search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடல்நிலை சரியில்லை"

    • மணிகண்டன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்.
    • மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்: 

    கடலூர் அருகே திருவந்திபுரம் பில்லாலி தொட்டி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 38). இவருக்கு நித்யா என்ற மனைவியும், 2 குழந்தைகள் உள்ளனர். மணிகண்டன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இதனால் மனமுடைந்த மணிகண்டன் இன்று காலை தனது வீட்டில் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பண்ருட்டி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
    • சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் வேலைக்கு ஏதும் சொல்லாமல் வீட்டிலிருந்து வந்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே தட்டான் சாவடி பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன். இவருக்கு திருமணம் ஆகி 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் வேலைக்கு ஏதும் சொல்லாமல் வீட்டிலிருந்து வந்தார். சம்பவத்தன்று மன உளைச்சலில் இருந்த ராஜசேகரன் வீட்டில் இருந்த விஷம் குடித்து மயங்கி ய நிலையில் கிடந்தார். பின்னர் இது குறித்து அறிந்த வீட்டில் உள்ளவர்கள் அவரை மீட்டு பண்ருட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜசேகரன் இறந்தார். இது குறித்து பண்ருட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×