search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உண்டு உறைவிடப்பள்ளி"

    • பெண் கல்வி சேவையில் குறைந்தபட்சம் மூன்றாண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
    • அதற்கான ஆதாரம் இணைக்கப்பட வேண்டும்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கல்வியில் பின்தங்கியுள்ள 12 ஒன்றியங்களில் 13 கஸ்துரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகள் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மூலமாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

    13 கே.ஜி.பி.வி. பள்ளிகளில் கொளத்தூர் ஒன்றியம், நீதிபுரம் கே.ஜி.பி.வி. பள்ளி, எடப்பாடி ஒன்றியம், சித்தூர் கே.ஜி.பி.வி. ஆகிய பள்ளிகளில் காலியாக உள்ள 2 கே.ஜி.பி.வி. உண்டு உறைவிடப்பள்ளிகளை நிர்வகிக்க அனுபவம் மற்றும் பெண் கல்வியில் ஆர்வமுள்ள பதிவு செய்யப்பட்ட அரசு சாரா தொண்டு நிறுவனங்களிடமிருந்து கருத்து ருக்கள் வரவேற்கப்படுகின்றன.

    ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட திட்ட அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெற்று அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் Indian Societies Act, 1860/Trust Act - ன் படி பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் Darpan Portal - இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். பெண் கல்வி சேவையில் குறைந்தபட்சம் மூன்றாண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அதற்கான ஆதாரம் இணைக்கப்பட வேண்டும். தங்கள் தொண்டு நிறுவனம் எவ்வித புகாருக்கும் உட்பட்டு இருக்கக் கூடாது.

    மேலும், மூன்றாண்டுகள் வரவு செலவு தணிக்கை செய்த விவரம் கருத்துருக்களுடன் இணைக்க வேண்டும். வருமான வரித்துறையின் டி.டி.எஸ். சான்றிதழ் இணைக்க வேண்டும். இந்த நிபந்தனைகளுக்குட்பட்டு கருத்துருக்களை வருகிற 28-ந்தேதி மாலை 5 மணிக்குள் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் வந்து சேரும்வகையில் அனுப்ப வேண்டும். அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    • பொறியியல் கல்லூரி வளாகத்தில் உண்டு உறைவிடப்பள்ளி செயல்படத் தொடங்கும் கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தார்.
    • வரும் கல்வியாண்டு முதல் 6 -ம் வகுப்பிலிருந்து பிளஸ் 2 வரையில் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட த்தில் உண்டு உறைவிட பள்ளிக்கு தற்காலிக மாக செய்யது அம்மாள் பொறி யியல் கல்லுாரியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    அங்கு ஓரிரு வாரத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்க உள்ளது. தமிழகத்தில் 15 மாவட்டங்களில் உண்டு உறைவிடப் பள்ளிகளை (மாதிரிபள்ளிகள்) தொடங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    ராமநாதபுரத்தில் உண்டு உறைவிட பள்ளிக்கு அரசு கட்டடங்கள் இல்லாததால் தனியார் இடத்தில் வாடகை அடிப்படையில் பள்ளியை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இதன்படி ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி வளாகத்தில் விடுதி அறைகள், உண்டு உறைவிட பள்ளிக்குரிய வகுப்பறைகள் அமைக்கும் பணி நடக்கிறது.

    முதல் கட்டமாக பிளஸ் -2 வகுப்புகளில் ஆங்கில வழி வகுப்புக்கு 40 பேரும், தமிழ் வழி வகுப்புக்கு 40 பேரும் என 80 போ் சோ்க்கப்பட்டுள்ளனா். ஓரிரு வாரங்களில் பிளஸ்-1 வகுப்புகளும் தொடங்கப்பட உள்ளதாக வும், வரும் கல்வியாண்டு முதல் 6 -ம் வகுப்பிலிருந்து பிளஸ் 2 வரையில் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

    ×