search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரட்டை சதம் அடித்த முதல் பாகிஸ்தான் வீரர்"

    இந்தியாவை கதிகலங்க வைத்த பாகிஸ்தான் பேட்ஸ்மேன் பகர் சமான் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார். #ZIMvPAK #FakharZaman
    ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டி புலவாயோவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி இமாம்-உல்-ஹக், பகர் சமான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

    ஜிம்பாப்வே அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்த இருவரும் சதம் அடித்தனர். இமாம்-உல்-ஹல் 112 பந்திலும், பகர் சமான் 92 பந்திலும் சதம் அடித்தனர். இந்த ஜோடி 42 ஓவரில் 304 ரன்னாக இருக்கும்போது பிரிந்தது. இமாம்-உல்-ஹக் 122 பந்தில் 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து ஆசிப் அலி களம் இறங்கினார். இவரும் அதிரடியாக விளையாடினார். இவர் 22 பந்தில் 50 ரன்கள் சேர்த்தார். பகர் சமான் சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். இதில் 148 பந்தில் 24 பவுண்டரி, 5 சிக்சர்கள் அடங்கும். இவர் 156 பந்தில் 210 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க பாகிஸ்தான் 50 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது.



    பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த வீரர் ஒருவர் இரட்டை சதத்தை தொட்டவர் என்ற சாதனையை பகர் சமான் படைத்துள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியாவிற்கு எதிராக சதம் அடித்து, இந்தியாவை தோற்கடிக்க முக்கிய காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×