search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்"

    • பல்வேறு திட்டப்பணிகள் குறித்து தேனி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் 33 கூட்டப்பொருள் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தேனி:

    தேனி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன் ஞானதிருப்பதி (கிராம ஊராட்சி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) சேதுபதி, ஒன்றிய கவுன்சிலர்கள் கிருஷ்ணசாமி, கந்தவேல், சங்கீதா, மாலா, தனலட்சுமி, கவிதா உட்பட ஒன்றிய அலுவலக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் 33 கூட்டப்பொருள் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் பேசுகையில், கிருஷ்ணசாமி தர்மாபுரி சுடுகாட்டு சாலை பகுதியை சரி செய்ய வேண்டும் என மனு கொடுத்துள்ளோம்.

    ஆனால் இதுவரை சர்வேயர் வந்து அளவீடு செய்து தரவில்லை. சர்வேயர் பணம் கொடுக்கும் பக்கம் தான் செல்கிறார். இதனால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதுபோல கவிதா என்பவர் காட்டுநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து கண்மாய் வரை வடிகால் அமைத்து தர வேண்டும் என்றும்,

    மாலா என்பவர் கோட்டூர் 3-வது வார்டு இந்திரா காலனி பகுதியில் சாக்கடை அமைத்து தர வேண்டும். 12-வதுவார்டு பகுதியில் ஆண்கள் கழிப்பிடம் அமைத்து தர வேண்டும் என்றும், சங்கீதா என்பவர் ஸ்ரீரெங்கம்புரம் பகுதியில் இருந்து தப்புக்குண்டு செல்லும் சாலையில் பயனற்று கிடக்கும் கிணற்றை மூட வேண்டும் என்றும், ஸ்ரீரெங்கபுரம் பள்ளியில் இடிந்து போன சமையல் கூடத்திற்கு புதிய சமையல் கட்டி தர வேண்டும். அதுபோல கவுன்சிலர்கள் அடிப்படை வளர்ச்சி திட்டப் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என பேசினார்கள்.

    ஒன்றிய குழு தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

    ×