search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இம்ரான் கான்"

    • இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
    • மனைவி புஷ்ராபீவிக்கு ஜெயிலில் வழங்கப்படும் உணவில் கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ரசாயனம் கலந்து கொடுக்கப்படுகிறது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து 2022-ம் ஆண்டு வரை முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் பிரதமராக இருந்தார். அப்போது வெளிநாட்டு தலைவர்கள், பிரமுகர்கள் அளித்த பரிசுப்பொருட்களை அரசிடம் ஒப்படைக்காமல் விற்று ஊழல் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும் பல்வேறு ஊழல் புகார்களும் எழுந்தது.

    இது தொடர்பாக இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு 14 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து இருவரும் பாகிஸ்தான் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் தனது மனைவிக்கு ஜெயிலில் விஷம் கொடுத்து கொல்ல முயற்சிப்பதாக இம்ரான்கான் ஏற்கனவே குற்றம்சாட்டி இருந்தார். என் மனைவி ஜெயிலில் அடைக்கப்பட்டதற்கு ராணுவ தளபதி ஜெனரல் அசீம் முஷிர்தான் காரணம் என்றும் மனைவிக்கு ஏதாவது நேர்ந்தால் அவரை விட மாட்டேன், அரசியல் சட்டத்துக்கு விரோதமான அவரது சட்ட விரோத நடவடிக்கையை அம்பலப்படுத்துவேன் என்றும் இம்ரான் கான் கூறினர்.

    தற்போது மீண்டும் அவர் புதிய குற்றச்சாட்டினை சுமத்தி உள்ளார்.

    49 வயதாகும் தனது மனைவி புஷ்ராபீவிக்கு ஜெயிலில் வழங்கப்படும் உணவில் கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ரசாயனம் கலந்து கொடுக்கப்படுகிறது.

    இதனால் அவர் நெஞ்சு எரிச்சல், தொண்டை வலி, வயிற்று வலியால் அவதிப்பட்டு வருகிறார். அவரது உடல்நிலை மோசம் அடைந்து வருகிறது. ஆனால் மனைவிக்கு மருத்துவ பரிசோதனை செய்யாமல் இருப்பதில் ஜெயில் அதிகாரிகள் பிடிவாதமாக இருக்கிறார்கள். எனவே தனியார் மருத்துவமனை மூலம் மனைவிக்கு மருத்துவ பரிசோதனை செய்யவேண்டும் என இம்ரான்கான் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இதையடுத்து இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ராபீவிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. இந்த உத்தரவால் இருவருக்கும் விரைவில் மருத்துவ பரிசோதனை நடைபெற உள்ளது.

    • பி.டி.ஐ. மற்றும் அரசு சாராத சில நிறுவனங்கள் தெரிவித்தன.
    • அரசியலமைப்பின் 6-வது பிரிவின் கீழ் தேசத்துரோகத்திற்கு சமம்.

    பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் (பி.டி.ஐ.) கட்சியின் நிறுவனரும், அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் அல்-காதர் அறக்கட்டளை ஊழல் வழக்கு விசாரணைக்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், மக்கள் ஆணையை திருடிய அதிகாரிகள் மீது தேசத்துரோக வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

    இதுதொடர்பாக பேசிய அவர், "முதலில் எங்களது கட்சி சின்னத்தை சதி செய்து முடக்கினர். தேர்தலுக்கு பிறகு கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களின் பங்கு பறிக்கப்பட்டன. மக்களின் ஆணை திருடப்பட்டு இருப்பது அரசியலமைப்பின் 6-வது பிரிவின் கீழ் தேசத்துரோகத்திற்கு சமமானது."

    "நடைபெற்று முடிந்த தேர்தலில் எனது கட்சியினர் மட்டும் மூன்று கோடி வாக்குகளை பெற்றனர். இதே வாக்குகளை தேர்தலை சந்தித்த மற்ற 17 கட்சிகளும் கூட்டாக பெற்றன. தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதை பி.டி.ஐ. மற்றும் அரசு சாராத சில நிறுவனங்கள் தெரிவித்தன."

