search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என் டி ஆர்"

    • பிரபல நடிகரும் ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியுமான என்.டி.ராமாராவின் நூற்றாண்டு விழா விஜயவாடாவில் நடைபெற்றது.
    • இதில் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    பிரபல நடிகரும் ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியுமான என்.டி.ராமாராவின் நூற்றாண்டு விழா விஜயவாடாவில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆந்திரா முன்னாள் முதல்-மந்த்ரி சந்திரபாபு நாயுடு, நடிகர்கள் பாலகிருஷ்ணா, ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




    விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், இவ்வளவு பெரிய விழாவில் கலந்து கொண்டு தெலுங்கு பேசி நீண்ட நாட்களாகி விட்டது. நான் ஏதாவது தவறாக பேசினால் மன்னித்துவிடுங்கள். எதை சொல்ல வேண்டும், எப்படி சொல்ல வேண்டும் என்பதை ஞானம் சொல்கிறது. ஆனால் எவ்வளவு நேரம் பேச வேண்டும் என்று அவை சொல்கிறது. எதைச் சொல்லக் கூடாது என்பதை அனுபவம் சொல்கிறது.



    உங்களையெல்லாம் இப்படிப் பார்த்தா எனக்கு அரசியல் பேசணும்னு தோணுது. ஆனால், வேண்டாம் ரஜினி... என்று அனுபவம் தடுக்கிறது. நான் பார்த்த முதல் படம் என்டிஆர் நடித்த பாதாள பைரவி. அந்த படம் என் மனதில் நீங்கா இடம் பிடித்து உள்ளது. எனது முதல் படத்திலேயே இது பைரவி வீடுதானா என்ற டயலாக் வரும். நான் துணை நடிகராகவும், வில்லனாகவும் நடித்துக் கொண்டிருந்த நாட்களில் ஒரு இயக்குனர் என்னை ஹீரோவாக வைத்து படம் எடுப்பதாக கூறினார்.


     



    ஆனால், அப்போது கதாநாயகனாக நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. கதையை ஒரு முறை கேளுங்கள் என்று அந்த இயக்குனர். மேலும் படத்தின் பெயர் பைரவி என்று கூறினார். அந்தப் பெயரை கேட்டதுமே படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். லவகுசா படத்தின் வெற்றிக்காக என்.டி.ஆர் சென்னை வந்தபோது தூரத்தில் இருந்து அவரை பார்த்தேன். அப்போது எனக்கு 13 வயது. நடிகர் பாலகிருஷ்ணா கண்களாலே பார்த்து கொன்று விடுகிறார். அவர் காரை எட்டி உதைத்தால் 30 அடி தூரம் செல்லும்.



    அதனால் நான், ஷாருக்கான், அமிதாப் பச்சன், சல்மான் கான் என யார் செய்தாலும் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதேநேரம் பாலகிருஷ்ணா செய்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஏனென்றால் பாலகிருஷ்ணாவை, என்டிஆராகவே மக்கள் பார்க்கின்றனர். அவருக்கு கோபம் அதிகம். ஆனால் இலகிய மனம் கொண்டவர். அவர் திரை உலகிலும், அரசியல் வாழ்விலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.



    எனது நெருங்கிய நண்பரும், அரசியல் தலைவருமான சந்திரபாபு நாயுடு இருக்கும் போது, அரசியல் பற்றி பேசாமல் இருப்பது சரியல்ல. எனக்கு அவரை 30 வருடங்களாக தெரியும். சந்திரபாபு நாயுடுவை எனது நண்பர் மோகன்பாபு அறிமுகப்படுத்தினார். அப்போது சந்திரபாபு விரைவில் பெரிய தலைவராக வருவார் என்றும் மோகன் பாபு என்னிடம் அடிக்கடி கூறுவார். 24 மணி நேரமும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உள்ளது. அவருக்கு இந்திய அரசியல் மட்டுமின்றி உலக அரசியலும் தெரியும்.



