search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரண்டாவது சந்திப்பு"

    வியட்நாம் வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு அந்நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. #TrumpKimSummit
    ஹனோய்:

    வடகொரியா ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுத சோதனைகள் நடத்தி வந்தது. அதற்கு அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. வடகொரியா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதட்டம் ஏற்பட்டது.
     
    இதைத்தணிக்கும் விதமாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அணு ஆயுதங்களை அழிக்கவும், ஏவுகணை சோதனை நடத்துவதை நிறுத்தவும் வடகொரியா ஒப்புக் கொண்டது. இந்த சந்திப்பு வரலாற்று சிறப்புமிக்கதாக கருதப்பட்டது.

    இதையடுத்து, இருநாட்டு தலைவர்களும் மீண்டும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவுசெய்யப்பட்டது. பல கட்ட ஆலோசனைக்கு பிறகு வியட்நாம் தலைநகர் ஹனோயில் நாளை (27-ம் தேதி) மற்றும் நாளை மறுதினமும் (28-ம் தேதி) சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதற்கிடையே, பியாங் யாங்கில் இருந்து தனி ரெயில் மூலம் அதிகாரிகள் அடங்கிய குழுவுடன் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் வியட்நாம் தலைநகர் ஹனோய் வந்தடைந்தார். வியட்நாம் வந்த வடகொரிய அதிபர் கிம்முக்கு அந்நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. கிம் வருகையையொட்டி டாங் டாங் நகரில் இருந்து ஹனோய் வரை 170 கி.மீ. தூரத்துக்கு சாலைகள் மூடப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விமானப்படை விமானத்தின் மூலம் புறப்பட்டு இன்று இரவு ஹனோய் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்த சந்திப்பு குறித்து டிரம்ப் டுவிட்டரில் கூறுகையில், கிம்முடன் ஆன 2-வது சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்ப்பதாக பதிவிட்டுள்ளார்.

    டிரம்ப்-கிம் வருகையை முன்னிட்டு வியட்நாமில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய ராணுவமும், போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். #TrumpKimSummit
    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடிதத்தை தொடர்ந்து, இரண்டாவது சந்திப்புக்கான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ளும்படி வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். #DonaldTrump #KimJongUn #SecondSummit
    பியாங்யங் :

    உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா பலமுறை அணு குண்டுகளையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்ததால் அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாகி பொருளாதார தடைகளை சந்தித்தது. 
     
    அமெரிக்க அதிபர் டிரம்பும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் வார்த்தை போரில் ஈடுபட்டதால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. தென்கொரியாவின் முயற்சியினால் அமெரிக்கா, வடகொரியா தலைவர்களின் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் இரு தலைவர்களின் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு நடைபெற்றது. அப்போது, அணு ஆயுதங்களை முற்றிலுமாக அழித்து விடுவதாக அறிவித்த கிம் ஜாங் அன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.



    ஆனாலும், அணு ஆயுத ஒழிப்பில் வடகொரியா மெத்தனம் காட்டுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியதற்கு, பதிலளித்த கிம் ஜாங் அன், அமெரிக்கா ஜனாதிபதி மீது தான் நம்பிக்கை வைத்துள்ளேன். அவரது ஆட்சிக் காலத்துக்குள் அணு ஆயுத ஒழிப்பு முழுமை பெறும் என கூறியதாக தெரிகிறது. அவரது இந்த நடவடிக்கையை பாராட்டி டிரம்ப் நன்றி தெரிவித்தார்.

    இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப், வட கொரிய அதிபருக்கு எழுதிய கடிதத்தில், மீண்டும் ஒரு சந்திப்பை எதிர்நோக்கி காத்திருப்பதாக  தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் எழுதிய கடிதத்தை தொடர்ந்து, இரண்டாவது சந்திப்புக்கான ஏற்பாடுகளை செய்யும்படி கிம் ஜாங் அன் தனது அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.  

    மேலும், டிரம்பின் நேர்மறையான அணுகுமுறை புதிய வழிமுறையை காட்டுகிறது. இரு நாடுகளுக்கு இடையிலான நம்பிக்கையை அதிகரிக்கும் விதமாக அவரது செயல்பாடு உள்ளது என வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார். #DonaldTrump #KimJongUn #SecondSummit
    ×