search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக மல்யுத்த போட்டி"

    • இந்திய வீராங்கனை அன்திம் 16-6 என்ற புள்ளி கணக்கில் ஸ்வீடன் வீராங்கனையை வீழ்த்தினார்.
    • பாரிசில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கும் அன்திம் தகுதி பெற்றார்.

    பெல்கிரேடு:

    உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி செர்பியா தலைநகர் பெல்கிரேடில் நடந்து வருகிறது. பெண்களுக்கான பிரீஸ்டைல் 53 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி இன்று நடைபெற்றது.

    இதில் 19 வயது இந்திய வீராங்கனை அன்திம் பன்ஹால், 2 முறை ஐரோப்பிய சாம்பியன் ஜோனா மால்கிரேன் (ஸ்வீடன்) எதிர்கொண்டார்.

    20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக சாம்பியன்ஷிப்பில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான அரியானாவை சேர்ந்த அன்திம் தொடக்கம் முதல் சிறப்பாக ஆடினார்.

    இறுதியில், 16-6 என்ற புள்ளி கணக்கில் வென்று வெண்கலப் பதக்கம் பெற்றார். மேலும், பாரிசில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார்.

    • 53 கிலோ எடைப் பிரிவில் ஸ்வீடன் வீராங்கனையை தோற்கடித்தார்.
    • உலக மல்யுத்த போட்டியில் இரண்டாவது முறையாக பதக்கம் வென்றார்.

    செர்பியா தலைநகர் பெல்கிரேடில் 17-வது உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 10-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் அரியானாவை சேர்ந்த வீராங்கனை வினேஷ் போகத் பங்கேற்றார்.

    பெண்களுக்கான 53 கிலோ உடல் எடைப்பிரிவின் தகுதி சுற்றில் மங்கோலியாவின் குலான் பட்குயாவிடம் 0-7 என்ற புள்ளி கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டார். பின்னர், ரெப்சேஜ் முறைப்படி அடுத்த சுற்று முன்னேறிய அவர், கஜகஸ்தான் வீராங்கனை எசிமோவாவை தோற்கடித்தார். பின்னர் அஜர்பைஜான் வீராங்கனை லேலா குர்பானோவா காயம் காரணமாக விலகியதால் வெண்கலப் பதக்கச் சுற்றுக்குள் வினேஷ் போகத் நுழைந்தார். 


    அந்த போட்டியில் ஸ்வீடன் வீராங்கனை எம்மா மால்ம்கிரெனை 8-0 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்து வினேஷ் போகத், வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் உலக மல்யுத்த போட்டிகளில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×