    ஐதராபாத்தை ஹைடெக் நகரமாக சந்திரபாபு உருவாக்கினார். ஐ.டி. என்றால் என்ன என்று கூட தெரியாத காலத்திலேயே அவர் ஐ.டி.யை ஐதராபாத்திற்கு கொண்டு வந்தார். தற்போது லட்சக்கணக்கானோர் ஐ.டி துறையில் பணியாற்றி வருகின்றனர். தொழிலதிபர்கள் பில் கேட்ஸ் உள்ளிட்டவர்கள் சந்திரபாபுவை பாராட்டினர். 22 அண்டுகளுக்கு பிறகு நான் ஐதராபாத்தை சுற்றிப் பார்த்தேன். நான் ஐதராபாத்தில் இருக்கிறேனா அல்லது நியூயார்க்கில் இருக்கிறேனா என்று தோன்றியது. சந்திர பாபுவின் 2047 தொலைக்கு திட்டம் செயல்படுத்தப்பட்டால், நாட்டிலேயே ஆந்திரா முதன்மை மாநிலமாக மாறும். ஆந்திராவின் நிலை எங்கேயோ போய்விடும் என்று கூறினார்.

    • என்.டி.ராமாராவின் நூற்றாண்டு விழா ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள பொரங்கி எனும் பகுதில் இன்று நடைபெற்று வருகிறது.
    • இந்த விழாவில் ரஜினி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நாயகனாகவும், திரையுலகில் சாதனையாளராகவும் இருந்தவர் என்.டி.ராமாராவ். இவர் தமிழக முதல்- அமைச்சர்களாக இருந்த எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோருக்கும் நெருங்கிய நண்பராக இருந்தவர். இவருடைய நூற்றாண்டு விழாவைப் பிரமாண்டமாகக் கொண்டாடத்திட்டமிட்டு இதற்கான ஏற்பாடுகளை அவரது மகன் நடிகர் பால கிருஷ்ணா செய்து வந்தார்.



    300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள என்.டி.ஆர். மூன்று முறை தேசிய விருதுகளைப் பெற்றதோடு, தயாரிப்பாளராகவும் சினிமா இயக்குனராகவும் புகழ் பெற்று விளங்கினார். 1982-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சி என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த என்.டி.ஆர்., 1983 முதல் 1989 வரையிலும் பின்னர் 1994 முதல் 1995 வரையிலும் ஒருங்கிணைந்த ஆந்திர மாநில முதல்-மந்திரியாக செயல்பட்டார். 1984 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலின் போது முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக என்.டி.ஆர். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.




    சில தினங்களுக்கு முன்பு என்.டி.ராமாராவின் நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள இருப்பதாக பாலகிருஷ்ணா அறிவித்திருந்தார். இந்நிலையில் என்.டி.ராமாராவின் நூற்றாண்டு விழா ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள பொரங்கி எனும் பகுதில் இன்று நடைபெற்றது.




    இந்த விழாவில் சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் ரஜினிகாந்த், என்.டி.ராமாராவ் மருமகனும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திர பாபு நாயுடு மற்றும் நடிகரும் என்.டி.ராமாராவின் மகனுமாகிய பாலகிருஷ்ணா உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர். மேலும் நடிகர் ரஜினிகாந்த் என்.டி.ஆர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • என்.டி.ராமாராவ் தமிழக முதலமைச்சர்களாக இருந்த எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோருக்கும் நெருங்கிய நண்பராக இருந்தவர்.
    • 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள என்.டி.ஆர். மூன்று முறை தேசிய விருதுகளைப் பெற்றதோடு, தயாரிப்பாளராகவும் சினிமா இயக்குனராகவும் புகழ் பெற்று விளங்கினார்.

    தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நாயகனாகவும், திரையுலகில் சாதனையாளராகவும் இருந்தவர் என்.டி.ராமாராவ். இவர் தமிழக முதல்- அமைச்சர்களாக இருந்த எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோருக்கும் நெருங்கிய நண்பராக இருந்தவர். இவருடைய நூற்றாண்டு விழாவைப் பிரமாண்டமாகக் கொண்டாடத்திட்டமிட்டுள்ள னர். இதற்கான ஏற்பாடுகளை அவரது மகன் நடிகர் பால கிருஷ்ணா செய்து வருகிறார்.

    300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள என்.டி.ஆர். மூன்று முறை தேசிய விருதுகளைப் பெற்றதோடு, தயாரிப்பாளராகவும் சினிமா இயக்குனராகவும் புகழ் பெற்று விளங்கினார். 1982-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சி என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த என்.டி.ஆர்., 1983 முதல் 1989 வரையிலும் பின்னர் 1994 முதல் 1995 வரையிலும் ஒருங்கிணைந்த ஆந்திர மாநில முதல்-மந்திரியாக செயல்பட்டார். 1984 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலின் போது முன்னாள் முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக என்.டி.ஆர். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

    என்.டி.ஆரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள இருக்கிறார். இது பற்றி பாலகிருஷ்ணா வெளியிட்டிருக்கும் வீடியோவில் கூறியிருப்பதாவது, வரும் 28-ந் தேதியன்று விஜயவாடாவில் மறைந்த என்.டி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வார். ஆந்திராவின் முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோருடன், நானும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

    என்.டி.ஆரின் கலை மற்றும் அரசி யலுக்கான பங்களிப்பைப் போற்றும் வகையில், அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    • என்.டி.ராமராவால் என்.டி.ஆர் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
    • இதற்கு ஒய். எஸ். ஆரின் பெயரை சூட்டியுள்ளார் ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி

    1986- ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும் முன்னாள் முதலமைச்சருமான என்.டி.ராமராவால் என்.டி.ஆர் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. இதற்கு தனது தந்தையான மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் பெயரை சூட்டியுள்ளார் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி. மேலும், எம்.பி.பி.எஸ்., மருத்துவரான அவரது தந்தை அம்மாநில முதல்வராக இருந்து சுகாதாரம் தொடர்பான திட்டங்களைத் தொடங்கி, 3 புதிய மருத்துவக் கல்லூரிகளை அம்மாநிலத்தில் நிறுவியவர் என்று கூறி அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.


    ஜூனியர் என்.டி.ஆர்

    இதற்கு ஜூனியர் என்.டி.ஆர். சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "என்.டி.ஆர் மற்றும் ஒய்.எஸ்.ஆர். இருவரும் மிகவும் பிரபலமான தலைவர்கள். ஒருவரின் பெயரை எடுத்துக்கொண்டு மற்றொருவரின் பெயரைச் சூட்டிக்கொண்டு வரும் இதுபோன்ற மரியாதை ஒய்.எஸ்.ஆரின் அளவை உயர்த்தாது, அது என்டிஆரின் அளவைக் குறைக்காது. பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றுவதன் மூலம், என்டிஆர் சம்பாதித்த புகழையும், தெலுங்கு தேச வரலாற்றில் அவரது அந்தஸ்தையும், தெலுங்கு மக்களின் இதயங்களில் அவரது நினைவையும் அழிக்க முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.


    ஜெகன் மோகன் ரெட்டி

    இதற்கு பதிலளிக்கும் விதமாக ஜெகன் மோகன் ரெட்டி, "ஆரோக்யஸ்ரீ மற்றும் 104 மற்றும் 108 ஆம்புலன்ஸ் சேவைகள் போன்ற திட்டங்கள் மூலம் பொது சுகாதாரத்திற்காக தனது தந்தை என்ன செய்துள்ளார் என்பதற்கு இது ஒரு அங்கீகாரம் என்றும், என்டிஆரை சிறுமைப்படுத்தும் நோக்கம் இல்லை என்றும்" அவர் கூறியுள்ளார்.

    ×