search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலா வரும் கரடி"

    • கூண்டு வைத்து பிடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • அண்மை காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அண்மை காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    குறிப்பாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் கரடிகள் தேயிலை தோட்டங்கள் மற்றும் குடியிருப்புகள் அருகே சுற்றி திரிந்து வருகின்றன.

    அவ்வாறு உலா வரும் கரடிகள் குடியிருப்புகள் மற்றும் கடைகளை உடைத்து சேதம் செய்வது மட்டுமல்லாமல் பொது மக்களை தாக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வருகிறது.

    இந்த நிலையில் கோத்தகிரி அருகே உள்ள கேசலடா பகுதியில் நேற்று மாலை கரடி ஒன்று சுற்றி திரிந்தது.அந்த கரடி சாலையோரம் வைக்கப்பட்டுள்ள கழிவு பொருட்களை சாப்பிட்டது.

    இதனை அந்த வழியாக காரில் சென்ற நபர்கள் பார்த்து, கரடியை விரட்ட முயற்சித்தனர். ஆனால் கரடி செல்லாமல் அங்கேயே நின்று உணவு கழிவு பொருளை தின்றது.

    கடந்த சில நாட்களாக கோத்தகிரி மற்றும் அரவேனு, கேசலடா குடியிருப்பு பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் குடியிருப்பு வாசிகள் மற்றும் கடை வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர்.

    கரடியை கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கோத்தகிரி பகுதிகளில் கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.
    • குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளில் கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக உணவு, மற்றும் தண்ணீருக்காக குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்னர்.

    இந்த நிலையில் கோத்தகிரி அரவேனு பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் கரடி உலா வந்துள்ளது. கரடி வந்து செல்லும் காட்சி அங்குள்ள சி.சி.டி.வி காமிராவில் பதிவாகி இருந்தது. எனவே குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • கடந்த சில மாதங்களாக 3 கரடிகளின் நடமாட்டம் இருந்தது.
    • உயிலட்டி செல்லும் சாலையில் அந்த கரடி உலா வந்தது.

    ஊட்டி

    கோத்தகிரி அருகே உயிலட்டி, குன்னியட்டி பகுதியில் கடந்த சில மாதங்களாக 3 கரடிகளின் நடமாட்டம் இருந்தது. அங்கு வனத்துறையினர் வைத்த கூண்டில் 2 கரடிகள் சிக்கின. மற்றொரு கரடி தப்பி ஓடியது.

    மீண்டும் கூண்டு வைக்கப்பட்டாலும், அதில் சிக்காமல் குடியிருப்பு பகுதிகள், சாலைகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் ஆக்ரோஷத்துடன் உலா வருகிறது. சமீபத்தில் குன்னியட்டி கிராமத்தை சேர்ந்த தொழிலாளியை துரத்தியது.

    இந்த நிலையில் நேற்று மாலையில் உயிலட்டி செல்லும் சாலையில் அந்த கரடி உலா வந்தது. இதை கண்ட வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். சிறிது தூரம் சாலையின் நடுவே நடந்து சென்ற கரடி, அதன்பின்னர் அருகில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் சென்று மறைந்தது.

    இரவு, பகல் பாராமல் குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் கிராம மக்கள் மாலை 6 மணிக்கு மேல் வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கி விடுகின்றனர். மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும் முன்பு அந்த கரடியின் நடமட்டத்தை கண்காணித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கோத்தகிரி அருகே உள்ள இருப்புக்கல் கிராமத்தில்இரவு நேரத்தில் கரடி ஒன்று சாலையில் உலா வந்தது.
    • கரடி சாலை மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் இரவில் உலா வருவதால் அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் அச்சம் அடைந்துள்ளனர்.

    அரவேணு:

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் கரடிகள், அவ்வப்போது தேயிலைத் தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து விடுகின்றன.

    இந்நிலையில் கோத்தகிரி அருகே உள்ள இருப்புக்கல் கிராமத்தில்இரவு நேரத்தில் கரடி ஒன்று சாலையில் உலா வந்தது. அவ்வழியாகச் சென்ற வாகனத்துக்கு வழி விடாமல் சாலையிலேயே சுமார் 200 மீட்டர் தொலைவிற்கு ஓடிச் சென்று அருகிலிருந்த தேயிலைத் தோட்டத் திற்குள் புகுந்து மறைந்தது.

    கரடி சாலை மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் இரவில் உலா வருவதால் அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் அச்சம் அடைந்துள்ளதுடன், இரவு நேரங்களில் கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிர்த்து வருகின்றனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்திற்கு அருகில் கரடி ஒன்று பெண்ணை தாக்கி பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. தற்போது மீண்டும் அதே பகுதியில் கரடி உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே வனத்துறையினர் கரடியின் நடமாட்டத்தைக் கண்காணித்து, கரடியை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×