search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியாவின் பெட்ரோல் தட்டுப்பாடு"

    ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்தினால் இந்தியாவின் பெட்ரோல் தட்டுப்பாட்டை சவுதிஅரேபியா ஈடுகட்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். #DonaldTrump #SaudiArabia

    வாஷிங்டன்:

    ஈரானின் அணு ஆயுத உற்பத்தி பிரச்சினையால் 2015-ம் ஆண்டு ஈரானுடன் செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த ஆண்டு விலகியது.

    அத்துடன் ஈரானின் எண்ணெய் வருவாயை முடக்கும் வகையில் அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்போவதாக மிரட்டல் விடுத்தது. எனினும் இந்தியா, சீனா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு மட்டும் விலக்கு அளித்தது.

    இருப்பினும் 6 மாதங்களுக்குள் ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை படிப்படியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறி நிபந்தனை விதித்தது. இக்கெடு மே 2-ந்தேதியுடன் முடிவடைகிறது.

    இதற்கிடையே இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு அளிக்கப்பட்ட பொருளாதார தடை விலக்கு சலுகையை மேலும் நீடிக்க முடியாது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.


    அமெரிக்காவின் இந்த முடிவை ஏற்றுக்கொண்டால் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும். பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் கணிசமாக உயரும் அபாயம் உள்ளது.

    ஈரானிடம் இருந்து இறக்குமதி நிறுத்தப்படும் பட்சத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 3 சதவீதம் அதிகரிக்கும். தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணை விலை 65 டாலராக உள்ளது. அது 74 டாலராக விலை உயரும் அபாயம் உள்ளது.

    இது இந்தியாவின் அனைத்து பொருளாதார நிலைகளையும் பாதிக்கும். கச்சா எண்ணெயின் விலை உயரும் பட்சத்தில் சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு குறையும். அதன் தாக்கம் தற்போதே தொடங்கிவிட்டது. நேற்று இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 495 புள்ளிகள் குறைந்துவிட்டது.

    இந்தநிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ‘‘ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கு முழு தடை விதிக்கப்பட்டநிலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பெட்ரோல் மற்றும் டீசல் தேவையை ‘ஒபெக்’ அமைப்பில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடான சவுதி அரேபியா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈடுகட்டும்.’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. #DonaldTrump #SaudiArabia

    ×