search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊர்தி"

    • 60 அடி நீளம் உள்ள பேனா வாகனத்தில் கருணாநிதி எழுதிய புத்தகங்களின் முகப்பு பக்கங்கள் இடம் பெற்றுள்ளன.
    • பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டு கருணாநிதியின் சிறப்புகளை விளக்கும் குறும்படம் திரையிடப்பட்டது.

    பல்லடம்: 

    தமிழ்நாடு அரசு சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகழை இளைய தலைமுறையினர் அறிய செய்யும் வகையில் அமைக்கப்பட்ட பேனா ஊர்தி நேற்று பல்லடம் நகருக்கு வந்தது.

    கடந்த நவம்பர் 11-ல் கன்னியாகுமரியில் இந்த வாகனம் புறப்பட்டது. 60 அடி நீளம் உள்ள பேனா வாகனத்தில் கருணாநிதி எழுதிய புத்தகங்களின் முகப்பு பக்கங்கள் இடம் பெற்றுள்ளன. வாகனத்தின் உள்ளே கருணாநிதியின் சிலை இடம் பெற்றுள்ளது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, மதுரை, சிவகங்கை, கோவை மாவட்டங்கள் வழியாக தற்போது பல்லடம் நகருக்கு வந்தது. அந்த வாகனத்திற்கு பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர்.

    பின்னர் பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டு கருணாநிதியின் சிறப்புகளை விளக்கும் குறும்படம் திரையிடப்பட்டது. ஊர்தியின் உள்ளே கருணாநிதியின் கோபாலபுர இல்ல அமைப்பு, அஞ்சுகம் அம்மாளின் சிலை, அதன் அருகில் கருணாநிதி இருக்கையில் அமர்ந்திருப்பது போன்ற சிலை, அவர் பயன்படுத்திய நூலகத்தின் மாதிரி வடிவமைப்பு போன்றவை இடம்பெற்றுள்ளன.

    இந்த தேர் முன்பு மாணவ- மாணவிகள், பொதுமக்கள் பலர் நேரில் வந்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் அந்த வாகனம் திருப்பூருக்கு புறப்பட்டு சென்றது.

    • குமாரபாளையம் மின் மயானத்திற்கு வரும் அமரர் ஊர்தியிலிருந்து மயானத்திற்கு செல்லும் வழியில் தினசரி பலமுறை பூக்களை தூவி வருகின்றனர்.
    • அமரர் ஊர்தியில் மாலைகள் ஏற்றக்கூடாது. சாலையில் பூக்கள் வீசக்கூ டாது. அப்படி வீசினால் துக்க வீட்டினருக்கு அபரா தம் விதிக்கப்படும். அமரர் ஊர்தி ஓட்டுனர் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் மின் மயானத்திற்கு வரும் அமரர் ஊர்தியிலிருந்து மயானத்திற்கு செல்லும் வழியில் தினசரி பலமுறை பூக்களை தூவி வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 5 முறைக்கு மேல் மயானத்திற்கு செல்லும் வழியில் உள்ள சாலையில் பூக்கள் தூவுதல், பட்டாசுகள் வெடித்தல் ஆகியவை தொடர்ந்து நடந்து

    வருவதால், தெருக்களில் அசுத்தம் ஏற்படுகிறது.

    வழியில் உள்ள மக்களுக்கு அடிக்கடி சாலையை சுத்தம் செய்யவே சரியாக உள்ளது. இறந்தவர் உடல்மீது போடப்பட்ட மாலைகள் என்பதால், இதனால் நோய்கள் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்துக்கு புகார்கள் கொடுத்தனர். இதை தொடர்ந்து நகராட்சி தலைவர் விஜயகண்ணன் மயானத்திற்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் மயான ஊழியர்களிடம் கூறியதாவது:-

    அமரர் ஊர்தியில் மாலைகள் ஏற்றக்கூடாது. சாலையில் பூக்கள் வீசக்கூ டாது. அப்படி வீசினால் துக்க வீட்டினருக்கு அபரா தம் விதிக்கப்படும். அமரர் ஊர்தி ஓட்டுனர் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்.

    சடலம் எரியூட்ட வருவோரிடம் சாலைகளில் பூக்களை வீச மாட்டோம் என உறுதிமொழி படிவம் பெற்றுக்கொண்டு, எரியூட்ட பதிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். அப்போது நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    ×