search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊத்துமலை"

    • மாட்டு வியாபாரியான சேகர் என்பவர் 10 மாடுகளை விலைக்கு வாங்கி உள்ளார்.
    • சேகர் வழங்கிய காசோலையை முருகன் வங்கியில் செலுத்தி உள்ளார்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள அண்ணாமலைபுதூரை சேர்ந்த முருகன் (வயது40). விவசாயி. இவர் மாடுகள் வளர்த்து வருகிறார்.

    மாடு விற்பனை

    இவரிடம் சங்கரன் கோவிலை அடுத்த கோமதிபுரம் 1-வது தெருவை சேர்ந்த மாட்டு வியாபாரியான சேகர் என்பவர் 10 மாடுகளை விலைக்கு வாங்கி உள்ளார்.

    இதற்காக ரூ. 3 லட்சத்து 85 ஆயிரம் விலை பேசிமுடித்து முன்பணமாக ரூ. 45 ஆயிரத்தை சேகர் கொடுத்துள்ளார். மீதி பணத்திற்கு 5 காசோலைகள் மூலம் ரூ. 3 லட்சத்து 40 ஆயிரம் பணத்தை நிரப்பி கொடுத்துவிட்டு 10 மாட்டை வாங்கி சென்றுள்ளார்.

    மோசடி

    இந்நிலையில் சேகர் வழங்கிய காசோலையை முருகன் வங்கியில் செலுத்தி உள்ளார். ஆனால் அவரது வங்கி கணக்கு கடந்த ஆண்டே காலாவதியாகி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் ஊத்துமலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேகரை கைது செய்தனர். 

    • கருப்பசாமி அப்பகுதியில் அடிதடி, கொலை முயற்சி, கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.
    • கலெக்டர் ஆகாஷ், செல்வமுருகனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் வீ.கே.புதூர் வேதக்கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி. ( வயது 23). இவர் அப்பகுதியில் அடிதடி, கொலை முயற்சி, கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.

    கைது

    இதனையடுத்து இவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் அறிவுறுத்தியதன் பேரில், மாவட்ட கலெக்டர் ஆகாஷ், கருப்பசாமியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

    அதன்படி இன்ஸ்பெக்டர் சுதந்திர தேவி தலைமையிலான போலீசார் கருப்பசாமியை கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

    ஊத்துமலை

    இதேபோல் ஊத்துமலை பகுதியில் கடந்த மாதம் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வீராணம் காமாட்சி அம்மன் கோவில் தெருவை செல்வமுருகன் (30) என்பவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரைந்தார்.

    அதன்பேரில் கலெக்டர் ஆகாஷ், செல்வமுருகனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி இன்ஸ்பெக்டர் சுரேஷ் செல்வமுருகனை கைது செய்து சிறையில் அடைத்தார்.

    ×