு எழுதியும் மருத்துவ சீட் கிடைக்காததால் ஏஞ்சலின் சுருதி தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.

    ஏஞ்சலின் சுருதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த ‘நீட்’ தேர்வில் பங்கேற்றார். இதில் அவர் குறைவான மதிப்பெண் எடுத்ததாக தெரிகிறது. இதனால் அவருக்கு மருத்துவ சீட் கிடைக்கவில்லை. எனினும் மீண்டும் நீட் தேர்வு எழுதி மருத்துவம் படிக்க ஏஞ்சலின் சுருதி ஆசையாக இருந்தார்.

    ஆனால் அவரை என்ஜினீயரிங் படிப்பில் சேர பெற்றோர் வற்புறுத்தி செம்மஞ்சேரியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்த்தனர்.

    மருத்துவ படிப்பில் நாட்டம் இருந்த ஏஞ்சலின் சுருதிக்கு என்ஜினீயரிங் படிக்க ஆசையில்லை. இதனால் அவர் அடிக்கடி கல்லூரிக்கு செல்லாமல் இருந்தார்.

    மேலும் மருத்துவ படிப்பு குறித்து அவர் அடிக்கடி உடன்படிக்கும் மாணவிகள் மற்றும் பெற்றோரிடம் கூறி வந்தார். அவரை அவர்கள் சமாதானப்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் மனவேதனையில் இருந்த ஏஞ்சலின் சுருதி முகத்தில் பாலித்தீன் கவரை கட்டி தற்கொலை செய்து உள்ளார்.

    அவரது தற்கொலை முடிவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    நீட் தேர்வால் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்காததால் அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா ஏற்கனவே தற்கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. நீட் தேர்வுக்கு எதிராக அரசியல் தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள்.

    இதற்கிடையே நீட் தேர்வால் தற்போது ஏஞ்சலின் சுருதியும் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×