search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உரியவா்களிடம் ஒப்படைப்பு"

    • திருடப்பட்ட, காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்துத்தரக்கோரி காவல் நிலையங்களில் புகாா்கள் அளிக்கப்பட்டன.
    • சைபா் கிரைம் காவலா்களை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாநகரில் திருடப்பட்ட, காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்துத்தரக்கோரி காவல் நிலையங்களில் புகாா்கள் அளிக்கப்பட்டன. இந்தப் புகாா்களின்பேரில் சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் சொா்ணவள்ளி, உதவி ஆய்வாளா் சையத் ரபீக் சிக்கந்தா் மற்றும் காவலா்களை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படையினா் நவீனதொழில் நுட்பங்களுடன் தீவிர விசாரணை மேற்கொண்டனா். இதில், செல்போன்களை வாங்கி தற்போது பயன்படுத்தி வருபவா்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவா்களிடமிருந்து 108 செல்போன்கள் மீட்கப்பட்டன. திருப்பூா் மாநகர காவல் ஆணையா் எஸ்.பிரபாகன் உத்தரவின்பேரில் இந்த செல்போன்கள் உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த 108 செல்போன்களின் மதிப்பு ரூ.16.5 லட்சமாகும். காணாமல் போன செல்போன்களை மீட்ட சைபா் கிரைம் காவல் துறையினரை மாநகர காவல் ஆணையா் பாராட்டினாா். அப்போது மாநகர காவல் துணை ஆணையா் அபினவ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    ×