search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடல் பாகங்கள்"

    பெருங்குடி குப்பை கிடங்கில் சந்தியாவின் தலை உள்ளிட்ட உடல் பாகங்களை தேடும் பணி இன்று 2-வது நாளாக முடுக்கி விடப்பட்டுள்ளது. #Sandhya #Balakrishnan
    சென்னை:

    சென்னையை அடுத்துள்ள பெருங்குடி குப்பை கிடங்கில் கடந்த மாதம் 21-ந்தேதி இரவு பெண்ணின் கால்கள், வலது கை ஆகியவை கிடைத்தது. இது தொடர்பாக பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    சுமார் 35 வயதுக்குட்பட்ட பெண் ஒருவரை யாரோ கொலை செய்து உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி வீசி சென்றிருப்பதுவிசாரணையில் தெரிய வந்தது. இருப்பினும் கொலை செய்யப்பட்ட பெண் யார்? என்பது உடனடியாக தெரியாமலேயே இருந்தது.

    கொலையுண்ட பெண்ணை கண்டு பிடிப்பதற்காக துணை கமி‌ஷனர் முத்துசாமி மேற்பார்வையில் உதவி கமி‌ஷனர் கெங்கைராஜ், இன்ஸ்பெக்டர் ஆல்வின்ராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிரமாக துப்பு துலக்கி வந்தனர்.

    மாயமான பெண்கள் பற்றி விசாரணை நடத்தப்பட்ட அதே வேளையில் மீட்கப்பட்ட பெண்ணின் வலது கையில் பச்சை குத்தப்பட்டிருந்த டிராகன், சிவன்-பார்வதி உருவங்களை வைத்தும் விசாரணை நடத்தினர்.

    கடந்த 16 நாட்களாக தொடர்ச்சியாக நடத்தப்பட்ட இந்த விசாரணையில் நேற்று துப்பு துலங்கியது. கொலை செய்யப்பட்ட பெண் நாகர்கோவில் பூதப்பாண்டி அருகே உள்ள ஞாலம் பகுதியைச் சேர்ந்த சந்தியா என்பது தெரிய வந்தது.

    தூத்துக்குடியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரை கடந்த 2000-ம் ஆண்டில் திருமணம் செய்த சந்தியாவுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். தூத்துக்குடியில் இவர்கள் படித்து வரும் நிலையில் கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சந்தியா விவாகரத்து வழக்கு தொடர்ந்தார்.

    இதன் பின்னர் கணவரை பிரிந்து தாய் வீட்டுக்கு சென்ற அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னைக்கு வந்து சைதாப்பேட்டையில் ஒரு விடுதியில் தங்கினார். சினிமா வாய்ப்புக்காகவே கணவரை பிரிந்து தனியாக தங்கிய சந்தியா, சில படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

    சந்தியாவின் நடத்தை சரியில்லாமல் இருப்பதாகவும் பாலகிருஷ்ணன் சந்தேகப்பட்டார். இதுபற்றி அவர் பலமுறை கண்டித்தும் சந்தியா கேட்கவில்லை.

    இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்ட பாலகிருஷ்ணன், ஜாபர்கான் பேட்டையில் தான் தங்கியிருந்த வீட்டுக்கு நைசாக அழைத்துச் சென்று சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்தார்.

    பின்னர் உடலை 7 பாகங்களாக துண்டித்து 4 பார்சல்களாக கட்டி குப்பை தொட்டிகளிலும், அடையாறு ஆற்றங்கரையிலும் வீசினார்.

    இதனை கண்டுபிடித்து பாலகிருஷ்ணனை நேற்று கைது செய்த போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். சந்தியாவின் கால்கள் மற்றும் பச்சை குத்தப்பட்ட வலது கை ஆகியவை கடந்த 21-ந்தேதியே கிடைத்துவிட்ட நிலையில், இடுப்பில் இருந்து முழங்கால் வரையிலான உடல் பாகத்தை காசி தியேட்டர் அருகே வீசி இருப்பதாக பாலகிருஷ்ணன் கூறினார். இதனை தொடர்ந்து அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் நேற்று இடுப்பு பகுதியை மீட்டனர். ஒரு சாக்கு மூட்டையில் அது கட்டி போடப்பட்டிருந்தது.

    இதன் மூலம் உடல் பாகங்களில் 2 பார்சல்கள் கிடைத்து விட்டன. தலையை ஒரு பார்சலாகவும், கழுத்துக்கு கீழ் இடுப்பு வரையிலான உடல் பகுதி மற்றும் இடது கை ஆகியவற்றை இன்னொரு பார்சலாகவும் பாலகிருஷ்ணன் கட்டி வீசியதும் தெரிய வந்தது.

    இந்த உடல் பாகங்கள் எங்கே? என்று போலீசார் தேடி வருகிறார்கள்.

