search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊரப்பாக்கம் டிரைவர் கொலை"

    ஊரப்பாக்கம் அருகே தலையை துண்டித்து ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Murdercase

    செங்கல்பட்டு:

    கூடுவாஞ்சேரியை அடுத்த ஊரப்பாக்கம் அருகே உள்ள காரணை புதுச்சேரி ராஜீவ் காந்தி நகர் பகுதி சாலையில் இன்று அதிகாலை 30 வயது மதிக்கத்தக்க வாலிபரின் தலை மட்டும் துண்டாக கிடந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கூடுவாஞ்சேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து தலையை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இதில் கொலையுண்டது தாம்பரத்தை அடுத்த கடப்பேரியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கமல் என்கிற கமலக்கண்ணன் என்பது தெரிந்தது.

    அவரை மர்ம நபர்கள் கடத்தி கழுத்தை அறுத்து கொன்று இருப்பது தெரியவந்தது.அவரது உடல் எங்கு வீசப்பட்டது என்பது தெரியவில்லை. அதனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கொலை நடந்ததா? அல்லது பெண் தகராறு காரணமா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

    கொலை நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் வரை மோப்ப நாய் ஓடி நின்றுவிட்டது. எனவே அங்கிருந்து வாகனத்தில் கொலைக் கும்பல் தப்பி சென்று உள்ளனர். அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தலை துண்டித்து வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கூடுவாஞ்சேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×