search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இயக்குனர் வேல்சத்ரியன்"

    • வேல்சத்ரியன் புதிதாக ‘நோ’ என்ற பெயரில் சினிமா படம் எடுப்பதற்கு துணை நடிகை தேவை என்று சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தி உள்ளார்.
    • சினிமா அலுவலகத்துக்கு அந்த பெண்களை வரவழைத்து ஆபாசமாகவும், அத்துமீறியும் நடந்து இருக்கிறார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த வீரப்பன்பாளையத்தை சேர்ந்தவர் வேல்சத்ரியன் (வயது 38). இவர் சேலம் ஏ.வி.ஆர்.ரவுண்டானா பகுதியில் தனியார் கட்டிடத்தில் சினிமா கம்பெனி நடத்தி வந்தார்.

    இவர் சினிமா படம் எடுப்பதாக கூறி பல பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், அவர்களை ஆபாசமாக படம் எடுத்ததாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான ஆடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து வேல்சத்ரியன், அவரது உதவியாளர் ஜெயஜோதி (23) ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    வேல்சத்ரியன் நடத்திய அலுவலகத்தில் சோதனை செய்தபோது கம்ப்யூட்டர், பென்டிரைவ், ஹார்டு டிஸ்க் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதில் இளம்பண்களிள் அரை நிர்வாண படங்கள் உள்பட பல படங்கள் இருந்தன.

    இதையடுத்து சிறையில் உள்ள வேல் சத்ரியனை, போலீசார் 6 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் புது புது தகவல்கள் வெளியாகி உள்ளது.

    வேல்சத்ரியன் புதிதாக 'நோ' என்ற பெயரில் சினிமா படம் எடுப்பதற்கு துணை நடிகை தேவை என்று சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தி உள்ளார். இதனை பார்த்து பல பெண்கள் சினிமா வாய்ப்பு கேட்டு வேல் சத்ரியனை நாடி உள்ளனர். அப்போது வேல்சத்ரியன் முதலில் நல்லவர் போல் பேசி அந்த பெண்களை நம்ப வைத்துள்ளார்.

    மேலும் தன் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை உருவாக்கும் விதமாக உதவியாளர் ஜெயஜோதி மற்றும் ஊழியர்களை அந்த பெண்களிடம் பேச வைத்துள்ளார். இது சூப்பர் பட நிறுவனம், இந்த படத்தில் நடித்தால், நீங்கள் பிரபலமாகி விடுவீர்கள் என வார்த்தைகளை அள்ளிவிட்டுள்ளனர்.

    பெண்களின் பயோடேட்டா, புகைப்படங்களை வேல்சத்ரியன் பார்த்து, அதில் அழகான பெண்களை மட்டும் தேர்வு செய்து, அவர்களின் செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து, அவர்களின் குடும்ப பின்னணியை தெரிந்து கொண்டுள்ளார். குறிப்பாக அவர்களுடைய சமூக சூழல், வசதியானவர்களா?, எதிர்காலத்தில் ஏதேனும் பிரச்சினை வந்து விடுமா? என்பதை எல்லாம் தெரிந்து கொண்டுள்ளனர்.

    இதையடுத்து சினிமா அலுவலகத்துக்கு அந்த பெண்களை வரவழைத்து ஆபாசமாகவும், அத்துமீறியும் நடந்து இருக்கிறார். சினிமா அலுவலகத்தில் நடக்கும் அந்தரங்க நிகழ்வுகளை வெளியே சொல்லாமல் இருக்க வேண்டி வேல்சத்ரியன், அங்குள்ள ஊழியர்களுக்கு மது வாங்கி கொடுத்து வந்துள்ளார்.

    மேலும், பெண்களை மிரட்டுவதற்கு வேல்சத்ரியனின் நண்பர்களும் உதவி செய்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்ததும் வேல்சத்ரியன், நண்பர்களுடன் மது குடிப்பது வழக்கம். அப்போது வேல்சத்ரியனுக்கு பெண்களை எப்படி மயக்குவது எப்படி? அவர்களிடம் எப்படி பணம் பறிப்பது? போன்ற பல ஆலோசனைகளை வழங்கி உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

    தொடர்ந்து வேல்சத்ரியனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வேல்சத்ரியனுக்கு உதவிய நண்பர்களின் பட்டியலை போலீசார் சேகரித்துள்ளனர். அவர்களை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

    • வேல் சத்ரியனை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் சேலம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
    • வேல்சத்ரியனிடம் கிடுக்கிப்பிடி கேள்விகளை போலீசார் கேட்டு வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த வீரப்பன்பாளையத்தை சேர்ந்தவர் வேல்சத்ரியன் (வயது 38), இவர் சினிமா படம் எடுப்பதாக கூறி பல பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், அவர்களை ஆபாசமாக படம் எடுத்ததாகவும் புகார் எழுந்தது.

