search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண்கள் சீரழிப்பு"

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு உள்பட 4 பேர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #PollachiAbuseCase #GoondasAct
    கோவை:

    பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள்-பெண்களை ஆபாச படம் எடுத்து பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பொள்ளாச்சி மாக்கினாம் பட்டியை சேர்ந்த பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசு , சபரிராஜன், சதிஷ், வசந்த குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் திருநாவுக்கரசை ஜாமீனில் விடுதலை செய்ய கோரி அவரது தாய் லதா பொள்ளாச்சி ஜே.எம். எண்-1 கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற இருந்தது.

    இந்த நிலையில் திருநாவுக்கரசு உள்பட 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் பரிந்துரையின் பேரில் திருநாவுக்கரசு உள்பட 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்த குமார் ஆகியோர் இன்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை போலீசார் சிறைக்கு சென்று வழங்க உள்ளனர். #PollachiAbuseCase #GoondasAct

    ×