search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு"

    • சென்னிமலை பகுதியில் உள்ள இனிப்பு, கார வகைகள் கடைகளில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் திடீர் ஆய்வு செய்தார்.
    • பேக்கிங் செய்யப்பட்ட தேதி, பயன்பாட்டு காலத்தின் அளவு, சைவ மற்றும் அசைவ குறியீடு அவசியம் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

    சென்னிமலை:

    சென்னிமலை பகுதியில் உள்ள இனிப்பு, கார வகைகள் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு கடைகளில் சென்னிமலை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் திடீர் ஆய்வு செய்தார்.

    ஆய்வில் இனிப்பு, கார வகைகள் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பத ற்கான தரமான மூலப் பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவு பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும்.

    உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்கள், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான நிறமிகளை உபயோகி க்கக்கூடாது. ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்களை மறுமுறை சூடுபடுத்தி உணவு தயாரிப்பதற்காக பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு விவரச் சீட்டில் முழு முகவரி, உணவு பொருட்களின் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி, பயன்பாட்டு காலத்தின் அளவு, சைவ மற்றும் அசைவ குறியீடு அவசியம் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

    • சத்யா நகரில் உள்ள தனியார் பிரியாணி ஓட்டலில் கெட்டுப்போன சிக்கனை வாடிக்கையாளர்களுக்கு பரிமாறியதாக எழுந்தது
    • இதில் ஓட்டலில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பது தெரியவந்தது. இதனைதொடர்ந்து கடை உரிமையாளருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    குள்ளனம்பட்டி:

    தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பொதுமக்கள் திண்டுக்கல் நகருக்கு இனிப்பு, புத்தாடை, பட்டாசு வாங்க வருகின்றனர். மேலும் ஓட்டல்களிலும் சாப்பிட ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனை பயன்படுத்தி பல்வேறு ஓட்டல்களில் விதவிதமாக அசைவ உணவுகள் தயார்படுத்தி வருகின்றனர்.

    இதில் சிலர் தரமற்ற இறைச்சிகளை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பாக சென்னை மற்றும் திண்டுக்கல் உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அஞ்சலி ரவுண்டானா அருகே சத்யா நகரில் உள்ள தனியார் பிரியாணி ஓட்டலில் கெட்டுப்போன சிக்கனை வாடிக்கையாளர்களுக்கு பரிமாறியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சிவராமபாண்டியன் அறிவுறுத்தலின்படி உணவு பாதுகாப்பு அலுவலர் சந்திரமோகன் ஆய்வு மேற்கொண்டார்.

    கடையின் உணவு சமைக்கும் இடத்தில் பின்பற்றப்படும் சுகாதார நடைமுறைகள், இறைச்சிகளை வைத்திருக்கும் முறை, ரசாயன வண்ணங்கள் ஏதும் சேர்க்கப்படுகிறதா, காலாவதியான உணவு பொருட்கள் உள்ளதா என தொடர்ந்து சோதனை நடத்தினர்.

    இதில் ஓட்டலில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பது தெரியவந்தது. இதனைதொடர்ந்து கடை உரிமையாளருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    மேலும் நகரின் பல்வேறு ஓட்டல்களிலும் அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். வாடிக்கையாளர்களுக்கு தரமான உணவுகளை மட்டும் கொடுக்க வேண்டும். தரமற்ற பொருட்கள் உணவு தயாரிக்க பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

    நகரில் உள்ள பெரும்பாலான கடைகளில் உணவு விலை பட்டியல் வைப்பது இல்லை என பொதுமக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டனர். அதற்கு தனிப்பிரிவு உள்ளது. அந்த அலுவலர்கள் மூலம் இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    ×