    இடுப்பு பகுதியை மட்டும் அடையாறு ஆற்றங்கரையோரமாக வீசிய பாலகிருஷ்ணன், மற்ற பார்சல்கள் அனைத்தையும் குப்பை தொட்டிகளிலேயே வீசியுள்ளார். இதில் ஒரு பகுதிதான் (2 கால்கள், வலது கை பார்சல்) பெருங்குடி குப்பை மேட்டில் கிடைத்தது.

    தலை மற்றும் உடல் பாகத்தை தனித்தனி பார்சல்களாக ஜாபர்கான்பேட்டையில் உள்ள குப்பை தொட்டிகளிலேயே பாலகிருஷ்ணன் வீசி இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

    இங்கு சேகரிக்கப்படும் குப்பைகளும் பெருங்குடி குப்பை கிடங்குக்கு கொண்டு சென்றே கொட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம், சந்தியாவின் தலை, உடல் மற்றும் இடது கை ஆகியவையும் பெருங்குடி குப்பை கிடங்கிலேயே குப்பையோடு குப்பையாக கொட்டப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இதனைத் தொடர்ந்து பெருங்குடி குப்பை கிடங்கில் போலீசார் நேற்று முழுவதும் தேடிப் பார்த்தனர். ஆனால் தலை உள்ளிட்ட உடல் பாகங்கள் சிக்கவில்லை. இன்று 2-வது நாளாக தலையை தேடும் படலம் முடுக்கி விடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே கைதான பாலகிருஷ்ணன், போலீஸ் விசாரணைக்கு பின்னர் இன்று காலை 11.30 மணியளவில் ஆலந்தூர் கோர்ட்டில் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.

    பாலகிருஷ்ணனிடம் விசாரணை நடத்திய நீதிபதி அவரை வருகிற 19-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.

    இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்படுகிறார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். #Sandhya #Balakrishnan
    சென்னை குப்பைக் கிடங்கில் வெட்டப்பட்டு கிடந்த கை, கால்களுக்கு உரிய பெண் அடையாளம் தெரிந்தது. கள்ளக்காதல் தகராறில் மனைவியை தீர்த்து கட்டிய சினிமா உதவி இயக்குனரை போலீசார் கைது செய்தனர். #BodyPartsInDumbyard #WomanKilled
    சென்னை:

    சென்னையை அடுத்த பெருங்குடி குப்பைக்கிடங்கில் கடந்த மாதம் 21-ந்தேதி ஒரு பெண்ணின் துண்டிக்கப்பட்ட வலது கை மற்றும் இரண்டு கால்கள் கிடந்தன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்வின்ராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று கை மற்றும் கால்களை மீட்டு விசாரணை நடத்தினர்.

    துண்டிக்கப்பட்ட கையில் டிராக் படமும், சிவன்-பார்வதி உருவமும் பச்சை குத்தப்பட்டு இருந்தது. இதனால் கொலை செய்யப்பட்ட பெண் வடமாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

    இரண்டு கால்களும், ஒரு கையும் மட்டுமே கிடைத்த நிலையில் மற்ற உடல் பாகங்களை போலீசார் தேடினர். கொலை செய்யப்பட்டவர் நுங்கம்பாக்கம் அல்லது கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

    எனவே உடல் பாகங்கள் அந்த பகுதியில் வீசப்பட்டு இருக்கலாம் என்று கருதப்பட்டது. அதே நேரத்தில் குப்பை கிடங்குகளில் உடல் பாகங்கள் வீசப்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்பட்டது.

    இதையடுத்து சென்னை மாநகர் முழுவதும் போலீசார் உடல் பாகங்களை தேடி அலைந்தனர். ஆனால் உடல் பாகங்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதைத் தொடர்ந்து உடல் பாகங்களை தேடும் பணியை கைவிட்ட போலீசார் துண்டிக்கப்பட்ட இரண்டு கால்களையும், கையையும் ஒன்றாக வைத்து புகைப்படம் எடுத்து போஸ்டர்களாக அச்சிட்டு வெளியிட்டனர்.



    சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மாயமான 70-க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் போட்டோக்களை சேகரித்து விசாரணை நடத்தினர். இருப்பினும் கொலையுண்ட பெண் யார் என்பது உடனடியாக தெரியாமலேயே இருந்தது. இதன் காரணமாக இந்த வழக்கு போலீசாருக்கு பெரும் சவாலாகவே இருந்து வந்தது.

    இந்த நிலையில் 2 வாரங்களுக்கு பிறகு இந்த வழக்கில் துப்பு துலங்கி உள்ளது. துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பது அடையாளம் காணப்பட்டது.

    மாயமான பெண்களின் விவரங்களை ஒவ்வொன்றாக சேகரித்தபோது சென்னை ஜாபர்கான் பேட்டை பகுதியைச் சேர்ந்த சந்தியா என்ற பெண் மட்டும் எங்கு இருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது.

    இதைத் தொடர்ந்து கொலை செய்யப்பட்ட பெண் சந்தியாவாக இருக்கலாம் என்று போலீசார் கருதினர். இதன்படி விசாரணை முடுக்கி விடப்பட்டது.

