search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உதவித்ெதாகை"

    • ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும், சீருடையும் வழங்கப்பட்டது.
    • உதவி ஆளுநர் ஜெயக்குமார் புதிய உறுப்பினர்களை இணைத்து வைத்தார்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி பூக்கொல்லை ரோட்டில் அமைந்துள்ள மிட்டவுன் ரோட்டரி அறக்கட்டளை வளாகத்தில் மன்னை மிட்டவுன் ரோட்டரி 13-வது ஆண்டு பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

    அதில் புதிய தலைவராக டி.ரெங்கைய்யன், செயலராக வி.கோபால–கிருஷ்ணன், பொருளாளராக டி.அன்பழகன் பதவி ஏற்றுக்கொண்டனர். சங்க இயக்குனர்களாக விக்டர் வீ.பாலகிருஷ்ணன், ஆர்.பாலமுருகன், எம்.நடராஜன், கே.திருநாவுக்கரசு, ஏ.கே.பாலகுணசேகரன்,ஜீ.சிவ க்கொழுந்து, ஜீ.மனோ கரன், என்.சாந்த–குமார், கே.மோகனசுந்தரம், பி.ரமேஷ், ஆர்.மாரியப்பன், சி.குருசாமி, டாக்டர்.என்.விஜயகுமார் ஆகியோர் பதவியேற்றனர்.

    இதில் முன்மைவிருந்தி னராக மாவட்ட ஆளுநர் (23-24) மேஜர் டோனார் ஜீ.செங்குட்டுவன் சிறப்புரையாற்றினார். உதவி ஆளுநர் டி.ஜெயக்குமார் புதிய உறுப்பினர்களை இணைத்து வைத்தார். ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும், சீருடையும் வழங்கப்பட்டது. ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். டி.ரெங்கையன் தலைமை தாங்கி பேசினர். சீ.குருசாமி வரவேற்றார். முடிவில் வீ.கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார். புதிய உறுப்பினர்களாக மதிவாணன், கனகராஜ், சுந்தர்ராசு, அருள்செல்வன், முருகானந்தம் ஆகியோர் மிட்டவுன் ரோட்டரியில் உறுப்பினராக இணை ந்தனர்.

    ×