search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரும்பு பொருட்கள்"

    • இரும்பு பொருட்களை மர்மகும்பல் திருடி வேனில் கடத்துவதாக புதுச்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
    • முல்லைராஜ், சிவகேசவன் ஆகியோரை மடக்கி பிடித்துகைது செய்தனர்

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே புதுச்சத்திரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஆயில் ஆலை உள்ளது. இந்த ஆலை வளாகத்தில் இரும்பு பொருட்கள் குவிக்கப்பட்டு உள்ளது. இந்த பொருட்களை பலர் திருடிய வண்ணம் உள்ளது. எனவே ஆலை நிர்வாக காவலாளிகள் கண்காணித்தபடி உள்ளது. எனினும் நேற்றுஆலை வளாகத்தில் உள்ள இரும்பு பொருட்களை மர்மகும்பல் திருடி வேனில் கடத்துவதாக புதுச்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினதா தலைமையிலான போலீசார் ஆலைக்கு விரைந்தனர்.

    அப்போது ஆண்டார் முள்ளிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த ராபர்ட் முல்லைராஜ் தலைைமயில் சிவகேசவன், சங்கர், கர்ணா, சுரேஷ், சிவபாலன், செல்வகுமார் ஆகியோர் ஒரு வேனில் 1,500 இரும்பு பொருட்களை வேனில் ஏற்றி கடத்த முயன்றனர். அப்போது போலீசாரை கண்டதும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓட முயன்றது. உஷரான போலீசார் ராபர்ட் முல்லைராஜ், சிவகேசவன் ஆகியோரை மடக்கி பிடித்து கைது செய்தனர். தப்பி ஓடிய மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இரும்பு பொருட்களை கடத்த முயன்ற வேன் பறிமுதல் செய்யப்பட்டது. 

    • கொரோனா பிரச்சினையின் போது மூடப்பட்ட பூங்கா இதுவரை திறக்கப்படவில்லை.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே கோவளம் பகுதியில் பேவாட்ச் எனப்படும் உல்லாச நீர் வீழ்ச்சி பூங்கா உள்ளது. கொரோனா பிரச்சினையின் போது மூடப்பட்ட பூங்கா இதுவரை திறக்கப்படவில்லை.

    இந்த நிலையில் அந்த பூங்காவில் இருந்த இரும்பு பொருட்கள் மற்றும் என்ஜின் ஆகியவற்றை யாரோ மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

    இது பற்றி பூங்கா காவலாளி கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் 3 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • சிதம்பரம் அருகே ரூ.20 லட்சம் மதிப்புள்ள இரும்பு பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
    • மர்ம நபர்கள் இங்கு வந்து இரும்பு பொருட்களை திருடி செல்கின்றனர்.

    கடலூர்:

    சிதம்பரம் புதுச்சத்திரம் அருகே என்.ஓ.சி.எல். என்னை சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இந்த நிலையம் பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்து வருகிறது. இதனால் செயல்படாத அந்த நிலையத்தில் உள்ள இரும்பு பொருட்களை அந்த கிராமத்தைச் சேர்ந்த மற்றும் அதனை சுற்றியுள்ள மர்ம நபர்கள் இங்கு வந்து இரும்பு பொருட்களை திருடி செல்கின்றனர். இதனால் அந்த எண்ணெய் நிலையத்தின் உரிமையாளர் அங்குள்ள இரும்பு பொருட்களை எல்லாம் புதுவையில் உள்ள மற்றொரு தொழிற்சாலைக்கு அப்புறப்படுத்த முயன்றார். இதனால் 2 டாரஸ் லாரி மூலம் புதுச்சத்திரத்தில் இருந்து சுமார் 120 டன் இரும்பு பொருட்களை ஏற்க்றி கொண்டு புதுவையில் உள்ள தொழிற்சாலைக்கு கொண்டு சென்றனர்.

    அப்போது இந்த 2 லாரிகளும் கடலூர் வழியாக புதுவைக்கு செல்லாமல் வேப்பூர் வழியாக திருச்சி சாலையில் மாற்றி சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 லாரிகளையும் நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் டிரைவர்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்த தால் அவர்களை லாரியுடன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சின்னத்தம்பி, நாகப்பட்டினம் மாவட்டம் ஈசனூரை சேர்ந்த பவுல்ராஜ் மற்றும் ஆண்டாள் முரளி பகுதியை சேர்ந்த சுகதேவ் ஆகியோர் 2 லாரிகளில் ரூ.20 லட்சம் மதிப்பிலான இரும்பு பொருட்களை உரிய இடத்திற்கு கொண்டு செல்லாமல் வேறொரு இடத்துக்கு கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. உடனே 2 லாரிகளை பறிமுதல் செய்தனர்

    ×