search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலவச மாதிரி தேர்வு"

    • 12-ந்தேதி நடக்கிறது
    • போட்டித்தேர்வு ஆர்வலர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    நாகர்கோவில்

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணை யத்தால் நடத்தப்படவுள்ள சப்-இன்ஸ்பெக்டர் போட்டித் தேர்விற்கு மாவட்ட அளவிலான இலவச மாதிரித் தேர்வு வருகிற 12-ந்தேதி அன்று மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் தெறி வழிகாட்டும் மையம் மூலமாக கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்பட உள்ளது.

    காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இரு தேர்வுகளாக (தமிழ் தகுதித்தேர்வு மற்றும் சார்பு ஆய்வாளர் எழுத்துத்தேர்வு) நடைபெற உள்ள இம்மாதிரித் தேர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையம், நாகர்கோவில் அலுவலகத்தில் நேரிலோ அல்லது இவ்வலுவலக டெலிகிராம் சேனல் மூலமோ முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்பதிவிற்கு நாளை (10-ந் தேதி) கடைசி நாள் ஆகும்.

    மேலும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணைய தளமான https://tamilnaducareerservices.tn.gov.in-ல் அனைத்து விதமான போட்டித் தேர்வுகளுக்கு பாடக்குறிப்புகள் மற்றும் இணையதள மாதிரி தேர்வுகள் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளது. இத்தேர்வில் கலந்து கொள்ப வர்கள் தேர்வு நடைபெறும் நாளான 12-ந் தேதி அன்று காலை 8.30 மணியளவில் சார் ஆய்வாளர் தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல்-1, ஆதார் நகல்-1, புகைப்படம்-1 ஆகியவற்றுடன் நாகர்கோவில் கோணத்தில் அமைந்துள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. போட்டித்தேர்வு ஆர்வலர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    • 2-ம் நிலை காவலர் தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு 20-ந் தேதி நடக்கிறது.
    • தேர்வை பயமின்றி எளிதில் எதிர்கொள்ள இந்த இலவச மாதிரி தேர்வை எழுதி தேர்வர்கள் பயன்பெறலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் காலிபணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள 2-ம் நிலைக் காவலர் 3552 பதவிகளுக்கான தேர்வு வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளது.

    இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள விருது நகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் வகையில் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து, மாவட்ட அளவிலான இலவச மாதிரி தேர்வு வருகிற 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விருதுநகர் இந்து நாடார் செந்தில் குமார நாடார் கல்லூரியில் காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது.

    இந்த மாதிரி தேர்வு எழுத விரும்பும் தேர்வர்கள் தங்கள் விவரங்களை முன்பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் ஆகும். அதனடிப்படையில், தேர்வர்கள் www.vnrjobfair.com என்ற இணையதளத்தில் விவரங்களை வருகிற 14-ந் தேதி முதல் 17-ந் தேதி மாலை 4 மணிக்குள் பதிவு செய்து கொள்ளலாம்.

    பதிவு செய்த தேர்வர்கள் மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். தங்களது TNUSRB PC தேர்விற்கான விண்ணப்ப படிவத்தின் நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், கருப்பு பால் பேனா ஆகிவற்றுடன் தேர்வு மையத்திற்கு வர வேண்டும்.

    தேர்வை பயமின்றி எளிதில் எதிர்கொள்ள இந்த இலவச மாதிரி தேர்வை எழுதி தேர்வர்கள் பயன்பெறலாம்.

    இதுகுறித்து செல்போன் எண். 04562-293613 மற்றும் onlineclassvnr@gmail.com-ஐ தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    • தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 போட்டி தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு 19-ம் தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற உள்ளது.
    • என்.ஆர். ஐ ஏ எஸ் அகாடமி இயக்குனர் விஜயாலயன் பாடப்பகுதி குறித்த வகுப்பு மற்றும் மாணவர்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறார்

    திருச்சி:

    திருச்சி மாவட்ட மைய நூலகர் தனலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

    திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் என்.ஆர்.ஐ ஏ எஸ் அகாடமி சார்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 போட்டி தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு 19-ம் தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற உள்ளது.

    இத்தேர்வில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பாடப் பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.மாணவர்களுக்கு வினா தொகுப்பு வழங்கப்பட்டு ஓ எம் ஆர் விடைத்தாளில் பதிலளிக்கும் முறையில் தேர்வு நடைபெறும் தேர்வை தொடர்ந்து என்.ஆர். ஐ ஏ எஸ் அகாடமி இயக்குனர் விஜயாலயன் பாடப்பகுதி குறித்த வகுப்பு மற்றும் மாணவர்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறார். போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவ மாணவிகள் இதில் கலந்துகொண்டு பயன் அடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கள்ளக்குறிச்சியில் இலவச மாதிரி தேர்வு -வேலை வாய்ப்பு முகாம் கலெக்டர் ஸ்ரீதர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • இளைஞர்கள் இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் செய்தி குறிப்புகளை வெளியிட்டுள்ளார் அதில் கூறியுள்ளதாவது, கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு ப்பணியாளர் தேர்வா ணையத்தால் 7,301 பணியிட ங்களுக்கான (கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர்) டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, இத்தேர்வு வருகிற 24-ம் தேதியன்று நடைபெறவுள்ளது. எனவே, மேற்காணும் போட்டித் தேர்வுக்கு தயாராகும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தினை சேர்ந்த போட்டி தேர்வர்கள் பயனடையும் வகையில் அதற்கான இலவச மாதிரி தேர்வுகள் 10.07.2022 மற்றும் 17.07.2022 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் சேலம் மெயின் ரோடு, இந்திலியில் அமைந்துள்ள ஆர்.கே.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை தேர்வுகள் நடைபெறவுள்ளது.

    இந்த மாதிரி தேர்வுகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 விண்ணப்ப நகல் மற்றும் புகைப்படத்துடன் 08.07.2022 அன்று மாலை 5 மணிக்குள் கள்ளக்குறிச்சி, 18/63 நேப்பால் தெருவில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலோ அல்லதுhttp://shorturl.at/fJSZ3 என்ற உரலி வழியாகவோ (கூகுள் பார்ம்) பதிவு செய்து கொண்டு, 10.07.2022 அன்று நடைபெறவுள்ள இலவச மாதிரி தேர்வுகளை எழுதி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள மற்றொரு செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, தனியார்துறை நிறுவனங்கள் மூலம் சிறிய அளவிலான "வேலைவாய்ப்பு முகாம்" மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதத்தின் இரண்டாம் மற்றும் நான்காம் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் உள்ள முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது பணிக்காலியிடம் மற்றும் கல்வித்தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளதால், பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த ஆண், பெண் ஆகியோர் கலந்துகொள்ள www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் CANDIDATE LOGIN-ல் தங்களது விபரங்களை பதிவு செய்துகொண்டு, இம்முகாமில் கலந்து கொள்ளலாம்.

    இதன் மூலம் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. மேலும், 08.07.2022 அன்று காலை 10.00 மணி முதல் கள்ளக்குறிச்சி நேபால் தெருவில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், சிறு, குறு மற்றும் தனியார் தனியார்துறை நிறுவனங்களில் காலியாகவுள்ள பணியிடங்களை தங்களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரிலோதேர்வு செய்யவுள்ளனர். எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை பயன்படுத்தி க்கொள்ளலாம் இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ×