என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உடுமலை அரசு கொள்முதல் மையம்"
- ஒரு கிலோ 80 ரூபாய்க்கு மட்டுமே விற்று வருகிறது.
- உரிய தொகை உடனடியாக விவசாயிகள் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
உடுமலை,ஜூலை.3-
தென்னை விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில், உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் அரசு கொப்பரை கொள்முதல் மையம் துவக்கப்பட்டது.கடந்த பிப்ரவரி 1-ந் தேதி முதல்விவசாயிகளிடமிருந்து கிலோ 105.90 ரூபாய்க்கு கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 31ந்தேதி வரை கொள்முதல் மையத்தில் 554 விவசாயிகளிடமிருந்து 15 ஆயிரத்து, 507 மூட்டை (775.350 டன்) கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகள் வங்கிக்கணக்கில் நேரடியாக கொப்பரைக்கான தொகை 8 கோடியே 21 லட்சத்து 9 ஆயிரத்து 565 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
வெளி மார்க்கெட்டில் கொப்பரைக்கான விலையும் மிகவும் குறைந்து ஒரு கிலோ 80 ரூபாய்க்கு மட்டுமே விற்று வருகிறது.இதனால் அரசு கொப்பரை கொள்முதல் மையங்களில் கொண்டு வந்து, உற்பத்தி செய்த கொப்பரையை விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் வரத்து அதிகரித்துள்ளது.அதிகாரிகள் கூறுகையில், கொப்பரை கொள்முதல் மையத்தில் வருகிற 31ந் தேதி வரை விவசாயிகளிடமிருந்து, நேரடியாக கொப்பரை கொள்முதல் செய்யப்பட உள்ளது. கொள்முதல் செய்யப்படும் கொப்பரைக்கு உரிய தொகை உடனடியாக விவசாயிகள் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்