search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இயற்கை சீற்றம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 16 நாட்கள் கடந்தும் 41 பேர் இன்னமும் சுரங்கத்திற்கு உள்ளே சிக்கியுள்ளனர்
    • வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸிற்கு கீழே குறைந்துள்ளது

    மலைமாநிலம் என அழைக்கப்படும் வட இந்திய மாநிலம், உத்தரகாண்ட் (Uttarakhand).

    இங்குள்ள உத்தரகாசி (Uttarkashi) மாவட்டத்தில் நவயுகா எஞ்சினியரிங் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி எனும் நிறுவனம் சார்பில் மழை, வெயில், பனி, மலைச்சரிவு என அனைத்துவிதமான பருவகால நிலைகளிலும் பயணம் தடைபடாமல் மக்கள் பயணிக்கும் வகையில் சாலைகள் அமைக்கப்படும் பணிகள் நடந்து வந்தன.

    அவ்வாறு அமைக்கப்பட்டு வந்த ஒரு நீண்ட சாலையில் சில்க்யாரா வளைவு - பார்கோட் பகுதியில் ஒரு சுரங்கம் அமைக்கப்பட்டு வந்தது. எண் 134 தேசிய நெடுஞ்சாலையின் (NH-134) கடைசியில் யமுனோத்ரிக்கு அருகே இப்பகுதி உள்ளது.

    கடந்த நவம்பர் 12 அன்று காலை 05:30 மணியளவில் இந்த சில்க்யாரா சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. சுரங்கத்தின் நுழைவாயிலில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்தது. இதில் சுரங்கத்தின் உள்ளே பணியில் இருந்த 41 கட்டுமான ஊழியர்கள் சிக்கி கொண்டனர்.

    இதையடுத்து போர்க்கால அடிப்படையில் இந்திய அரசாங்கத்தால் அவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டது. இயந்திர கோளாறினால் மீட்பு பணியில் சிறிது தொய்வு ஏற்பட்டது. இதன் காரணமாக இயந்திர உதவி இல்லாமல், ஆட்களை கொண்டு துளையிட்டு மீட்கும் முயற்சி துவங்கியது.

    பணியாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கி கிட்டத்தட்ட 16 நாட்கள் கடந்து விட்டது. 360 மணி நேரத்திற்கும் மேலாக உள்ளே இருக்கின்ற 41 பணியாளர்களையும் மீட்கும் பணி நீண்டு கொண்டே செல்கிறது.

    இந்நிலையில், அங்கு மழைப்பொழிவு ஏற்படக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், அங்கு ஏற்பட்டிருக்கும் பனிப்பொழிவின் காரணமாக வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸிற்கும் கீழே குறைந்துள்ளது.

    இடி, மின்னல், மழை, பனிப்பொழிவு, குளிர் என எதிர்மறை வானிலை சூழல் காரணமாக மீட்பு பணி இன்னும் தொய்வடையலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால், அச்சத்தை போக்கும் வகையில், "மீட்பு பணியாளர்கள் எத்தகைய சூழலையும் கையாளும் விதத்தில் பயிற்சியும் அனுபவமும் கொண்டவர்கள்" என இந்த பணிகளை முன்னெடுத்துள்ள தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு வளர்ச்சி கார்ப்பரேஷனின் (NHIDCL) நிர்வாக இயக்குனர் மஹ்மூத் அஹ்மத் தெரிவித்தார்.

    நாட்கள் செல்ல செல்ல அவர்கள் உடல்நிலை மோசமடையலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

    முதலில் இயந்திர கோளாறினால் தொய்வடைந்த மீட்பு பணி, இயற்கை சீற்றங்களால் மேலும் நீண்டு கொண்டே செல்வது இந்திய மக்களை கவலையடைய செய்துள்ளது.

    • புதுகுப்பம் மீனவகிராமத்தில் இயற்கை சீற்றத்தால் அலைகள் அதிகரித்து வந்தது.
    • மீனவ மக்கள் பயன்படுத்துவதற்காக மீன் வலை பின்னும் கூடத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புது குப்பம் மீனவ கிராமத்தில் கடல் அலைகளால் அரிப்பு ஏற்பட்டு மீனவர்கள் அவதி அடைந்து வந்தனர் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் போது இயற்கை சீற்றத்தால் அலைகள் அதிகரித்து கடற்கரை பரப்பு கரைந்து வந்தது.

    இதனை தடுக்க கருங்கல் தடுப்பு சுவர் அமைக்க அப்பகுதி மீனவமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

    மீனவர்களின் கோரிக்கையை ஏற்று மீன்வளத்துறை சார்பாக ரூ. 9 கோடி மதிப்பில் புதுக்குப்பம் கிராம கடற்கரை பகுதியில் இருபுறமும் சிறு அலை தடுப்புச் சுவர் மற்றும் மீன் வலை பின்னும் கூடமும் அமைக்கப்பட்டது.

    இந்நிலையில் இதன் திறப்பு விழா நடை பெற்றது.

    நிகழ்ச்சிக்கு பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான நிவேதா முருகன் தலைமை வகித்தார்.

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி ,எம்.பி. ராமலிங்கம், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் ஒன்றிய செயலாளர் பஞ்சு.குமார்,பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மீனவ மக்கள் பயன்படுத்துவதற்காக சிறு அலை தடுப்புச் சுவர் மற்றும் மீன் வலை பின்னும் கூடத்தை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.

