search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உபரிநீர் வெளியேற்றம்"

    • வாயலூர், வல்லிபுரம் தடுப்பணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் கல்பாக்கம், உய்யாலிகுப்பம் முகத்துவாரம் வழியாக கடலில் கலந்து வருகிறது.
    • வாயலூர் பாலாற்றில் இருகரைகளிலும் நீர்வரத்து அதிகரிப்பால் தண்ணீர் நிரம்பியுள்ளதால் பாலாறு கடல் போல் காட்சியளிக்கிறது.

    கல்பாக்கம்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் பாலாற்றுக்கு நீர்வரத்து அதிகரித்து கல்பாக்கம் அடுத்த வல்லிபுரம் மற்றும் வாயலூர் தடுப்பணையில் 4 அடி உயரத்துக்கு தண்ணீர் நிரம்பி, உபரிநீர் வெளியேறுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    குறிப்பாக வாயலூர், வல்லிபுரம் தடுப்பணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் கல்பாக்கம், உய்யாலிகுப்பம் முகத்துவாரம் வழியாக கடலில் கலந்து வருகிறது. வல்லிபுரம் தடுப்பணையில் இருந்து உபரிநீர் வெளியேறினால், தடுப்பணைக்கு கீழே உள்ள கிராமங்களின் நூற்றுக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும். பாலாற்று நீர் வரத்து அதிகரித்துள்ளதால் வாயலூர், வல்லிபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களான இரும்புலிசேரி, நல்லாத்தூர், ஆயப்பாக்கம், கல்பாக்கம் போன்ற பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் அந்த பகுதி குடியிருப்புவாசிகளும் குடிநீர் தேவைக்கு பஞ்சம் ஏற்படாது என்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலும் வாயலூர், வல்லிபுரம் தடுப்பணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் வீணாக கடலில் கலந்து வருவதால் கூடுதலாக வாயலூர் கடற்கரை அருகில் இரண்டு, மூன்று இடங்களில் தடுப்பணைகள் கட்டி உபரி நீரை சேமிக்கவேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    தற்போது வாயலூர் பாலாற்றில் இருகரைகளிலும் நீர்வரத்து அதிகரிப்பால் தண்ணீர் நிரம்பியுள்ளதால் பாலாறு கடல் போல் காட்சியளிக்கிறது. ஒருபுறம் தடுப்பனைகளில் இருந்து வெளியேறும் உபரிநீர் பகுதியில் பொதுமக்களும், இளைஞர்களும் அருவிகளில் குளிப்பது போன்று குளித்து மகிழ்ச்சியடைகின்றனர். நீச்சல் தெரியாத சிறுவர்கள் பலர் ஆபத்தை உணராமல் இங்கு குளித்து வருவதையும் காண முடிகிறது.

    • கோதையாறு, குழித்துறை ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர்
    • திற்பரப்பு அருவியில் குளிக்க தடை நீடிப்பு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, மாம்பழத்துறை யாறு, முக்கடல் அணைகள் நிரம்பி வழிகின்றன. மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாசன குளங்கள் நிரம்பி உள்ளது. அதிகாரிகள் அணைகளின் நீர்மட்டத்தை கண்காணித்து வருகிறார்கள். ஏற்கனவே அணைகள் நிரம்பி வழிவதையடுத்து ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் பேச்சிப் பாறை அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து உபரிநீர் வெளி யேற்றப்படுவதால் கோதையாறு, குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப் பட்டு உள்ளனர். கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினமான இன்று அருவியில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தனர். அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்ததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.97 அடியாக உள்ளது. அணைக்கு 529 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 500 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாக வும், 509 கன அடி தண்ணீர் உபரி நீராகவும் வெளி யேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.55 அடியாக உள்ளது. அணைக்கு 358 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 230 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றாறு 1 அணையின் நீர்மட்டம் 15.45 அடியாகவும், சிற்றாறு 2 அணையின் நீர்மட்டம் 15.55 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை முழு கொள்ள ளவான 54.12 அடி நிரம்பி வழிகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டமும் கடந்த 10 நாட்களாக முழு கொள்ள ளவான 25 அடியை எட்டி நிரம்பி வழிகிறது. 42.65 கன அடி கொள்ளளவு கொண்ட பொய்கை அணையின் நீர்மட்டம் 8.30 அடியாக உள்ளது. மாவட்டம் முழுவதும் மற்ற அணைகள் அனைத் தும் நிரம்பி வழியும் நிலையில் 2 மாதமாக மழை பெய்த பிறகு பொய்கை அணை நீர்மட்டம் உயராத நிலையில் உள்ளது.

    • அணையின் பிரதான 3 மதகுகள் மற்றும் 3 சிறிய மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
    • தரைப்பாலத்தை மூழ்கடித்தப்படி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதே போல கர்நாடகாவிலும் பலத்த மழை பெய்து வருவதால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இன்று அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 209 கனஅடி நீர் வந்தது. அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 2 ஆயிரத்து 20 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

    அணையின் முழு கொள்ளளவு 44.28 அடி ஆகும். தற்போது அணையில் நீர் இருப்பு 42.64 அடியாக உள்ளது.

    அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், தாழ்வான பகுதிகளிலும், கரையோரத்திலும் மற்றும் அணையை சுற்றியுள்ள பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வருவாய்த்துறையினர் ஒலிபெருக்கி மூலம் அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கெலவரப்பள்ளி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றின் வழியாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு வரக்கூடிய நீரின் அளவும் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    இன்று காலை 6 மணி அளவில் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரத்து 735 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரத்து 549 கனஅடி வீதம் தண்ணீர்திறக்கப்பட்டது.

    இந்த நிலையில் நீர்மட்டம் 52 அடியை எட்டி அணை நிரம்பியது. இதையடுத்து அணையில் இருந்து வினாடிக்கு 7,549 கன அடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

    அணையின் பிரதான 3 மதகுகள் மற்றும் 3 சிறிய மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால், அணை பூங்காவிற்கு செல்லும் தரைப்பாலத்தை மூழ்கடித்தப்படி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

    உபரிநீர் திறப்பால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் தென் பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. யாரும் ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ கூடாது என்று பொதுப்பணித்துறையினர், வருவாய் துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×