    சந்தியாவின் கணவர் பாலகிருஷ்ணன் தலைமறைவாக இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் நேற்று இரவு அவரை தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் மடக்கி பிடித்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

    அப்போது மனைவி சந்தியாவை பாலகிருஷ்ணன் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது. இதனை கேட்டு போலீசார் அதிர்ந்து போனார்கள்.

    மனைவியை கொலை செய்தது ஏன் என்பது பற்றி பாலகிருஷ்ணனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கள்ளக்காதல் தகராறில் கொலை நடந்தது தெரிய வந்தது. பாலகிருஷ்ணன் சினிமாவில் உதவி இயக்குனராக உள்ளார்.

    அவரது சொந்த ஊர் தூத்துக்குடி. சந்தியா கன்னியாகுமரியைச் சேர்ந்தவர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மாயவர்மன் என்ற மகனும், யோக யாத்ரா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் தூத்துக்குடியில் படித்து வருகிறார்கள்.

    ஜாபர்கான்பேட்டை பாரி நகர் காந்தி தெருவில் தனியாக வீடு எடுத்து பாலகிருஷ்ணனும், சந்தியாவும் தங்கி இருந்தனர். சினிமா உதவி இயக்குனராக இருந்த பாலகிருஷ்ணன் அடிக்கடி சந்தியாவை சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கும் அழைத்து சென்றுள்ளார்.

    அப்போது சந்தியாவுக்கும் வேறு ஒரு நபருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை பாலகிருஷ்ணன் பலமுறை கண்டித்துள்ளார். இது தொடர்பாக ஏற்பட்ட தகராறிலேயே சந்தியாவை அவர் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி உடலை வீசியதும் தெரிய வந்துள்ளது.

    இந்த சம்பவம் ஜாபர்கான்பேட்டை பகுதியிலும், சினிமா வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. #BodyPartsInDumbyard #WomanKilled
    துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கசோக்கியின் உடல் பாகங்கள் தூதரக அதிகாரியின் வீட்டு தோட்டத்தில் உள்ள கிணற்றில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. #JamalKhashoggi #SaudiConsulGeneral
    இஸ்தான்புல்:

    அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் கட்டுரைகள் எழுதி வந்த சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (வயது 59), துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த 2-ம் தேதி சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து திரும்பவில்லை.

    அவர் அந்த தூதரகத்துக்குள் வைத்து சவுதி அரேபிய ஏஜெண்டுகளால் கொல்லப்பட்டு விட்டார் என்று பல தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முதலில் இதனை மறுத்த சவுதி அரேபியா, பின்னர் தூதரகத்தில் ஜமால் கசோக்கி கொல்லப்பட்டதை உறுதி செய்தது. சவுதி மன்னராட்சியையும் பட்டத்து இளவரசரையும் கடுமையாக விமர்சித்து வந்த ஜமால் கசோக்கி கொல்லப்பட்டது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.



    இந்நிலையில் துருக்கி பாராளுமன்றத்தில் அதிபர் எர்டோகன் நேற்று பேசினார். அப்போது அவர் கசோக்கி படுகொலை திட்டமிட்ட சதி என குற்றம்சாட்டினார்.

    ‘கசோக்கி படுகொலை செய்யப்படுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக, அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை நீக்கி உள்ளனர். சவுதி அரேபிய தூதரகம் அருகேயுள்ள காட்டினை சவுதி அரேபிய ஏஜெண்டுகள் பார்வையிட்டிருக்கிறார்கள். இந்த காட்டில்தான் கசோக்கியின் உடல் வீசப்பட்டிருக்கலாம் என கருதி துருக்கி அதிகாரிகள் தேடுதல் வேட்டை நடத்தினர்.

    இது கொடூரமான திட்டமிட்ட படுகொலை. இதை மறைக்க முடியாது. எனவே, கசோக்கி உடல் எங்கு இருக்கிறது? என்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் சவுதி அரேபியா வெளியிட வேண்டும். இந்த கொலையின் பின்னணியில் உள்ள உண்மைகளை நிச்சயம் வெளிக்கொண்டு வருவோம்’ என்றார் எர்டோகன்.

    இதற்கிடையே கசோக்கியின் உடல் பாகங்கள் சவூதி அரேபிய தூதரக அதிகாரியின் வீட்டில் கிடைத்து இருப்பதாக பிரிட்டன் நாட்டு செய்தி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.  

    கசோக்கியின் உடல் பாகங்கள் சவுதி தூதரக அதிகாரியின் வீட்டு தோட்டத்தில் உள்ள கிணற்றில் கண்டுபிடிக்கப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் டோகு பெரின்செக் கூறியதாக துருக்கி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கசோக்கியின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டும், முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக மற்றொரு தகவலும் வெளியாகியிருக்கிறது. #JamalKhashoggi #SaudiConsulGeneral
    ×