search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு"

    புதுவையில் 8 பேர் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றனர். இந்த உத்தரவை போலீஸ் சூப்பிரண்டு கொண்டா வெங்கடேஸ்வரராவ் பிறப்பித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை போலீசில் 8 சூப்பிரண்டுகள் இடம் காலியாக இருந்தது. இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிந்த மாறன், பாஸ்கர்,, ஜிந்தா கோதண்டராமன் உள்பட 8 இன்ஸ்பெக்டர்கள் போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றனர்.

    இதையடுத்து அந்த 8 இன்ஸ்பெக்டர்கள் இடங்கள் காலியாக இருந்தது. அந்த இடங்களை சீனியாரிட்டி அடிப்படையில் நிரப்ப முடிவு செய்தனர்.

    அதன்படி சப்-இன்ஸ் பெக்டர்களாக பணிபுரிந்த சுப்பிரமணியன், ஜபாஹிரில்லா, சந்திர சேகரன், வெற்றிவேல், சேகர், பேட்ரிக், ரகுபதி, தியாகராஜன் ஆகிய 8 பேர் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றனர்.

    இந்த உத்தரவை போலீஸ் தலைமையக போலீஸ் சூப்பிரண்டு கொண்டா வெங்கடேஸ்வரராவ் பிறப்பித்தார். இந்த உத்தரவை பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர்கள் உடனடியாக பணியில் சேரவும் உத்தர விடப்பட்டுள்ளது.

    ×