search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எந்திரங்கள் பழுது"

    புதுவையில் 10 வாக்குச்சாவடிகளில் எந்திரங்களில் ஏற்பட்ட பழுதால் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது. #Loksabhaelections2019

    புதுச்சேரி, ஏப். 18-

    புதுவை பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. ஒருசில வாககுச்சாவடிகளில் கட்சி களின் பூத் ஏஜெண்டுகள் கால தாமதமாக வந்ததால் அந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்க கால தாமதமானது.

    அதுபோல் சில வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதானதால் வாக்குப்பதிவு தொடங்க தாமதம் ஏற்பட்டது.

    புதுவை மி‌ஷன் வீதியில் உள்ள எக்கோலாங்கிளாஸ் பள்ளி வாக்குச்சாவடி, திரு.வி.க. பள்ளி வாக்குச் சாவடி, முத்தியால் பேட்டை ராஜா பள்ளி வாக்குச்சாவடி, பாகூர் அரசு பள்ளி வாக்குச்சாவடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் இந்த நிலை உருவானது.

    வாக்குச்சாவடி அதிகாரிகள் எந்திர கோளாறை சரிசெய்ய முயன்றும் இயலாததால் மாற்று எந்திரங்கள் வர வழைக்கப்பட்டு அதன் பிறகு வாக்குப்பதிவு தொடங்கியது.

    இதனால் இந்த வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்க சுமார் 45 நிமிடம் கால தாமதமானது. *** புதுச்சேரி, ஏப். 18-

    புதுவையில் இன்று காலை 7.15 மணிக்கு கவர்னர் கிரண்பேடி ராஜ் நிவாசில் இருந்து வாக்களிப்பதற்காக புதுவை சுகாதாரத்துறை அலுவலகத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்தார்.

    அவர் பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக் களித்தார். அவருடன் கவர்னர் மாளிகை ஊழியர் களும் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

    இதனை வரிசையில் நின்றிருந்த வாக்காளர்கள் ஆச்சரியத்துடன் பார்த்த னர். வாக்களித்த பின்னர் கவர்னர் கிரண்பேடி நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    வாக்களிப்பது நமது கடைமை. இந்திய ஜன நாயகம் மிகவும் வலிமை யானது. தேர்தல் ஆணையம் பலகோடி ரூபாய் செலவு செய்து தேர்தலை நடத்து கிறது. இதனை நாம் வீணாக்க கூடாது.

    பொதுமக்கள் அனை வரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். வாக்களித்ததோடு நின்றுவிடாமல், ஆட்சி யாளர்கள் என்ன செய் கிறார்கள்? என்பதையும் கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    முன்னதாக கவர்னர் கிரண்பேடி வரிசையில் நிற்கையில், நிருபர்கள் அவரை புகைப்படம் எடுத்து கொண்டிருந்தனர். அப்போது கிரண்பேடி தான் மூத்த குடிமகனாக இருந்தாலும் வரிசையில் நின்று வாக்களிப்பதையே விரும்புகிறேன். புதுவையில் முதல் முறையாக வாக்

    ×