    "தேசிய சபை மற்றும் மாகாண சபைகளுக்கான ஒதுக்கீட்டு இடங்கள் குறித்து பெஷாவர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறோம். பி.டி.ஐ. கட்சி இடங்களை தேர்தல் ஆணையம் மற்ற அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்க முடியாது," என்று தெரிவித்தார்.

    • பாராளுமன்றத்தை கூட்ட பாகிஸ்தான் அதிபர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
    • அடுத்த வாரம் நவாஸ் ஷெரீப்- பிலாவல் பூட்டோ கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க இருப்பதாக தகவல்.

    பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெற்று முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடைபெற்று 3 வாரங்கள் முடிவடைய இருக்கும் நிலையிலும் இன்னும் ஆட்சி அமைக்கப்படவில்லை.

    இந்த நிலையில்தான், பாகிஸ்தானின் நாட்டின் காபந்து பிரதமராக இருக்கும் அன்வார்-உல்-ஹக் கக்கார் தனது பிரதமர் அலுவலக பணிகள் அனைத்தையும் நிறுத்தியுள்ளார். தனது ஒப்புதலுக்காக வைக்கப்பட்டுள்ள கோப்புகள் அனைத்திலும் கையழுத்திடவில்லை. முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்த்துள்ளார். "புதிய அரசின் தொடக்கத்திற்காக நாங்கள் காத்திருக்கிறோம். எங்களுடைய செயல்பாடுகள், திட்டங்கள் உள்ளிட்ட அனைத்தையும் புதிய நிர்வாகத்திடம் வழங்குவோம்" என்றார்.

    பாகிஸ்தானின் காபந்து அரசின் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம், பிப்ரவரி 29-ந்தேதி பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும். புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பதற்காக இதை நடவடிக்கைக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என அதிபர் ஆரிஃப் அல்விக்கு கடிதம் அனுப்பியிருந்தது. ஆனால், பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சகத்தின் கோரிக்கை பாகிஸ்தான் அதிபர் நிராகரித்துள்ளார்.

    மேலும், புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பதற்கு முன்னதாக அனைத்து ஒதுக்கீடு இடங்களும ஒதுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

    2018-ம் ஆண்டும் ஆரிஃப் அலிவி பாகிஸ்தான் அதிபராக தேர்வு செய்யப்படுவதற்கு முன்னதாக இம்ரான் கான் கட்சியின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இம்ரான் கான் கட்சி அதிக இடங்களை பிடித்தும் ஆட்சியமைக்க முடியவில்லை.

    நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்- பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை இணைந்து ஆட்சி அமைக்க இருக்கின்றன. அடுத்த வாரம் ஆட்சி அமைக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    நவாஸ் ஷெரீப் சகோதரர் ஷெபாஷ் ஷெரீப் பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். ஆசிப் அலி சர்தாரி ஜனாதிபதி தேர்தலுக்கு இரு கட்சி சார்பிலான வேட்பாளராக நிறுத்தப்படுவார் எனத் தெரிகிறது.

    பாகிஸ்தானின் அரசியலமைப்பு சட்டத்தின்படி தேர்தல் முடிந்து 21 நாட்களுக்குள் பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும். அதன்படி 29-ந்தேதி பாராளுமன்றத்தை கூட்ட அமைச்சகம் ஒப்பதல் கேட்டிருந்தது.

    • இம்ரான் கான் கட்சி 93 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக திகழ்கிறது.
    • தேர்தல் முடிவு மாற்றப்பட்டதாக இம்ரான் கான் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.

    பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக இம்ரான் கான் கட்சி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் நிலையில், தவறு நடந்துள்ளன. அதற்கு பொறுப்பேற்று தனது பதவியை அதிகாரி ஒருவர் ராஜினாமா செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ராவல்பிண்டியின் முன்னாள் கமிஷனரான லியாகத் அலி சத்தா, இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் பத்திரிகையாளர்களின் பேசினார். அப்போது "தோல்வியடைந்த வேட்பாளர்கள் வெற்றி பெற்றவர்களாக மாற்றப்பட்டனர்.

    நடந்த அனைத்து தவறுகளுக்கும் நான் பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேன். தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தலைமை நீதிபதி முழுவதுமாக இதில் ஈடுபட்டார்கள்.

