search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்பேஸ் கோ 3"

    மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய சர்பேஸ் கோ 3 லேப்டாப் மாடல்கள் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.


    மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய சர்பேஸ் கோ 3 மாடலை அறிமுகம் செய்தது. இந்த மாடலில் 10.25 இன்ச் பிக்சல் சென்ஸ் டிஸ்ப்ளே, அட்ஜஸ்ட் செய்யக்கூடிய கிக்ஸ்டாண்டு, 10-ம் தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் அதிகபட்சம் 8 ஜிபி ரேம், சர்பேஸ் பென் வசதி, விண்டோஸ் 11 ஓ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது.

    544 கிராம் எடை கொண்டிருக்கும் புதிய சர்பேஸ் கோ 3 8.3 எம்.எம். அளவில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் இன்டெல் யு.ஹெச்.டி. கிராபிக்ஸ் 615, 4 ஜிபி அல்லது 8 ஜிபி ரேம், 64 ஜிபி இ.எம்.எம்.சி அல்லது 128 ஜிபி எஸ்.எஸ்.டி., வைபை 6 மற்றும் ப்ளூடூத் 5 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

     மைக்ரோசாப்ட் சர்பேஸ் கோ 3

    இந்தியாவில் புதிய சர்பேஸ் கோ 3 4 ஜிபி ரேம், 64 ஜிபி இ.எம்.எம்.சி. ஸ்டோரேஜ் மாடல் விலை ரூ. 42,999 என துவங்குகிறது. இன்டெல் கோர் ஐ3, 8 ஜிபி ரேம், 128 ஜிபி எஸ்.எஸ்.டி. கொண்ட மாடலின் விலை ரூ. 62,999 ஆகும். இதன் விற்பனை அமேசான் வலைதளத்தில் நவம்பர் 23 ஆம் தேதி துவங்குகிறது. தற்போது இதற்கான முன்பதிவு துவங்கி இருக்கிறது.
    ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, சாக்‌ஷி அகர்வால் நடிப்பில் வெளியான அரண்மனை 3 திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
    சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘அரண்மனை 3’. இப்படத்தில் ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, சாக்‌ஷி அகர்வால், விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தார்கள். உதயநிதி தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் வெளியிட்டு இருந்தார்.

    அரண்மனை 3
    சுந்தர்.சி - ராஷி கண்ணா

    இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வசூலிலும் சாதனை புரிந்தது. இந்நிலையில், இப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நவம்பர் 12ம் தேதி வெளியாக இருக்கிறது. ஏற்கனவே ஜீ5 ஓடிடி தளத்தில் ‘மலேஷியா டு அம்னீஷியா’, ‘டிக்கிலோனா’, ‘விநோதய சித்தம்’ ஆகிய படங்கள் வெளியாகி இருக்கிறது.
    ஒப்போ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



    ஒப்போ நிறுவனம் தனது புதிய மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் நாட்ச் AMOLED டிஸ்ப்ளே, புதிய தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம்ஸ கேம்பூஸ்ட் 2.0, ஆண்ட்ராய்டு பை மற்றும் கலர் ஓ.எஸ். 6.0 வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 16 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 3D கிரேடியண்ட் பேக் மற்றும் எஸ் வடிவம் கொண்டிருக்கும் ஒப்போ கே3 ஸ்மார்ட்போன் 3765 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் VOOC ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.



    ஒப்போ கே3 சிறப்பம்சங்கள்

    - 6.5 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 AMOLED டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர்
    - அட்ரினோ 616 GPU
    - 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி
    - டூயல் சிம்
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஓ.எஸ். 6.0
    - 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 3765 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்

    ஒப்போ கே3 ஸ்மார்ட்போன் நெபுளா பர்ப்பிள், கிரீன் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 1599 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.16,105) என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 1899 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.19,130) என்றும் டாப்-எண்ட் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 2299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.23,160) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் ஜூன் மாதம் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகம் சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
     
    கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 3-ம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளி திறந்த முதல் நாள் அன்றே விலையில்லா பாடநூல்கள் மற்றும் இதர பொருட்களை வழங்க வேண்டும்.

    இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.
    பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கு பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பிரபல காமெடி நடிகை ஜாங்கிரி மதுமிதா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
    கமல்ஹாசனின் புரோமோ வீடீயோ வெளியானது முதலே பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் போட்டியாளர் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இந்த நிலையில், பிக்பாஸ் மூன்றாவது சீசனில் ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் செல்லும் முதல் போட்டியாளரை உறுதி செய்திருக்கிறார்கள்.

    அந்தப் போட்டியாளர் `ஓ.கே. ஓ.கே.’ படத்தில் நடிகர் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்த காமெடி நடிகை `ஜாங்கிரி’ மதுமிதா. சின்னத் திரையில் `சின்ன பாப்பா பெரிய பாப்பா’வில் காமெடி செய்தவர். சில மாதங்களுக்கு முன்பு உதவி இயக்குனர் மோசஸ் ஜோயலைத் திருமணம் செய்துகொண்டார்.



    `மணமாகி கொஞ்ச நாளிலேயே கணவரை மூன்று மாதங்கள் பிரிந்து எப்படி பிக் பாஸ் வீட்டுக்கு’ என்றால், ``அவங்களுக்கு சவால்னா ரொம்ப பிடிச்ச வி‌ஷயம். இந்த வாய்ப்பை ஒரு சவாலா எடுத்து பண்ணணும்னு நினைக்கிறாங்க. தவிர, இந்த வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்கறதில்லையே! பொதுவாகவே வர்ற வாய்ப்புகளைத் தவற விடக்கூடாதுன்னு நினைக்கிறவங்க அவங்க’’ என்கின்றனர் மதுமிதாவுக்கு நெருக்கமானவர்கள்.
    கூகுள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போன் தான் அதற்கு சரியானதாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.



    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. இவை கூகுளின் விலை குறைந்த பிக்சல் ஸ்மார்ட்போன்களாக இருக்கின்றன. 

    புதிய பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போன்களில் பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் அவற்றை சரி செய்வது கடந்த ஆண்டு அறிமுகமான பிக்சல் 3 சீரிஸ் மாடல்களை விட எளிய காரியமாகவே இருக்கும் என விமர்சகர்கள் (iFixit) தெரிவித்துள்ளனர். iFixit விமர்சகர்கள் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL மாடல்களுக்கு சரி செய்யக்கூடிய வசதிகள் நிறைந்த விஷயத்திற்கு 6/10 புள்ளிகளை வழங்கியிருக்கின்றனர். 



    2019 விலை குறைந்த பிக்சல் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டு இருக்கும் உபகரணங்கள் அதிநவீனமாக இருப்பதால், இவற்றை எளிதில் சரி செய்திட முடியும் என தெரிவித்திருக்கின்றனர். புதிய பிக்சல் 3ஏ சீரிஸ் மாடல்களில் டிஸ்ப்ளே மட்டுமே கடினமாக பொருத்தப்பட்டு இருக்கிறது.

    மேலும் சோதனையின் போது புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களில் வழக்கமான வைப்ரேட்டர் மோட்டார் வழங்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களிலும் பேட்டரியை மாற்றுவது எளிமையான காரியமாகவே இருக்கிறது.

    பிளாஸ்டிக் வடிவமைப்பு கொண்டிருக்கும் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்களின் விலை முறையே ரூ.39,999 மற்றும் ரூ.44,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் ஹெட்போன் ஜாக் வழங்கப்பட்டு வயர்லெஸ் சார்ஜிங் வசதி நீக்கப்பட்டுள்ளது.
    கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யப்பட்டது. #Google



    கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இரு ஸ்மார்ட்போன்களிலும் முறையே 5.5 இன்ச் மற்றும் 6.0 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் OLED டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இத்தடன் இவை ஸ்னாப்டிராகன் 670 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், டைட்டன் எம் செக்யூரிட்டி சிப், 12.2. எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS), டூயல் பிக்சல் ஆட்டோஃபோகஸ், 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இரு கேமராக்களிலும் ஏ.ஐ. சார்ந்த கேமரா அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

    கூகுளின் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம், பிக்சலின் டூ-டோன் வடிவமைப்பு, பாலிகார்பனைட் பாடி, ஆக்டிவ் எட்ஜ் ஸ்குவீஸ் ரெஸ்பான்ஸ், பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கின்றன. 