    இதையடுத்து சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து வேல்சத்ரியன், அவரது உதவியாளர் ஜெயஜோதி (23) ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களது அலுவலகத்தில் சோதனை செய்தபோது கம்ப்யூட்டர், பென்டிரைவ், ஹார்டுடிஸ்க் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதில் இளம் பெண்களின் அரை நிர்வாண படங்கள் உள்பட பல ஆபாச படங்கள் இருந்தன.

    இந்த நிலையில் சிறையில் உள்ள வேல் சத்ரியனின் பெண் உதவியாளர் ஜெயஜோதியை 3 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தனக்கும் வேல் சத்ரியனுக்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டது. யாரிடமெல்லாம் அவர் ஆசைவார்த்தை கூறி பாலியல் தொடர்பு வைத்திருந்தார் என்பது குறித்தும் கூறி உள்ளார்.

    தனக்கு வேல்சத்ரியன் சம்பளம் வழங்கவில்லை, எப்போதாவது பணம் தருவார், மேலும் பல பெண்களை அவர் நிர்வாணமாக படம் எடுத்ததாகவும் கூறி உள்ளார். இதையடுத்து ஜெயஜோதியை அவர்கள் நடத்தி வந்த அலுவலகத்திற்கும் அழைத்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர்.

    பின்னர் 3 நாட்கள் காவல் முடிந்ததை அடுத்து ஜெயஜோதியை நேற்று போலீசார் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை மீண்டும் பெண்கள் கிளை சிறையில் அடைத்தனர்.

    இதற்கிடையே வேல் சத்ரியனை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் சேலம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் நீதிமன்ற நடுவர் தினேஷ் அவரை 6 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். இதையடுத்து உதவி கமிஷனர் நாகராஜன் தலைமையிலான போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதில் யார்? யாரை மிரட்டி வேல்சத்ரியன் ஆபாச படம் எடுத்தார், யார்? யாருடன் உல்லாசமாக இருந்தார், எத்தனை பேரிடம்? எவ்வளவு பணம்? வசூல் செய்தார் என்பது குறித்தும் கிடுக்கிப்பிடி கேள்விகளை போலீசார் கேட்டு வருகிறார்கள். விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

    • சத்ரியன் இளம்பெண்கள் மற்றும் அவர்களது பெற்றோருடன் பேசும் ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
    • ஆன்லைன் மற்றும் செல்போன்களில் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கூறி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்தவர் வேல்சத்ரியன் (வயது 38), இவர் சினிமா படம் எடுப்பதாக கூறி பல பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், அவரை ஆபாசமாக படம் எடுத்ததாகவும் புகார் எழுந்தது.

    இதையடுத்து சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து வேல்சத்ரியன், அவரது உதவியாளர் ஜெயஜோதி (23) ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் நடத்திய அலுவலகத்தில் சோதனை செய்தபோது கம்ப்யூட்டர், பென்டிரைவ், ஹார்டு டிஸ்க் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. அதனை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இதில் இளம்பெண்களிள் அரை நிர்வாண படங்கள் உள்பட பல படங்கள் இருந்தன. மேலும் சத்ரியன் இளம்பெண்கள் மற்றும் அவர்களது பெற்றோருடன் பேசும் ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    போலீசார் நடத்திய விசாரணையில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் படம் நடிக்கும் ஆசையில் அங்கு வந்ததாகவும், அவர்களிடம் தலா ரூ.30 ஆயிரம் வீதம் சுமார் ஒரு கோடி வரை வேல் சத்ரியன் வசூல் செய்ததாகவும் புகார் எழுந்தது.

    இதற்கிடையே ஆன்லைன் மற்றும் செல்போன்களில் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கூறி வருகிறார்கள். இதுகுறித்து துணை கமிஷனர் மாடசாமி தலைமயிலான போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் சிறையில் உள்ள வேல் சத்திரியனின் பெண் உதவியாளர் ஜெயஜோதி (23) 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சேலம் கூடுதல் நீதிமன்றத்தில் போலீசார் மனுதாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி 3 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினார்.

