search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இருதய நோய்"

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் இருதய நோய் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • இருதயத்தை பாதுகாக்கும் வழிமுறைகள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாணவ-மாணவிகள் பொதுமக்களுக்கு வழங்கினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையும், கலசலிங்கம் மருந்தாக்கியல் கல்லூரியும் இணைந்து "உலக இருதய தினத்தை" முன்னிட்டு இருதய நோய் விழிப்புணர்வு பேரணியை நடத்தியது. கலசலிங்கம் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவன துணைத்தலைவர் சசி ஆனந்த் தலைமை தாங்கினார். டீன் சேவியர் செல்வ சுரேஷ் , கலசலிங்கம் மருந்தாக்கியல் கல்லூரி முதல்வர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர்.

    ராஜபாளையம் சாய் இருதய மருத்துவமனையின் தலைமை இருதய நோய் நிபுணர் ராஜாராம் தலைமை விருந்தினராகவும், கிருஷ்ணன்கோவில் காவல்துறை உதவி ஆய்வாளர் மணிகண்டன் கவுரவ விருந்தினராகவும் கலந்துகொண்டு பேரணியை தொடங்கி வைத்தனர். கிருஷ்ணன்கோவில் பஸ் நிறுத்தம் முதல் குன்னூர் ஆரம்ப சுகாதார மையம் வரை பேரணி நடந்தது. இருதயத்தை பாதுகாக்கும் வழிமுறைகள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாணவ-மாணவிகள் பொதுமக்களுக்கு வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை விவேகானந்தன் செய்திருந்தார்.

    • இலவச ஈ.சி.ஜி. கருவி வழங்கப்பட்டது.
    • ரூ.31 லட்சம் மதிப்புள்ள இருதய நோய் கண்டறியும் ஈ.ஜி.சி கருவியை மருத்துவமனை மருத்துவ அலுவலர் தீபாவிடம் வழங்கினார்.

    சோழவந்தான்

    சோழவந்தானில் அரசு மருத்துவமனைக்கு, சோழவந்தானை பூர்வீகமாக கொண்டு அமெரிக்காவில் உள்ள டாலஸ் மாநிலத்தில் தமிழ் மன்ற தலைவராக பணியாற்றி வரும் ராஜேஷ்கண்ணாமுருகையா.ரூ.31 லட்சம் மதிப்புள்ள இருதய நோய் கண்டறியும் ஈ.ஜி.சி கருவியை மருத்துவமனை மருத்துவ அலுவலர் தீபாவிடம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில்பேரூர் சேர்மன் ஜெயராமன் மருத்துவர்கள்.சுபா. முத்துலட்சுமி, பேரூராட்சி துணைத்தலைவர் லதா கண்ணன், கவுன்சிலர்கள் சத்தியபிரகாஷ், குருசாமி, முத்துலட்சுமிசதீஸ்குமார், செல்வராணி, ஈஸ்வரி ஸ்டாலின், சமூக ஆர்வலர்கள் பெல்மணி, மில்லர் இளமாறன், நாகேந்திரன் மணிராஜ் பலர் கலந்து கொண்டனர்.

    ×