    இத்துடன் இவை முறையே 3000 எம்.ஏ.ஹெச். மற்றும் 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றன. பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்ய 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளன.



    கூகுள் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL சிறப்பம்சங்கள்:

    - பிக்சல் 3ஏ: 5.6 இன்ச் 1080x2220 பிக்சல் FHD+ OLED 18.5:9 டிஸ்ப்ளே, 441 PPI, HDR
    - டிராகன்டிரெயில் கிளாஸ் பாதுகாப்பு
    - பிக்சல் 3ஏ XL: 6.0 இன்ச் 2160x1080 பிக்சல் FHD+ OLED 18:9 டிஸ்ப்ளே, 400 PPI, HDR
    - டிராகன்டிரெயில் கிளாஸ் பாதுகாப்பு
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 670 10 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 615 GPU
    - 4 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. மெமரி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை
    - 12.2 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1.4μm, ƒ/1.8,  76° FOV, OIS, EIS
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 84° FOV,  1.12μm
    - கைரேகை சென்சார்
    - ஆக்டிவ் எட்ஜ்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5 LE
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    இந்தியாவில் புதிய பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போனின் விலை ரூ.39,999 என்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போனின் விலை ரூ.44,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூகுள் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு ப்ளிப்கார்ட் தளத்தில் இன்று (மே 8) காலை 10.00 மணிக்கு துவங்கி இவற்றின் விற்பனை மே 15 ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. 

    புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களில் ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் இசிம் தொழில்நுட்பம் கொண்டிருக்கின்றன. இத்துடன் ஸ்மார்ட்போன்களுடன் மூன்று மாதங்களுக்கான யூடியூப் மியூசிக் பிரீமியம் சந்தா வழங்கப்படுகிறது.
    லாரன்ஸ் நடித்து இயக்கிய ‘காஞ்சனா 3’ திரைப்படம் பத்து நாட்களில் பல கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். #Kanchana3
    ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘காஞ்சனா 3’. இதில் `முனி' படத்தில் லாரன்ஸ் ஜோடியாக நடித்த வேதிகா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஓவியா நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் நிகிதா, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, கபீர் சிங், சூரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

    இப்படம் ஏப்ரம் 19ம் தேதி வெளியானது. திகில் கலந்து வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. 



    இந்த படம் உலகம் முழுவதும் வசூலை அள்ளி குவித்துக் கொண்டிருக்கிறது. 10 நாட்களில் உலகம் முழுவதும் 130 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள். 
    கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போனின் புதிய புகைப்படம் லீக் ஆகியுள்ளது. #Google



    கூகுள் நிறுவனத்தின் பிகசல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போனின் விவரங்கள் கடந்த சில மாதங்களாக இணையத்தில் லீக் ஆகி வருகின்றன. இவற்றில் ஸ்மார்ட்போனின் ரென்டர்களிலேயே இதன் தோற்றம் பற்றிய விவரங்கள் வெளியாகின. 

    இதைத் தொடர்ந்து கூகுள் நிறுவனமும் புதிய ஸ்மார்ட்போன் மே 7 ஆம் தேதி அறிமுகமாகலாம் என்ற வாக்கில் புதிய டீசர்களை வெளியிட்டது. இந்நிலையில், பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போனின் பர்ப்பிள் நிற வேரியண்ட் அதிகாரப்பூர்வ ரென்டர் புகைப்படங்கள் ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.