    இதையடுத்து அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்போது ஏராளமான பெண்களை சினிமா ஆசை காட்டி ஆபாச படம் எடுத்ததாகவும், அதனை வேல் சத்ரியன் விடிய விடிய இரவில் பார்த்து ரசித்து வந்ததும் தெரிய வந்தள்ளது.

    மேலும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசைவார்த்தை கூறி அலுவலகத்தில் சூட்டிங் நடத்தி உள்ளார். அப்பெண்ணை ஏமாற்றும் வகையில் பொட்டச்சி என்ற படத்தில் கதாநாயகி நீதான் என கூறி அந்த பெண்ணை பலாத்காரம் செய்ததும் தெரிய வந்தது.

    மேலும் ஏரோநாட்டிக்கல் படித்ததாக கூறும் ஜெயஜோதி சேலம் சட்டக்கல்லூரியில் படிக்க ஆசைப்பட்டு சேலம் வந்த நிலையில் அங்கு வேலைக்கு சேர்ந்ததும் தெரிய வந்தது. வேல்சத்ரியன் காம சேட்டைகள் குறித்து முக்கிய தகவல்களை அவர் போலீசாரிடம் கூறி உள்ளார்.

    இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் மேலும் பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்பதால் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

    • வேல்சத்ரியன் 300-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி உள்ளார்.
    • சேலம், கோவை, திருப்பூர், கள்ளக்குறிச்சி என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இளம்பெண்கள் அவரிடம் ஏமாந்து இருப்பது தெரியவந்துள்ளது.

    சேலம்:

    சேலம் ஏ.வி.ஆர்.ரவுண்டானா பகுதியில் தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்த சினிமா கம்பெனியில் வேலை பார்த்து வந்த சேலம் இரும்பாலையை சேர்ந்த இளம்பெண் ஒருவர், சேலம் மாவட்டம் எடப்பாடி வீரப்பன்பாளையத்தை சேர்ந்த இயக்குனர் வேல்சத்ரியன் (வயது 38), இவரது பெண் உதவியாளர் ராஜபாளையத்தை சேர்ந்த ஜெயஜோதி (23) ஆகியோர் மீது சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் கொடுத்தார்.

    அதில் செல்போனை பறித்துக்கொண்டு மிரட்டுவதாகவும், பல இளம்பெண்களை வைத்து ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி சீரழிப்பதாகவும் புகார் கொடுத்தார்.

    இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. வேல்சத்திரியன் புதிதாக 'நோ' என்ற பெயரில் சினிமா படம் எடுப்பதற்கு துணை நடிகை தேவை என்று சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தினார். இதனால் அவரை நம்பி ஏராளமான பெண்கள் சினிமா வாய்ப்பு தேடி வந்தனர்.

    அப்போது அவர்களிடம் வேல்சத்ரியன், நான் உங்களை பெரிய நடிகை போல் ஆக்குகிறேன் என்று ஆசைவார்த்தை கூறி அவர்களை பல்வேறு கோணங்களில் ஆபாசமாக படம் எடுத்துள்ளார் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து சேலத்தில் உள்ள வேல்சத்ரியன் சினிமா நிறுவனத்தில் இருந்து 30-க்கும் மேற்பட்ட ஹார்ட் டிஸ்குகள், கணினிகள் மடிக்கணினிகள், கேமரா, பென்டிரைவ் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இவை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    வேல்சத்ரியன் 300-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி உள்ளார். இதில் சேலம், கோவை, திருப்பூர், கள்ளக்குறிச்சி என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இளம்பெண்கள் அவரிடம் ஏமாந்து இருப்பது தெரியவந்துள்ளது.

    இதையடுத்து போலீசார், வேல் சத்ரியன், ஜெயஜோதி ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் போலீசார் ஜெயிலில் அடைத்தனர்.

    பாதிக்கப்பட்ட பெண்கள் ரகசியமாக போலீஸ் நிலையம் வந்து எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்து செல்கின்றனர். இதைத்தவிர 20-க்கும் மேற்பட்ட பெண்கள் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் நஜ்முல் ஹோதாவிடம் கண்ணீர் மல்க புகார் கொடுத்துள்ளனர்.

    மேலும் பல பெண்கள் ஆன்லைன் வழியாகவும் புகார்கள் கொடுத்து வருகிறார்கள். இதனால் இயக்குனர் வேல்சத்திரியன் மீது ஏராளமான புகார்கள் குவிகிறது. இதனை தொடர்ந்து ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள வேல் சத்ரியன், ஜெயஜோதி ஆகியோரை காவலில் எடுத்து விசாரிப்பதற்கான நடவடிக்கைகளை போலீஸ் அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.

    ×