search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இறுதித்தேர்வு"

    பெற்றோர்கள் தங்களது நிறைவேறாத கனவுகளை குழந்தைகள் மூலம் நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். #Modi #Parikshapecharcha
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டின் இறுதித்தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுடன் உரையாடினார். இதேபோல இந்த ஆண்டும் இரண்டாவது முறையாக மாணவ-மாணவிகளுடன் மோடி உரையாடினார்.

    பரீக்‌ஷா பே சர்ச்சா (பரீட்சை தொடர்பான விவாதம்)  என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில்  9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 2 ஆயிரம் மாணவ-மாணவிகள், பெற்றோர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    ரஷ்யா, நைஜீரியா, ஈரான், நேபாளம், குவைத், சவுதிஅரேபியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்களும் பங்கேற்றனர்.

    10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெற இன்னும் இருமாதங்கள் உள்ளன. தேர்வு நேரத்தில் ஏற்படும் மனஅழுத்தத்தை எப்படி குறைப்பது? என்பது பற்றி மாணவ-மாணவிகளுக்கு மோடி ஆலோசனைகளை கூறினார். மாணவர்களின் நலன்தான் முக்கியம் என்றும், அவர்கள்தான் எதிர்கால இந்தியா என்றும் தெரிவித்தார்.



    பெற்றோர்களை நான் ஒன்று கேட்டுக் கொள்வேன். உங்களால் நிறைவேற்ற முடியாத கனவுகளை உங்கள் குழந்தைகள் மூலம் நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனியான பலமும் திறமையும் உண்டு. அதை சரியான வகையில் நீங்கள் புரிந்துகொண்டு ஊக்கப்படுத்த வேண்டும்.

    அறிவுத்திறனை விரிவாக்கம் செய்யும் வகையிலும் புதிய படைப்புகளுக்கான உந்துசக்தியாகவும் தொழில்நுட்பத்தை மாணவ-மாணவியர் பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஆனால், விளையாட்டுத்துறையை நீங்கள் மறந்து விடக்கூடாது எனவும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

    இந்த உரையாடலில் பங்கேற்க கடந்த 7-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 17 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் இருந்து 2 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Modi #Parikshapecharcha #Unfulfilleddreams 
    ×