search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உர விலை"

    உர விலையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    பாடாலூர்:

    உர விலையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆலத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஆலத்தூர் வட்ட துணைத் தலைவர் தங்கராஜு தலைமை வகித்தார். வட்டத் தலைவர் அண்ணாதுரை, செயலாளர் பச்சையா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் செல்லதுரை, மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினர். 

    கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சக்திவேல், மாவட்ட துணைத் தலைவர்கள் கருப்புடையார் , விநாயகம் ,வட்டத் தலைவர் ஆறுமுகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டச் செயலாளர் ராஜாங்கம், மாவட்டத் குழு உறுப்பினர் முருகேசன், வட்டக் குழு உறுப்பினர் கிருஷ்ணசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங் கினர். ஆர்ப்பாட்டத்தில் உர விலையை குறைக்க வேண்டும், யூரியா எடை குறைப்பை கைவிட வேண்டும். 

    கூட்டுறவு சங்கத்தில் புதிய விவசாயக் கடன் வழங்க வேண்டும். இரூரில் பொதுப் பாதையை தனிநபர் பட்டா போட்டதை ரத்து செய்ய வேண்டும் . நீர்வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்பை எடுக்க வேண்டும், இரூர் காலணி தெருவில் தண்ணீர் தேங்காமல் கால்வாய் அமைக்க வேண்டும்.பெருமாள் பாளையம் ஏரியில் கிராவல் திருட்டை தடுக்க வேண்டும். பாடாலூரில் அவசர சிகிச்சைக்காக புதிய அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும், கிரஷர் லாரியை முறையான பாதையில் இயக்க வேண்டும் , என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்கம், மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    ×