search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழியர்கள் தாக்குதல்"

    • காரைக்குடி அருகே சிகரெட் நிறுவன ஊழியர்களை தாக்கி ரூ. 11 லட்சம் பறித்த கொள்ளையர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • பல்வேறு இடங்களுக்கு சென்று சிகரெட் விற்பனை செய்த பணத்தை வசூல் செய்து கொண்டு மாலை புதுவயலில் இருந்து காரைக்குடி நோக்கி வந்தனர்.

    காரைக்குடி

    காரைக்குடி செக்காலை சாலையில் சிகரெட் மொத்த விற்பனை செய்யும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு காரைக்குடி காந்திபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 30), மாதவன் நகரைச் சேர்ந்த தமிழரசன் (27) ஆகியோர் ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று விக்னேஷ் காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சிகரெட் வினியோகம் செய்யவும், ஏற்கனவே வினியோகம் செய்யப்பட்ட கடைகளில் பணம் வசூல் செய்வதற்காகவும் வேனில் புறப்பட்டார். வேனை தமிழரசன் என்பவர் ஓட்டிச்சென்றார்.

    அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று சிகரெட் விற்பனை செய்த பணத்தை வசூல் செய்து கொண்டு மாலை புதுவயலில் இருந்து காரைக்குடி நோக்கி வந்தனர். கோட்டையூர் அருகே வந்தபோது காரில் வந்த 5 பேர் கும்பல் இவர்கள் சென்ற வேனை வழிமறித்து டிரைவர் தமிழரசனை தாக்கியது. மேலும் விக்னேஷை அரிவாளால் வெட்டி அவர் வைத்திருந்த ரூ. 11 லட்சத்தை பறித்துக் கொண்டு காரில் தப்பிச் சென்று விட்டனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் காரைக்குடி டி.எஸ்.பி. வினோஜி தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்த விக்னேஷ், தமிழரசன் ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து பள்ளத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த கொள்ளையில் சம்பந்தப்பட்ட குற்ற வாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து அதில் பதிவாகி இருந்த நபர்களை தேடி வந்தனர்.

    3 பேர் கைது

    இதில் இந்த கொள்ளை யில் ஈடுபட்டவர்கள் கரூர் வேலாயுதபாளையத்தைச் சேர்ந்த முனீஸ்வரன் (25), கிஷோர்குமார் (22), காரைக்குடியைச் சேர்ந்த அன்வர்சலாம் (24) உள்பட 9 பேர் என்று தெரியவந்தது. இதில் தனிப்படை போலீ சார் முனீஸ்வரன், கிஷோர் குமார், அன்வர்சலாம் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் இதில் சம்பந்தப்பட்ட 6 பேரை தேடி வருகின்றனர். கைதான அன்வர்சலாம் அதே சிகரெட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த முன்னாள் ஊழியர் ஆவார்.

    • டாஸ்மாக் கடைக்கு வந்த சில வாலிபர்கள் பணம் கொடுக்காமல் மதுபாட்டில் கேட்டுள்ளனர்.
    • டாஸ்மாக் ஊழியர்கள் தர மறுத்ததால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பொன்னகரத்தை சேர்ந்தவர் சங்கர்ராஜ் (வயது47). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.

    அங்கு விற்பனையாளராக ரமேஷ் (47) என்பவர் உள்ளார். நேற்று மாலை டாஸ்மாக் கடைக்கு வந்த சில வாலிபர்கள் பணம் கொடுக்காமல் மதுபாட்டில் கேட்டுள்ளனர்.

    டாஸ்மாக் ஊழியர்கள் தர மறுத்ததால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வாலிபர்கள் பணம் கொடுக்காமல் கடையில் இருந்த மதுபாட்டிலை எடுத்து உடைத்து தகராறு செய்தனர்.

    மேலும் பீர்பாட்டிலை உடைத்து சங்கர்ராஜ் மற்றும் ரமேசை தாக்கினர். பின்னர் கடையில் இருந்த விற்பனை பணம் ரூ. 80 ஆயிரத்தை எடுத்து சென்றனர்.

    இது தொடர்பான புகாரின் பேரில் தென்பாகம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மூக்கன், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது ஊழியர்களை தாக்கி கொள்ளையில் ஈடுபட்டது தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த மூர்த்தி (23), சரவணன் (21), லோகியாபுரத்தை சேர்ந்த பிரபாகரன் (21) மற்றும் அப்பகுதியை சேர்ந்த ஒரு சிறுவன் என்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து சிறுவன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட மூர்த்தி மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் 6 வழக்குகளும், பிரபாகரன் மீது ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

    ×