    ட்விட்டரில் வெளியாகியிருக்கும் புதிய புகைப்படஙகளில் பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் பர்ப்பிள் மற்றும் வெள்ளை நிறம் கொண்டிருக்கிறது. பின்புறம் கீழ்பக்கம் ஜி லோகோ போனின் மற்ற பகுதிகளை விட அதிக தெளிவாக காட்சியளிக்கிறது. இதன் கீழ் இருக்கும் பகுதிகளில் மஞ்சள் நிறம் பூசப்பட்டுள்ளது.



    வழக்கமாக கூகுள் தனது ஸ்மார்ட்போன்களுக்கு நாட் பின்க் மற்றும் கின்டா புளு என வித்தியாச நிறங்களின் பெயர்களை சூட்டி வருகிறது. அந்த வரிசையில் புதிய ஸ்மார்ட்போன்களின் பெயர்களும் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். முன்னதாக வெளியான தகவல்களில் ஒரு வேரியண்ட் ஐரிஸ் என அழைக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது.

    இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்களில் பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போனில் 5.6 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 670 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 12.2 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படும் என்றும் இதில் 2915 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என தெரிகிறது.
    பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் சீரிஸ் 3 கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படம் வெளியாகியுள்ளது. #BMW



    சொகுசு கார்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் பி.எம்.டபுள்யூ. நிறுவனம் நீளமான சக்கர பகுதிகளைக் கொண்ட புதிய ரக மாடலை வரும் மாதங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற சர்வதேச மோட்டார் கண்காட்சியில் இந்த கார் காட்சிப்படுத்தப்பட்டது. 

    இந்நிலையில், இந்த கார் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கும் புதிய பி.எம்.டபுள்யூ. காரில் L வடிவம் கொண்ட எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் 3டி டெயில்-லேம்ப்கள், தடிமனான பம்ப்பர் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது.

    சமீபத்தில் இந்நிறுவனம் 3 சீரிஸ் வரிசையில் 7-வது தலைமுறை கார்களை அறிமுகப்படுத்தியது. அவற்றில் சீன சந்தையைக் குறிவைத்து தற்போது இப்புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் சக்கரங்கள் வழக்கமான அளவை விட 41 மி.மீ. அதிகமாகும். அதாவது சக்கரங்கள் 2,851 மி.மீ. சுற்றளவு கொண்டது. இந்தக் காரின் நீளம் 4,719 மி.மீ., அகலம் 1,827 மி.மீ., உயரம் 1,459 மி.மீ. ஆகும். 



    இதில் நான்கு சிலிண்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் உள்ளது. இதன் நீளம் அதிகமாக உள்ளதால் முன் சீட்டுக்கும் பின் சீட்டுக்கும் இடையில் அதிக இடைவெளி தரப்பட்டுள்ளது. இதனால் சவுகரியமாக பயணிக்க முடியும். வான் அழகை ரசிக்க கண்ணாடியால் ஆன மேற்கூரை (சன்-ரூஃப்) வழங்கப்பட்டுள்ளது.

    இதில் பி.எம்.டபுள்யூ.வின் பர்சனல் அசிஸ்டென்ட் சிஸ்டம் உள்ளது. இதில் பல டிஜிட்டல் சேவைகள் உள்ளன. குரல் வழி கட்டுப்பாட்டு வசதியும் இதில் உள்ளது. இந்தியாவில் சமீபத்தில்தான் பி.எம்.டபுள்யூ. 6 சீரிஸ் கிரான்ட் டுரிஸ்மோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இப்புதிய மாடல் ஓரிரு மாதங்களுக்குப் பிறகு இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்தியாவில் மே 16 ஆம் தேதி இந்நிறுவனம் பி.எம்.டபுள்யூ. எக்ஸ் 5 மாடலை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதைத் தொடர்ந்தே 3 சீரிஸ் மாடல் அறிமுகம் இருக்கும் என்று தெரிகிறது.

