search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இயான் புயல்"

    • அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை இயான் புயல் நிலைகுலைய வைத்தது.
    • இந்தப் புயலால் அம்மாகாணத்தில் லட்சக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை இயான் புயல் நேற்று முன்தினம் தாக்கியது. பல நகரங்களில் எங்கு பார்த்தாலும் ஒரே வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. மணிக்கு 150 மைல் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது. இது தீவிரத்தின் உயர்ந்த நிலை என்று சொல்லப்படுகிறது.

    புயல் மீட்புப் பணிகளில் ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டனர் என புளோரிடா மாகாண கவர்னர் ரான் டி சாண்டிஸ் தெரிவித்தார்.

    இந்தப் புயலின் விளைவாக புளோரிடா மாகாணத்தில் 22 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கின. மொத்தத்தில் இந்தப்புயலால் புளோரிடா மாகாணமே நிலைகுலைந்து போய் உள்ளது.

    இந்நிலையில், அமெரிக்காவை தாக்கிய இயான் புயலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 50க்கு மேல் அதிகரித்துள்ளது.

    தேச வரலாற்றில் மிக மோசம் என்ற அளவிலான தரவரிசையில் இந்த சூறாவளி புயல் இடம் பெறும். நாட்டைக் கட்டமைக்க சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் கூட ஆகும். இது புளோரிடாவுக்கு ஏற்பட்ட நெருக்கடி அல்ல, அமெரிக்காவுக்கு ஏற்பட்ட நெருக்கடி என அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

    புயல் பாதித்த இடங்களைப் பார்வையிட்டு பேரழிவை ஆய்வு செய்ய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வரும் புதன்கிழமை புளோரிடா செல்ல உள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    • இயான் புயல் காரணமாக பெய்த பலத்த மழையால் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.
    • பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டன. இதனால் போக்குவரத்து முடங்கியது.

    நியூயார்க்:

    அமெரிக்காவின் புளோரிடா மற்றும் தென்கிழக்கு அட்லாண்டிக் கடலோர பகுதிகளை 'இயான்' புயல் கடந்த 27-ந் தேதி தாக்கியது. அந்த புயல் அமெரிக்காவை தாக்கிய போது மணிக்கு 665 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.

    இது அமெரிக்காவை தாக்கிய மிக உக்கிரமான புயல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இயான் புயல் கடந்து சென்ற பாதைகளில் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியது.

    இந்த புயல் காரணமாக பெய்த பலத்த மழையால் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டன. இதனால் போக்குவரத்து முடங்கியது. கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் தடைபட்டது.

    இயான் புயல் காரணமாக அமெரிக்காவில் மின்சாரம் இன்றியும், வீடுகளை விட்டு வெளியே வர முடியாமலும் சுமார் 25 லட்சம் பேர் தவித்து வருகிறார்கள். புயல் தாக்கி 3 நாட்கள் ஆகியும் அனைத்து பகுதிகளும் இருளில் மூழ்கி கிடக்கிறது.

    • அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை இயான் புயல் நிலைகுலைய வைத்தது.
    • இந்தப் புயலால் அம்மாகாணத்தில் 22 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கின.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை இயான் புயல் நேற்று முன்தினம் தாக்கியது. பல நகரங்களில் எங்கு பார்த்தாலும் ஒரே வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. மணிக்கு 150 மைல் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது. இது தீவிரத்தின் உயர்ந்த நிலை என்று சொல்லப்படுகிறது.

    புயல் மீட்புப் பணிகளில் 7 ஆயிரம் ராணுவ வீரர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர் என புளோரிடா மாகாண கவர்னர் ரான் டி சாண்டிஸ் தெரிவித்தார்.

    இந்தப் புயலின் விளைவாக புளோரிடா மாகாணத்தில் 22 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கின.

    இயான் புயலால் ஏற்பட்டுள்ள சேதத்தின் அளவு நிச்சயம் பேரழிவாக இருக்கும் என தேசிய புயல் மையத்தின் உயர் அதிகாரியான அந்தோணி ரெய்ன்ஸ் தெரிவித்தார்.

    வெர்ஜீனியா, வட கரோலினா, தென் கரோலினா மாகாணங்களிலும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. புதன், வியாழக்கிழமை என இரு நாட்களில் 4 ஆயிரம் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    மொத்தத்தில் இந்தப்புயலால் புளோரிடா மாகாணமே நிலைகுலைந்து போய் உள்ளது.

    இந்நிலையில், இயன் சூறாவளியால் புளோரிடா மாகாணம் முழுவதும் கடும் துன்பத்தில் ஆழ்ந்துள்ளது என அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

    இந்தச் சூறாவளியால் கணிசமான உயிர் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சுவதாக அவர் குறிப்பிட்டார். மேலும், புளோரிடாவின் வரலாற்றில் மிகக் கொடிய சூறாவளியாக இந்த புயல் உருவாகலாம் என்றும் கூறினார்.

    ×