    இதேபோன்று மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பெருந்தோட்டம் ஏரியில் சுற்றுலா மையம் அமைக்கும் திட்டம் குறித்து சுற்றுச்சூழல் காலநிலை மாற்றுத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    அதனை தொடர்ந்து பெருந்தோட்டம் ஏரியில் சுற்றுலா மையம் அமைப்பதற்கான திட்ட வரைவுகளை தயார் செய்யும் படி பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    • மக்கள் எளிதில் அறிந்துகொள்ள கூடிய வகையில் நன்னிலம் பகுதியில் வேளாண் கல்லூரி கொண்டுவருதல் அவசியம்.
    • புதிய உத்திகளை தொழில்நுட்பத்தை அறிந்துகொள்ள நவீன வேளாண் அறிவியல் கல்வி என்பது மிக அவசியமாக தேவைப்படுகிறது.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகா, விவசாயம் சார்ந்த மக்கள் நிறைந்த பகுதியாகும்.

    இப்பகுதி முழுமையாக விவசாய பின்னணியையும் விவசாயக் கூலித் தொழிலாளர்களைக் கொண்ட பகுதிகளில் இருந்து வருகிறது. இப்பகுதியில் கலை, அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது.

    தற்போது உள்ள நவீன வேளாண் தொழில்நுட்பத்தை, இப்பகுதி மக்கள் எளிதில் அறிந்துகொள்ள கற்றுக்கொள்ள கூடிய வகையில், வேளாண் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக, நன்னிலம் பகுதியில் வேளாண் கல்லூரி கொண்டுவருதல் அவசியம் என நன்னிலம் பகுதி மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். விவசாயம் என்பது தற்போதைய காலகட்டத்தில், காலநிலை மாற்றத்தின் காரணமாக, இயற்கை சீற்றத்தால் பாதிப்படைந்து வரும் நிலையில், புதிய உத்திகளை தொழில்நுட்பத்தை அறிந்து கொள்ள, நவீன வேளாண் அறிவியல் கல்வி என்பது மிக அவசியமாக தேவைப்படுகிறது.

    பல்வேறு கோவிலில் உள்ள நிலங்கள் விவசாயம் சார்ந்த நிலங்கள் உள்ள காரணத்தினாலும், விளைநிலங்களை கொண்டு புதிய வகையான பயிர் வகைகளை கண்டறியவும் விதை உற்பத்தியை மேம்படுத்தவும் அரசின் வருமானத்தை பெருக்கும் வகையில் வேளாண் துறை அறநிலையத்துறை இணைந்து நன்னிலம் பகுதியில் ஏழை எளிய விவசாய மக்கள் பிள்ளைகள், வேளாண்மை அறிவைப் பெற்று கொள்ள, விவசாய கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

    • இயற்கை சீற்றங்களை தாங்கும் வகையில் வடிவமைக்க ஏற்பாடு
    • சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

    கன்னியாகுமரி:

    இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும் இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் டெல்லி மற்றும் கார்கில் போர் நடந்த இடத்தில் இருப்பது போல் கன்னியாகுமரியிலும் மிக உயரமான தேசிய கொடி கம்பம் அமைப்பதற்கு மத்திய அரசிடம் எம்.பி. விஜயகுமார் வலியுறுத்தி வந்தார்.

    அதற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து கன்னியா குமரியில் ராட்சத தேசியக்கொடி கம்பம் அமைப்பதற்கு எம்.பி. விஜயகுமார் தனது பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியில் இருந்துரூ.75 லட்சம் ஒதுக்கீடு செய்தார். இதைத் தொடர்ந்து இந்த 150 அடி உயர ராட்சத தேசிய கொடிக் கம்பத்தின் திறப்பு விழா நேற்று முன்தினம் காலை நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத், விஜயகு மார் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த தேசிய கொடிக்கம்பத்தை தமிழக தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ரிமோட் மூலம் ஏற்றினார். இந்தநிலையில் கன்னியாகுமரி பகுதியில் நேற்று வீசிய பயங்கர சூறாவளி காற்றினால் ஒரே நாளில் இந்த கொடி சேதம் அடைந்தது. சூறைக்காற்றில் இந்த தேசியக்கொடி சேதமடைந்தது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கொடியின் அடிப்பகுதியில் உள்ள பச்சை நிற பகுதியில் பச்சை நிற பகுதிசேதமடைந்து கொடிய கிழிய தொடங்கி உள்ளது. அதேபோல் மேல் புறமும் லேசாக சேதம் அடைய தொடங்கி உள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளும் கொடியை நிர்மாணிக்க காண்ட்ராக்ட் பெற்ற நிறுவன அலுவலர்களும் இதனை சரி செய்வதற்காக விரைந்துவந்தனர். அவர்கள் சேதமடைந்த அந்த தேசிய கொடியை கீழே இறக்கினர். இதனால் தற்போது 150 அடி உயரது கொடி கம்பம் தேசியக்கொடி இல்லாமல் வெறுமனே காட்சியளிக்கிறது. கன்னியாகுமரி பகுதியில் வீசும் சூறைக்காற்று மற்றும் இயற்கை சீற்றங்களுக்கு ஏற்றவாறு எந்த மாதிரியான தேசிய கொடியை தயாரிக்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்ய நிபுணர்குழு கன்னியாகுமரிக்கு வருகைதரஉள்ளது.

    இந்த குழு வந்து ஆய்வு செய்த பின்னரே அடுத்த தேசியக்கொடி ஏற்றப்படும் என்று தெரிகிறது. இதற்கு சிலநாட்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. இதனால் நேற்று மாலை 150 அடி உயர கம்பத்தில் தேசியக்கொடி பறப்பதை பார்க்க கன்னியாகுமரிக்கு வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    ×