search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழியர்கள் கைது"

    • ரூ.300 ஆன்லைன் டிக்கெட் மூலம் தரிசனத்திற்கு வந்த பக்தர்களை தேவஸ்தான ஊழியர்கள் சோதனை செய்தனர்.
    • திருப்பதியில் நேற்று தரிசனத்திற்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் வைகாசன வாராந்திர மேல் வஸ்திர சேவை மற்றும் அபிஷேக சேவைகள் சிறப்பு வாய்ந்தவை.

    இந்த சேவைகளில் கலந்து கொள்ளும் பக்தர்கள் வாழ்க்கை பாக்கியமாக கருதப்படுகிறது.

    அதனால் இந்த சேவையை பெறுவதற்கு பக்தர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

    ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டம் ஜி.கொண்டூரை சேர்ந்த விஜயகுமார் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் மேல் வஸ்திர சேவையில் கலந்து கொள்ள வேண்டும் என விரும்பினார்.

    தனது நண்பர்களிடம் மேல் வசீக சேவையில் கலந்து கொள்ள டிக்கெட் கேட்டு வந்தனர்.

    அப்போது திருப்பதியை சேர்ந்த லலித் குமார் என்பவர் விஜயகுமாரை செல்போனில் தொடர்பு கொண்டார்.

    வாராந்திர சேவையில் பங்கேற்பதற்கான டிக்கெட்டுகளை பெற்று தருவதாகவும் ஆன்லைன் மூலம் ரூ.1.04 லட்சம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார். லலித் குமார் அனுப்பிய வங்கி கணக்கிற்கு விஜயகுமார் பணத்தை அனுப்பி வைத்தார்.

    கடந்த வெள்ளிக்கிழமை விஜயகுமார் மற்றும் அவரது நண்பர்கள் திருப்பதிக்கு வந்தனர். அப்போது தரிசன டிக்கெட் பெறுவதற்காக விஜயகுமார், லலித்குமாரின் செல்போனை தொடர்பு கொண்டார். லலித் குமாரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இதனால் தான் ஏமாற்றப்பட்டதை தெரிந்து கொண்ட விஜயகுமார் இதுகுறித்து திருமலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் ரூ.300 ஆன்லைன் டிக்கெட் மூலம் தரிசனத்திற்கு வந்த பக்தர்களை தேவஸ்தான ஊழியர்கள் சோதனை செய்தனர்.

    சோதனையின்போது 5 பக்தர்கள் ரூ.300 போலி தரிசன டிக்கெட் மூலம் தரிசனத்திற்கு வந்தது தெரிய வந்தது. தேவஸ்தான அதிகாரிகள் போலி தரிசன டிக்கெட் கொண்டு வந்த பக்தர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது தேவஸ்தான ஒப்பந்த ஊழியர்கள் போலி தரிசன டிக்கெட் கொடுத்தது தெரிய வந்தது. போலீசார் ஒப்பந்த ஊழியர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று தரிசனத்திற்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. இதனால் சுமார் 15 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர். திருப்பதியில் நேற்று 76,254 பேர் தரிசனம் செய்தனர். 28,091 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினார். ரூ.4.90 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • மதுரையில் லிப்ட் கம்பெனியில் திருடிய 2 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • ரூ.1 லட்சம் மற்றும் 1 கிலோ வெள்ளி கட்டி ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பினர்.

    மதுரை

    சிவகங்கை மாவட்டம் கீழடி காமராஜர்புரத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் (31). இவர் சிந்தாமணி விநாயகர் தெருவில் லிப்ட் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு மர்ம நபர்கள் இந்த நிறுவனத்தின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கல்லாவில் இருந்த ரூ.1 லட்சம் மற்றும் 1 கிலோ வெள்ளி கட்டி ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பினர்.

    இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில் தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    அவர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். லிப்ட் நிறுவ னத்தில் வேலை பார்த்த அனைத்து ஊழியர்க ளிடமும் கைரேகை தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இந்த அலுவலகத்தில் வேலை பார்த்த 2 பேர் திடீரென்று தலைமறைவாகி விட்டனர். போலீசார் சந்தேகத்தின் பேரில் இருவரையும் சுற்றி பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர்களிடம் இருந்து ரூ.33 ஆயிரம் மற்றும் வெள்ளி கட்டி ஆகியவை கைப்பற்றப்பட்டது. அவர்கள் மேல அனுப்பா னடி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த ஆறுமுகம் மகன் ஜனா (20), பாஸ்கரன் மகன் நந்தகுமார் (20) என்பது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து கீரைத்துறை போலீசார் லிப்ட் நிறுவன ஊழியர்கள் இருவரையும் கைது செய்தனர்.

    • மதுரையில் அனுமதியின்றி பேரணி சென்ற அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • தமிழக அரசு ஊழியர்களுக்கு உரிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இந்த பேரணி நடந்தது.

    மதுரை

    தமிழக அரசு ஊழியர்களுக்கு உரிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் அரசு ஊழியர்கள் பங்கேற்கும் பேரணி நேற்று முதல் நாளை (17-ந் தேதி) வரை பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி மதுரை மாவட்டத்தில் கள்ளிக்குடி வட்டார கல்வி அலுவலகத்தில் நேற்று பேரணி நடந்தது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 2-வது நாளான இன்று திருப்பரங்குன்றம் உதவி கல்வி அலுவலகத்தில் பேரணி தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக 30-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டிருந்தனர். அங்கு வந்த போலீசார் பேரணிக்கு அனுமதி இல்லை. எனவே கலைந்து செல்லுங்கள் என்று கூறினர். ஆனால் அவர்கள் தொடர்ந்து பேரணியாக செல்ல முயன்றனர்.

    இதையடுத்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன், ஆசிரியர் சரவணன், டான்சாக் மனோகரன், மாரியப்பன், முருகன், ஆறுமுகம், மாரி, முனியசாமி உள்பட 30-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

    ×