search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரைச்சல் பாலத்தில் அதிகாரிகள் ஆய்வு"

    • தேனி மாவட்டம் லோயர்கேம்பில் பெரியாறு மின் உற்பத்தி நிலையம் உள்ளது.
    • அணைப்பகுதியில் ஆய்வு நடத்திய முதன்மை பொறியாளர் இரைச்சல் பாலத்தை ஆய்வு செய்தார். மேலும் அவருடன் தமிழக பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் லோயர்கேம்பில் பெரியாறு மின் உற்பத்தி நிலையம் உள்ளது. முல்லை–ப்பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு திறந்து விடப்படும் தண்ணீர் போர்பை அணைக்கு சென்று அங்குள்ள 4 ராட்சத குழாய்கள் வழியாக சென்று மின்சார உற்பத்தி நடைபெறுகிறது.

    மின் உற்பத்தி இல்லாத காலங்களில் தண்ணீர் போர்பை அணை அருகில் இைரச்சல் பாலம் வழியாக தேனி மாவட்ட மக்கள் மற்றும் கால்நடை பயன்பாட்டிற்காக 100 கன அடி தண்ணீர் முல்லை ப்பெரியாறு வழியாக திறந்து விடப்படுகிறது.

    மழை வெள்ள காலங்களில் இைரச்சல் பாலம் வழியாக கூடுதல் தண்ணீர் தமிழக பகுதிக்கு வெளியேற்றப்படும். கடந்த சில நாட்களுக்கு முன்பு அணைப்பகுதியில் ஆய்வு நடத்திய முதன்மை பொறியாளர் ஞானசேகரன் இரைச்சல் பாலத்தை ஆய்வு செய்தார். மேலும் அவருடன் தமிழக பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.

    மழை வெள்ள காலங்களில் இதுவரை அதிகப்படியாக இரைச்சல் பாலம் வழியாக வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் சென்றுள்ளது. வரும் காலங்களில் அதுபோல் செல்வதற்கு தயார்படுத்தி வருகிறோம். இதன் மூலம் தண்ணீர் வீணாகி செல்வது நிறுத்தப்பட்டு மக்களுக்கு பயன்படும் வகையில் மின் உற்பத்திற்க்கோ அல்லது விவசாய பயன்பாட்டிற்கோ உதவும் என எதிர்பார்க்கப்ப–டுகிறது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 129.40 அடியாக உள்ளது. வரத்து நேற்று 88 கன அடியாக இருந்த நிலையில் இன்று 464 கன அடியாக அதிகரித்துள்ளது. திறப்பு 700 கன அடி. இருப்பு 4568 மி.கன அடி.

    வைகை அணையின் நீர்மட்டம் 54.33 அடி. வரத்து 298கன அடி. திறப்பு 869 கன அடி. இருப்பு 2612 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 48 அடி. வரத்து 58 கன அடி.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 85.43 அடி. வரத்து 9 கன அடி. திறப்பு 6 கன அடி.

    பெரியாறு 27, தேக்கடி 18, கூடலூர் 4.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    ×