    புகைப்படம் நன்றி: Indianautosblog
    சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. #Xiaomi



    சியோமி நிறுவனம் இந்தியாவில் ரெட்மி வை3 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.

    ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் சார்ந்த MIUI 10 கொண்டிருக்கும் ரெட்மி வை3 மாடலில் புகைப்படம் எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் செல்ஃபி எடுக்க 32 எம்.பி. கேமரா, 4-இன்-1 பிக்சல் பின்னிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

    கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டிருக்கும் ரெட்மி வை3 மாடலின் பின்புறம் ரிஃப்ளெக்டிவ் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் P2i நானோ கோட்டிங் கொண்ட வாட்டர் ப்ரூஃப் வசதி வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ரெட்மி வை3 மாடலில் டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.



    சியோமி ரெட்மி வை3 சிறப்பம்சங்கள்:

    - 6.26 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 632 14 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 506 GPU
    - 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
    - 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1.12um பிக்சல், f/2.2, PDAF
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 32 எம்.பி. செல்ஃபி கேமரா, 1/2.8″
    - கைரேகை சென்சார், இன்ஃபாரரெட் சென்சார்
    - ஸ்பிளாஷ் ரெசிஸ்டண்ட்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சியோமி ரெட்மி வை3 ஸ்மார்ட்போன் எலிகன்ட் புளு, போல்டு ரெட் மற்றும் பிரைம் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜி.பி. ரேம் விலை ரூ.9,999 என்றும் 4 ஜி.பி. ரேம் விலை ரூ.11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் வலைதளம் மற்றும் Mi ஹோம் ஸ்டோர்களில் விற்பனை ஏப்ரல் 30 ஆம் தேதி துவங்குகிறது.
    லாரன்ஸ் இயக்கி நடித்திருக்கும் காஞ்சனா 3 படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், லாரன்ஸ் தனது ரசிகர்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். #Kanchana3 #RaghavaLawrence
    ராகவா லாரன்ஸ் இயக்கி, அவரே நடித்திருக்கும் காஞ்சனா 3 படம் வெள்ளிக்கிழமை வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. ரசிகர்களிடையே படத்திற்கு வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், படம் வெற்றி பெற ரசிகர் ஒருவர் கிரேன் மூலமாக தூக்கு காவடி எடுத்து வந்து லாரன்ஸின் கட்அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது.

    இந்த வீடியோவை பார்த்த பலரும், ரசிகர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாத வண்ணம் அவர்களுக்கு அறிவுரை வழங்கும்படி கேட்டு வந்தனர்.

    இந்த வீடியோவை பார்த்த லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது,


    ரசிகர் ஒருவர் இதுபோன்று கிரேன் மூலமாக எனது கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் வீடியோவை பார்த்து மிகவும் வருத்தமடைகிறேன். எனது ரசிகர்கள் அனைவரிடமும் நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால், இனிமேல் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடாதீர்கள். உங்களது அன்பை வெளிப்படுத்த உங்களது வாழ்க்கையை பணயம் வைக்கும் இது போன்ற செயல்கள் தேவையில்லை. உங்களுக்காக ஒரு குடும்பம் இருக்கிறது. இதுபோன்று செய்வதற்கு முன்பாக அவர்களை பற்றி சிந்தியுங்கள்.

    ஒருவேளை என் ரசிகராக உங்களது அன்பை வெளிப்படுத்த விரும்பினால், கல்வி கற்க கஷ்டப்படும் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள், தேவையான குழந்தைகளுக்கு புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள். மூத்தோர் பலர் இங்கு உணவின்றி தவிக்கிறார்கள். அவர்களுக்கு உணவளியுங்கள். அதுவே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தரும். 

    எனவே இதுபோன்ற ஆபத்தான செயல்களை மறுபடி செய்ய வேண்டாம் என்பதே எனது கோரிக்கை. உங்கள் வாழ்க்கையே முக்கியம். இவ்வாறு கூறியிருக்கிறார். #Kanchana3 #RaghavaLawrence

    ×