என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "எட்வின் சி ஆல்ட்ரின்"
- அமெரிக்க அப்பல்லோ விண்கலத்தில் பைலட்டாக பணிபுரிந்தவர் ஆல்ட்ரின்.
- கோ பைலட்டாக சென்றவர் தான் நீல் ஆம்ஸ்ட்ராங்.
"ஆல்ட்ரின்... இவரைப் பற்றித் தெரியுமா?"
என அந்த கல்லூரி ஆசிரியர் மாணவர்களிடம் கேட்டார்.
"தெரியாது சார்!"
"நீல் ஆம்ஸ்ட்ராங் தெரியுமா?"
"ஓ தெரியுமே, நிலாவில் முதல் காலடியை வைத்தவர்" என்றனர் கோரஸாக.
"நிலவில் முதலடியை எடுத்து வைத்திருக்க வேண்டியவர் இந்த ஆல்ட்ரின் தான்" என்று பேச்சைத் தொடங்கினார் அந்த ஆசிரியர்.
அமெரிக்க அப்பல்லோ விண்கலத்தில் பைலட்டாக பணிபுரிந்தவர் ஆல்ட்ரின். இவருக்கு கோ பைலட்டாக சென்றவர் தான் நீல் ஆம்ஸ்ட்ராங். அந்த விண்கலம் நிலவில் இறங்கியதும், சற்று நேரத்தில் நாசாவில் இருந்து,
"பைலட் ஃபர்ஸ்ட்!" என்று கட்டளை வந்தது.
ஆனால் ஆல்ட்ரினுக்கோ மனதில் ஒரு சின்ன தயக்கம். இடது காலை எடுத்து வைப்பதா, அல்லது வலது காலை எடுத்து வைப்பதா என்றல்ல. நிலவில் கால் பதிக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது. புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துக்கொண்டு போய்விட்டால்... என்பது போன்ற சில நொடிகளே ஆன... ஏதோ ஒருவித தயக்கத்தை ஏற்படுத்தினார்.
அதற்குள் நாசாவிலிருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டு விட்டது.
"கோ பைலட் நெக்ஸ்ட்!"
கட்டளை வந்த அடுத்த நொடியே நீல் ஆம்ஸ்ட்ராங் ஈகிள் என்ற அந்த கலத்திலிருந்து இறங்க ஆரம்பித்து விட்டார். கடைசி படியிலிருந்து தனது இடது காலை நிலவின் தரையில் அழுத்தமாக ஊன்றினார்.
அந்த முதல் காலடி அறிவியல் சரித்திரத்தில் அழியாத இடம் பெற்று விட்டது.
தகுதியும் திறமையும் இருந்தும் கூட தயக்கத்தின் தாமதத்தால் ஆல்ட்ரினை யாருக்கும் தெரியாமல் போய்விட்டது.
உலகில் எல்லா மனிதர்களும் வெற்றியை நோக்கித்தான் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். முதலில் வந்து வெற்றிப் படிகளில் நிற்பவர்களைத் தான் இந்த உலகம் என்றும் நினைவில் வைத்திருக்கும்.
'தயக்கமற்ற பேரார்வம் இன்றி எந்தப் பெரிய சாதனையையும் செய்ய முடியாது.'
- பரதன் வெங்கட்
- நாம் எல்லோருமே மிகப்பெரும் சாதனைகளை படைக்கிற வல்லமை உடையவர்கள்தான்.
- நம்முடைய தயக்கம், பயம், கூச்சம் இவைதான் நம் முதல் எதிரி. அவற்றை உடைத்தெறிந்தால்…. சாதனைகள் சாத்தியமே!
நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் யார்?
இந்தக் கேள்விக்கு யாராயிருந்தாலும் உடனே பதில் சொல்லிவிடுவீர்கள், நீல்ஆம்ஸ்ட்ராங் என்று.
நிலவில் முதன் முதலில் கால் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா?
பல பேருக்குத் தெரியாது…. அவர்- எட்வின் சி ஆல்ட்ரின். அவர்தான் நிலவுக்குச் சென்ற அப்பல்லோ விண்கலத்தின் பைலட். அதாவது விமானி.
ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர். மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் பைலட்டாக நியமிக்கப்பட்டார்.
நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலைபார்த்தவர். மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்தப் பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கோ-பைலட் அதாவது இணை விமானி.
இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து பைலட் பர்ஸ்ட் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம்.
"நிலவில் முதன் முதலில் கால் எடுத்து வைக்கிறோம். புவியீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம். கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது. புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால், எரி மணலாக இருந்து காலை சுட்டுவிட்டால்"…… தயக்கத்தில் சில நொடிகள்தான் தாமதித்திருப்பார்…….
அதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது. கோ பைலட் நீல் ஆம்ஸ்ட்ராங் நெக்ஸ்ட்…. கட்டளை வந்த அடுத்த நொடியே ஆம்ஸ்ட்ராங் காலடி எடுத்துவைத்தார்.
உலக வரலாறு- ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது. திறமையும் தகுதியும் இருந்தும்கூட தயக்கத்தின் காரணமாக தாமதித்ததால் இன்று ஆல்ட்ரினை யாருக்கும் தெரியவில்லை.
முதலாவது வருபவரைத்தான் இந்த உலகம் நினைவில் வைத்திருக்கும் என்பது மட்டுமல்ல. தயக்கம், பயம் இவை எந்த அளவுக்கு நம் வெற்றியைப் பாதிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்.
இனி நிலவைப் பார்க்கும்போதெல்லாம் இந்தச் சம்பவத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு நிமிட தயக்கம் கூட நம்முடைய மிகப்பெரிய வெற்றிகளைத் தடுத்துவிடுகிறது.
நாம் எல்லோருமே மிகப்பெரும் சாதனைகளை படைக்கிற வல்லமை உடையவர்கள்தான். நம்முடைய தயக்கம், பயம், கூச்சம் இவைதான் நம் முதல் எதிரி. அவற்றை உடைத்தெறிந்தால்…. சாதனைகள் சாத்தியமே!
-டாக்டர் ராமானுஜன்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்