search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்து பாகிஸ்தான் கருத்து"

    சசி தரூரின் இந்து பாகிஸ்தான் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவனந்தபுரத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டு, ஆதரவாளர்களை விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #ShashiTharoor #BJP
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யான சசிதரூர் தனது பேச்சுக்கள் மூலம் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். மத்தியில் பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை அந்த கட்சி இந்து பாகிஸ்தானாக மாற்றிவிடும் என்று சசிதரூர் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    சசிதரூரின் இந்த கருத்துக்கு பாரதிய ஜனதா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் திருவனந்தபுரத்தில் உள்ள சசிதரூரின் அலுவலகத்தை பாரதிய ஜனதா இளைஞர் அணியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த அலுவலகம் மீது கறுப்பு நிற மையும் வீசப்பட்டது.

    அந்த அலுவலகத்திற்கு சசிதரூர் எம்.பி.யை சந்திப்பதற்காக காத்திருந்த பொது மக்களையும் அவர்கள் விரட்டி அடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி திருவனந்தபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார், பாரதிய ஜனதா கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையில் தங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை அறிந்ததும் பாரதிய ஜனதா இளைஞர் அணியினர் 5 பேர் திருவனந்தபுரம் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். தங்களுக்கு எதிராக போலீசார் வழக்குப்பதிவு செய்தது பற்றி கேட்டு அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    இதைதொடர்ந்து பாரதிய ஜனதா இளைஞர் அணியை சேர்ந்த 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். பிறகு அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சசிதரூர் சென்றபோது அவருக்கு பாரதிய ஜனதா தொண்டர்கள் கருப்பு கொடி காட்டினார்கள். அவர்களை போலீசார் அங்கிருந்து விரட்டியடித்தனர். சசிதரூருக்கு எதிரான தங்களது போராட்டம் மேலும் தீவிரம் அடையும் என்று பாரதிய ஜனதா கட்சியினர் அறிவித்துள்ளனர்.

    இதனால் திருவனந்தபுரத்தில் உள்ள சசிதரூரின் அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. #ShashiTharoor #BJP
    பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைத்தால் இந்தியா இந்து பாகிஸ்தானாக மாறிவிடும் என பேசிய சசி தரூருக்கு எதிராக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. #HinduPakistan #ShashiTharoor
    கொல்கத்தா:

    பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் இந்தியா, இந்து பாகிஸ்தானாக மாறிவிடும் என்றும், இதற்கான நடவடிக்கைகளை பாரதிய ஜனதா கட்சி செய்து வருவதாகவும் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரது கருத்திற்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து சசி தரூரை காங்கிரஸ் கண்டித்தது. பொது மேடைகளில் பேசும்போது கவனத்துடன் பேச வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. ஆனால் தன் கருத்தில் இருந்து பின்வாங்காத சசி தரூர், மன்னிப்பு கேட்கவும் மறுத்துவிட்டார்.

    இந்நிலையில், சசி தரூரின் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு எதிராக கொல்கத்தாவைச் சேர்ந்த வழக்கறிஞர் சுமீத் சவுத்ரி, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், சசி தரூரின் கருத்துக்கள் மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும், அரசியலமைப்பை அவமதிப்பதாகவும் இருப்பதாக கூறியுள்ளார்.

    இந்த வழக்கை இன்று விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம், சசி தரூருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. அதில், வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆகஸ்ட் 14-ம் தேதி ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கமான சட்ட நடைமுறைகள் மட்டுமின்றி அவரது அதிகாரப்பூர்வ டுவிட்டர் மற்றும் பேஸ்புக் முகவரிகளுக்கும் சம்மனை அனுப்ப நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    இந்திய நீதித்துறை வரலாற்றில் டுவிட்டர் மூலம் சம்மன் அனுப்புவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. #HinduPakistan #ShashiTharoor
    ×