    இதற்கு பொறுப்பு ஏற்றுக் கொண்ட லியாகத் அலி சத்தா தனது அதிகாரி பதவியை ராஜினாமா செய்தார். மேலும், நாட்டின் முதுகில் குத்துவது தன்னை தூங்க விடாது என்றார். நீதிக்கு எதிரான இந்த செயலுக்காக நான் தண்டிக்கப்பட வேண்டும். அதேபோல் மற்றவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். இந்த அரசியல் தலைவர்களுக்கான எந்த தவறான செயல்களில் ஈடுபடாதீர்கள் என்பதுதான் என்னுடையே வேண்டுகோள்" எனத் தெரிவித்துள்ளார்.

    அதிகாரியின் இந்த குற்றச்சாட்டு பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பாகிஸ்தான் நாட்டில் கடந்த 8-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்த கையோடு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆனால், முடிவுகள் அறிவிக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது. இம்ரான் கானின் தெஹ்ரிக்-ரீ-இன்சாப் கட்சி ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் பல இடங்களில் வெற்றி பெற்றதாகவும், முடிவுகள் மாற்றப்பட்டதாகவும், அக்கட்சியினர் குற்றஞ்சாட்டினர்.

    அதன்பின் சனிக்கிழமை இறுதியாக அனைத்து தொகுதிகளுக்குமான முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால் இம்ரான் கான் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது. மேலும் பொதுத்தேர்தலில் நாங்கள்தான் வெற்றி பெற்றோம் என அறிவித்தார்.

    இதற்கிடையே நவாஸ் ஷெரீப் நாங்கள்தான் வெற்றி பெற்றோம் என போட்டியாக அறிவித்தார். அத்துடன் பிலாவல் பூட்டோ உடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க ஷெரீப் முடிவு செய்தார்.

    பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் இம்ரான் கான் கட்சி 93 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக திகழ்கிறது. நவாஸ் ஷெரீப் கட்சி 75 இடங்களிலும், பிலாவல் பூட்டோ கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

    • பாகிஸ்தானில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
    • நவாஸ் ஷெரீப்- பிலாவல் பூட்டோ கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளன.

    பாகிஸ்தானில் கடந்த வாரம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இம்ரான் கான், நவாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ ஆகியோர் கட்சிகளுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலவி வருகிறது.

    பாகிஸ்தானை காப்பாற்ற நவாஸ் ஷெரீப்- பிலாவல் பூட்டோ ஆகியோர் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து இரு கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே தனிப்பட்ட முறையில் நாங்கள்தான் அதிக இடம் பெற்றுள்ளோம். அதனால் எங்களைத்தான் ஆட்சி அமைக்க அழைப்பார்கள் என இம்ரான் கான் கட்சி தெரிவித்து வருகிறது.

    இதனால் இரண்டு பக்கத்தில் இருந்தும் வெற்றி பெற்றவர்களை இழுப்பதற்கான குதிரை பேரம் நடைபெற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    இந்த நிலையில் எந்த அரசு அமைந்தாலும் அதனுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    தேர்தலின்போது முறைகே நடைபெற்றதாக வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    மொத்தமுள்ள 264 இடங்களில் ஆட்சியை பிடிக்க 133 இடங்கள் தேவை. தனிப்பட்ட கட்சி அளவில் எடுத்துக் கொண்டால் இம்ரான் கான் கட்சி அதிக இடங்களை பிடித்துள்ளது. நாவஸ் ஷெரீப் மற்றும் பிலாவல் பூட்டோ கட்சியை தவிர்த்து மற்ற கட்சிகளுடன் சேர்த்து பார்த்தால் இம்ரான் கானுக்கு சரியாக 135 இடங்கள் வரும். இது ஆட்சி அமைக்க போதுமானது.

    நவாஸ் ஷெரீப் பிலாவல் பூட்டோ கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளார். இவர்களுக்கு (75+54) 129 இடங்கள் உள்ளன. இன்னும் 4 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. சுயேட்சை வேட்பாளர்களை இழுக்க வாய்ப்புள்ளது. அல்லது சிறிய கட்சிகளை இணைத்துக் கொள்ளலாம்.

