search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயிர்சேதம்"

    • பள்ளிக்குளம் அருகே அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றியின் 2 அடித்தளமும் சேதமுற்று சாயும் அபாய நிலையில் உள்ளது.
    • குளத்தின் அருகில் மின்மாற்றி அமைந்துள்ளதால் அது சாயும் பட்சத்தில் உயிர்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி மணலி ஊராட்சி பருத்திச்சேரியில் மணலி ஊராட்சிக்கு சொந்தமான பள்ளிக்குளம்அருகே மின்மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. அம்மின்மாற்றியின்2 அடித்தளமும் சேதமுற்று சாயும் அபாய நிலையில் உள்ளது.

    இந்த பள்ளிக்குளம் இரண்டு படித்துரைகளை கொண்டிருப்பதால் பொதுமக்கள் எந்நேரமும் அக்குளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.குளத்தின் சில அடித்தூரத்தில் மின்மாற்றி அமைந்துள்ளதால் அது சாயும் பட்சத்தில் உயிர்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.எனவே உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×