    • நவாஸ் ஷெரீப் கட்சி 75 இடங்களிலும், பிலாவல் பூட்டோ கட்சி 54 இடங்களிலும் வெற்றி.
    • இம்ரான் கான் கட்சி 93 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக திகழ்கிறது.

    பாகிஸ்தானில் கடந்த வியாழக்கிழமை பொதுத்தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த கையோடு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆனால், நேற்றுதான் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்ததாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

    இம்ரான் கான் கட்சி 93 இடங்களிலும், நவாஸ் ஷெரீப் கட்சி 75 இடங்களிலும், பிலாவல் பூட்டோ கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மற்ற கட்சிகள், சுயேட்சைகள் 42 இடங்களை பிடித்துள்ளன.

    மொத்தம் 264 இடங்களில் ஆட்சியை பிடிக்க 133 இடங்கள் தேவை. தனிப்பட்ட கட்சி அளவில் எடுத்துக் கொண்டால் இம்ரான் கான் கட்சி அதிக இடங்களை பிடித்துள்ளது. நாவஸ் ஷெரீப் மற்றும் பிலாவல் கட்சியை தவிர்த்து மற்ற கட்சிகளுடன் சேர்த்து பார்த்தால் இம்ரான் கானுக்கு சரியாக 135 இடங்கள் வரும். இது ஆட்சி அமைக்க போதுமானது.

    ஆனால் நவாஸ் ஷெரீப் பிலாவல் பூட்டோ கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளார். இதை இரண்டு கட்சி தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். இவர்களுக்கு 128 இடங்கள் உள்ளன. இன்னும் 5 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. சுயேட்சை வேட்பாளர்களை இழுக்க வாய்ப்புள்ளது. அல்லது சிறிய கட்சிகளை இணைத்துக் கொள்ளலாம்.

    அரசியல் உறுதியற்ற நிலையில் பாகிஸ்தானை காப்பாற்ற கொள்கையளவில் ஒப்புக்கொண்டுள்ளன. நாட்டின் அரசியல் நிலைத்தன்மைக்கா அரசியல் ரீதியிலான ஒத்துழைக்க ஒப்புக்கொண்டுள்ளன.

    • 266 இடங்களுக்கான தேர்தல் பிப்ரவரி 8 அன்று நடந்தது
    • பூட்டோ, நவாஸ் பேச்சு வார்த்தையை தொடங்கினர்

    பாகிஸ்தான் பாராளுமன்றம், செனட் (Senate) எனும் மேல்சபை மற்றும் தேசிய அசெம்பிளி (National Assembly) எனும் கீழ்சபை ஆகிய இரு அவைகளை கொண்டது.

    தேசிய அசெம்பிளியில் 342 இடங்கள் உள்ளன.

    இவற்றில் 266 இடங்களுக்கான உறுப்பினர்கள் பொதுமக்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

    இவற்றை தவிர 70 இடங்கள் பெண்களுக்கும், மைனாரிட்டி வகுப்பினருக்கும், 6 இடங்கள் மலைவாழ் மக்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    கடந்த சில வருடங்களாக பாகிஸ்தான் பொருளாதாரம் நலிவடைந்துள்ளது.

    இந்நிலையில், கடந்த பிப்ரவரி 8 அன்று மக்களவைக்கான தேர்தல் நடைபெற்றது.

    பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் (Election Commission of Pakistan) இன்று முடிவுகளை வெளியிட்டது.

    இணையதொடர்பு தட்டுப்பாடு காரணமாக சுமார் 60 மணி நேரம் கடந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதன்படி, முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இன்சாஃப் (Pakistan Tehreek-Insaaf) கட்சியை சேர்ந்தவர்கள், முடிவு அறிவிக்கப்பட்ட 264 இடங்களில் 101 இடங்களில் வென்றுள்ளனர். இம்ரான் கான் கட்சியை சேர்ந்த பலர் சுயேட்சை வேட்பாளர்களாக களம் இறங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. பிடிபி கட்சி, அரசு அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மைக்கு குறைவாக 32 இடங்களே பெற்றுள்ளது.

    முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (Pakistan Muslim League) கட்சி 73 இடங்களில் மட்டுமே வென்றது.

    பிலாவல் பூட்டோ ஜர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (Pakistan People's Party) வேட்பாளர்கள் 54 இடங்களில் வென்றுள்ளனர்.

    வாக்கு எண்ணிக்கையில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாக பரவலாக பலர் குற்றம் சாட்டினர்.

    இம்ரான் கான், அதிபராவதை தடுக்கும் முயற்சியாக நவாஸ் ஷெரீப் மற்றும் பூட்டோ இருவரும் கூட்டணி ஆட்சி அமைக்க பேச்சு வார்த்தையை தொடங்கி விட்டனர்.

    வரும் நாட்களில் அதிபர் யார் என்பது உறுதியாகி விடும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.

    • தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக முடிக்கப்படவில்லை.
    • தேர்தல் முடிவு காலதாமதம் ஆனதால் இம்ரான் கான் கட்சி இன்று போராட்டம் நடத்தி வருகிறது.

    பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் கடந்த 8-ந்தேதி நடந்தது. அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை உடனே தொடங்கினாலும் அனைத்து தொகுதிகளுக்கான முடிவுகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

    இதற்கிடையே வாக்குப்பதிவின் போது பல இடங்களில் வாக்குச்சீட்டு, வாக்குப்பெட்டிகள் சேதப்படுத்தப்பட்டன. இவ்வாறு சேதம் அடைந்த வாக்குசாவடிகள் குறித்து தகவல் சேகரித்து வருகிறது தேர்தல் ஆணையம். மேலும், தகவல் தெரிவிக்கவும் வலியுறுத்தியுள்ளது.

    அதன்படி சுமார் 50-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை வந்ததாக தெரிகிறது. அதனடிப்படையில் வருகிற 15-ந்தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    நேற்று இரவுக்குள் அனைத்து இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும். இல்லையெனில் இன்று போராட்டம் நடத்தப்படும் என இம்ரான் கான் கட்சி தெரிவித்திருந்தது. இன்று காலை வரை சுமார் 10 தொதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. அதனால் அறிவித்தபடி அக்கட்சியினர் இன்று போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    265 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்த நிலையில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சியின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் அதிக இடங்களில் முன்னிலை பெற்றதாக தெரிவித்தனர். தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்று உள்ளதாக அந்த கட்சியினர் அறிவித்தனர்.

    மேலும் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டினர். ஆனால் தேர்தலில் தனது கட்சி தான் வெற்றி பெற்றதாக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்தார்.

    255 இடங்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் முன்னாள் பிரதமா் இம்ரான்கானின் பாகிஸ்தான்-தெஹ்ரீப்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளா்கள் 101 இடங்களை பெற்று முதலிடத்தில் உள்ளனர். நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி 73 இடங்களிலும், பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளன. 27 இடங்களில் சிறிய கட்சிகள் வெற்றிப் பெற்றன.

    ஆட்சி அமைக்க 133 இடங்கள் தேவை என்கிற நிலையில் எந்த கட்சியும் பெரும்பான்மை பெற வில்லை. இதனால் ஆட்சியை அமைப்பதில் தொடா்ந்து இழுபறி நீடிக்கிறது.

    அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய ஒற்றுமை அரசை அமைக்க நவாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்து உள்ளார். மேலும் அவரது கட்சி, பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட பிற கட்சி களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நவாஸ் ஷெரீப்-பிலாவல் பூட்டோவின் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க இன்னும் அவர்களுக்கு 6 இடங்கள் தேவைப்படுகிறது.

    ஆனால் நவாஸ் ஷெரீப் கட்சியுடன் அதிகாரப்பூர்வ மாக இன்னும் பேச்சு வார்த்தை எதுவும் நடத்த வில்லை என்று பிலாவல் பூட்டோ தெரிவித்தார்.

    இதற்கிடையே சுயேட்சை வேட்பாளர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. 3 சுயேட்சை வேட்பா ளர்கள் நவாஸ் ஷெரீப் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். நவாஸ் ஷெரீப் புக்கு பாகிஸ்தான் ராணுவம் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது.

    • பாகிஸ்தான் தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.
    • இம்ரான் கான் கட்சி 93, நவாஸ் ஷெரீப் கட்சி 73, பிலாவல் பூட்டோ கட்சி 54.

    பாகிஸ்தானில் கடந்த வியாழக்கிழமை பொதுத்தேர்தல் நடைபெற்றது. தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த உடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

    வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதல் சுற்று முடிவில் இம்ரான் கான் கட்சி அதிக இடங்களில் முன்னிலைப் பெற்றதாக கூறப்படுகிறது.

    அதேவேளையில் முடிவுகளை தேர்தல் ஆணையம் அறிவிக்காமல் காலம் தாழ்த்தியது. இதனால் நவாஸ் ஷெரீப்புக்கு ஆதரவாக தேர்தல் முடிவுகள் மாற்றப்படுவதாக இம்ரான் கான் கட்சியினர் குற்றம்சாட்டினர்.

    அதன்பின் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு முதற்கட்ட தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்பின் மெல்ல மெல்ல முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. இன்னும் 8 தொகுதிகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் முடிவுகள் தாமதமாக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று இம்ரான் கான் கட்சியினர் நாடு தழுவிய போராட்டம் நடத்துகின்றனர்.

    இம்ரான கான், நவாஸ் ஷெரீப் ஆகியோர் தாங்கள்தான் வெற்றி பெற்றுள்ளோம் என மாறிமாறி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

    இதற்கிடையே நவாஸ் ஷெரீப் கட்சி, பிலாவால் பூட்டோ கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொள்ளவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதேவேளையில் சிறுசிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து இம்ரான் கான் கட்சி ஆட்சியமைக்க முயற்சித்து வருகிறது.

    நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) 73 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிலாவால் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களில் வெள்ளி பெற்றுள்ளது.

    ஏற்கனவே பொருளாதார சிக்கலில் தவித்து வரும் பாகிஸ்தான், தற்போது எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் ஸ்திரதன்மையான ஆட்சி அமைப்பதில் தவித்து வருகிறது.

     இம்ரான் கான் கட்சியின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் 93 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். மற்ற சிறுசிறு கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 36 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

    266 தொகுதிகளை கொண்ட பாகிஸ்தானில் ஆட்சியமைக்க 134 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேர்தல் முடிந்த கையோடு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
    • தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    பாகிஸ்தானில் நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த கையோடு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

    தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி, பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி, இம்ரான் கானின் பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி ஆகியவை இடையே போட்டி நிலவுகிறது.

    இம்ரான் கான் கட்சியின் சின்னம் முடக்கப்பட்டதால் அக்கட்சியின் வேட்பாளர்கள் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்டனர். இதனால் இம்ரான் கான் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் எனக் கருதப்படுகின்றனர்.

    வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் இம்ரான் கான் கட்சியின் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் முன்னிலை பெற்றதாக தெரிகிறது. நவாஸ் ஷெரீப் கட்சிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்படுவதாக தகவல் வெளியானது.

    இதனால் இம்ரான் கான் கட்சி தலைவர்கள் தேர்தல் ஆணையம் மீது சந்தேகம் எழுப்பியுள்ளனர். இந்த நிலையில் அதிகாலை 3 மணிக்கு தேர்தல் ஆணையத்தின் சிறப்பு செயலாளர் ஜபர இப்பால் முதல் முடிவை வெளியிட்டார்.

    அதன்படி இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் மூன்று பேர் வெற்றி பெற்றுள்ளனர். கைபர் பக்துன்கா மாகாணத்தில் உள்ள பிகே-76 தொகுதியில் சமியுலலா கான் 18 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மற்றொரு வேட்பாளர் பஜல ஹக்கீம் கான் பிகே-6 தொகுதியில் 25330 வாக்குகள் பெற்று பெற்று பெற்றுள்ளார். அதேபோல் அலிகான் பிகே-4 தொகுதியில் 30022 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இம்ரான் கான் ஆட்சியமைக்கும் அளவிற்கு போதுமான இடங்களை பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், தேர்தல் ஆணையம் முடிவுகளை அறிவிக்காமல் தாமதப்படுத்துகிறது. தேர்தல் முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளது என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

    நவாஸ் ஷெரீப் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் கட்சி அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டு சென்றதாக தெரிகிறது.

    இம்ரான் கான் கட்சியின் வெற்றியை தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையம் மோசடி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் முடிவுகள் அறிவிக்கப்படும் என பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    • தனது ஆட்சியை கவிழ்க்க அமெரிக்கா சதி செய்வதாக ஒரு பேரணியில் இம்ரான் கூறினார்
    • ராவல்பிண்டி நகரில் ஒரு சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட்டு வழக்கு விசாரிக்கப்பட்டது

    2018 ஆகஸ்ட் மாதம், பாகிஸ்தானின் தெஹ்ரிக்-ஏ-இன்சாஃப் கட்சியின் அதிபரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான், கூட்டணி கட்சிகளின் உதவியுடன் பிரதமராக பதவி ஏற்றார்.

    2022 மார்ச் 27 அன்று ஒரு பேரணியில் தன்னை பதவியில் இருந்து நீக்க அமெரிக்க அரசு பாகிஸ்தான் அரசுக்கு ஒரு ரகசிய தகவல் அனுப்பியதாகவும், அது வாஷிங்டன் நகரில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இருந்து வந்ததாகவும் தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்து, அந்த சதி தொடர்பான கடிதம் தன்னிடம் உள்ளதாக கூட்டத்தினரை பார்த்து ஒரு கடிதத்தையும் காட்டினார்.

    ஆனால், பாகிஸ்தான் அரசும், அமெரிக்க அரசும் இம்ரான் கானின் குற்றச்சாட்டை மறுத்தன.

    2022 ஏப்ரல் 10 அன்று கூட்டணி கட்சிகள் இம்ரான் கான் மீது கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விளைவாக அவர் பதவி இழந்தார்.

    அந்த ரகசிய செய்தி குறிப்பு "சைஃபர்" என அழைக்கப்படுகிறது.

    ஒரு முன்னாள் பிரதமராக இருந்தும் அதனை பொதுவெளியில் அம்பலப்படுத்த முயன்றதால், அரசாங்க ரகசியத்தை காக்க தவறியதாக அவர் மீது புகார் எழுந்தது.

    மேலும், அரசாங்க ரகசியத்தை காக்க தவறிய குற்றத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    "சைபர் வழக்கு" (cipher case) என பெயரிடப்பட்ட இதனை விசாரித்த இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

    ஆனால், தொடர்ந்து ஒரு சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட்டு இவ்வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டது.

    இந்நிலையில், பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில், அடியாலா சிறைச்சாலையில் நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையில், நீதிபதி அபுல் ஹஸ்னத் ஜுல்கர்னைன், இம்ரான் கானும், அவரது கட்சியின் துணைத்தலைவர் ஷா மஹ்மூத் குரேஷி என்பவரும் குற்றவாளிகள்தான் என தீர்ப்பு வழங்கி, அவர்களுக்கு 10 வருட சிறை தண்டனையும் வழங்கியுள்ளார்.

    இத்தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் இம்ரான் கான் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது.

    ஆனாலும், பிப்ரவரி 8 அன்று அந்நாட்டில் நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் இம்ரான் கான் போட்டியிடுவது சந்தேகம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • இந்திய தூதரக உயர் அதிகாரியாக பதவி வகித்தவர் அஜய் பிசாரியா.
    • அவர் பாலகோட் தாக்குதல் நடந்தபோது ஏற்பட்ட அனுபவங்களை தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    பாகிஸ்தானுக்கான இந்திய தூதரக முன்னாள் உயர் அதிகாரியாக பணியாற்றியவர் அஜய் பிசாரியா. இவர் சமீபத்தில் "தி ஆங்கர் மேனேஜ்மேன்ட்: இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்சனைக்குரிய ராஜதந்திர உறவு" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

    அதில், பாலகோட் வான்வழித் தாக்குதலுக்கு பின் நடந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ராணுவ நெருக்கடியைத் தவிர்க்கும் முயற்சியில் பிப்ரவரி 27, 2019 அன்று பிரதமர் மோடிக்கு நள்ளிரவில் அழைப்பு விடுத்தார். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தூதரக அதிகாரிகளை அனுப்பிவைக்க தயாராக இருப்பதாகவும், சீனா இரு நாடுகளுக்கும் துணை மந்திரிகளை அனுப்பிவைக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தன. ஆனால் தேவையில்லை என இந்தியா மறுத்துவிட்டது என குறிப்பிட்டுள்ளார்.

    ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் 2019, பிப்ரவரி 14 அன்று இந்திய ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பிப்ரவரி 26 அன்று பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத பயிற்சி முகாம் மீது இந்திய விமானப்படை சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல் நடத்தியது.

    அடுத்த நாள் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சித்தது. அப்போது இந்திய விமானப்படை விமானம் பாகிஸ்தான் விமானங்களை விரட்டி அடித்து, ஒரு விமானத்தை சுட்டு வீழ்த்தியது. அப்போது இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தான் எல்லையில் சிக்கிக் கொண்டார். அவரை இந்தியா கொண்டு வர முயற்சி செய்தபோது, பாகிஸ்தான் அதற்கு அனுமதி வழங்கவில்லை.

    இதனால் இந்தியா கடுமையான பதிலடிக்கு தயாரானது. இந்த நேரத்தில்தான் இம்ரான் கான் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளார்.

    பிசாரியாவின் கூற்றுப்படி, அப்போதைய பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் தெஹ்மினா ஜன்ஜுவாவுக்கு அந்நாட்டு ராணுவத்திடம் இருந்து, இந்தியாவில் இருந்து ஏவுகணைகள் பாகிஸ்தானை எந்நேரத்திலும் தாக்கலாம் என்ற செய்தி வந்தது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலர் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 5 நாட்டு தூதர்களிடம் இதுகுறித்து அவர்களுடைய நாட்டு தலைவர்கள் இந்தியாவிடம் பேசவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அவர்கள் அவ்வாறு செய்துள்ளனர். அப்போது ஒரு நாடு சார்பில், இந்தியாவிடம் நேரடியாக பேசுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நான் டெல்லியில் இருக்கும்போது அப்போதைய பாகிஸ்தான் உயர் அதிகாரி சோஹைல் மஹ்மூத் என்னை தொடர்பு கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அதிகரித்து வரும் பதற்றத்தைத் தணிக்க உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த, உங்கள் நாட்டின் பிரதமர் மோடியிடம் பேச விரும்புகிறார் என்றார். நான் பிரதமர் மோடி தற்போது தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளார். முக்கியமான தகவல் என்றால் தன்னிடம் தெரிவிக்கவும். நான் பிரதமர் மோடியிடம் தெரிவிக்கிறேன் என்றேன். அதன்பின் எனக்கு போன் அழைப்பு வரவில்லை என்றார்.

    டெல்லியில் உள்ள அமெரிக்கா, இங்கிலாந்து பிரதிநிதிகள் இந்தியாவின் வெளியுறவுச் செயலரிடம் அன்றிரவு "நிலைமையைத் தணிக்கவும், பயங்கரவாதப் பிரச்சனையை தீவிரமாக்க விடாமல் கையாள பாகிஸ்தான் தயாராக உள்ளது" என கூறியுள்ளனர்.

    அடுத்த நாள், இம்ரான் கான் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானை விடுதலை செய்வதாக ஊடகங்களிடம் அறிவித்தார். இம்ரான் கான், வர்தமானின் விடுதலையை "அமைதியான செயல்முறை" என்று குறிப்பிட்டாலும், அது இந்தியாவின் கட்டாய ராஜதந்திரத்தின் விளைவு என சுட்டிக்காட்டுகிறார்.

    பிரதமர் மோடி பின்னர் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் இந்த சம்பவத்தைக் கூறுகையில், "அதிர்ஷ்டவசமாக, விமானி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார் என பாகிஸ்தான் அறிவித்தது. இல்லையெனில் அன்று இரவு ரத்தக்களரி நடைபெற்றிருக்கும்" என தெரிவித்துள்ளார்.

    ×