search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா வங்காள தேசம்"

    ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணிக்கு விராட் கோலி வாழ்த்து தெரிவித்ததோடு, கடும் நெருக்கடி வங்காள தேசத்திற்கு பாராட்டும் தெரிவித்துள்ளார். #AsiaCup2018
    ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா - வங்காள தேச அணிகள் மோதின. நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் களம் இறங்கிய வங்காள தேசம் 222 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பின்னர் 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா கஷ்டப்பட்டு கடைசி பந்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

    7-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ஓய்வில் இருக்கும் கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘மிகவும் பரப்பாக சென்ற போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு 7-வது முறையாக கோப்பையை கைப்பற்றினார்கள். கடும் சவாலாக விளங்கிய வங்காள தேச அணிக்க பாராட்டுக்கள்’’ என்று பதிவிட்டுள்ளார்.
    ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார். #AsiaCup2018 #INDvBAN
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று மாலை 5 மணிக்கு துபாயில் தொடங்குகிறது. இதில் இந்தியா - வங்காள தேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதற்கான டாஸ் சரியாக மாலை 4.30 மணிக்கு சுண்டப்பட்டது. வங்காள தேச அணி கேப்டன் மோர்தசா ‘ஹெட்’ என அழைத்தார். ஆனால் ‘டெய்ல்’ விழ ரோகித் சர்மா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார்.
    இந்தியாவிற்கு எதிராக இறுதிப் போட்டியில் 260 முதல் 270 வரை அடித்தால் இந்தியாவிற்கு நெருக்கடி கொடுக்க முடியும் என வங்காள தேசம் கேப்டன் தெரிவித்துள்ளார். #AsiaCup2018
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று மாலை 5 மணிக்கு துபாயில் தொடங்குகிறது. இதில் இந்தியா - வங்காள தேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. துபாய் மைதானத்தில் இந்தியா ஒரேயொரு முறைதான் முதலில் பேட்டிங் செய்தது. அந்த போட்டியில் இந்தியா நிர்ணயித்த ஸ்கோரை ஹாங் காங் விரட்டியது. மற்ற போட்டிகளில் இந்தியா 2-வது பேட்டிங் செய்து வெற்றிகளை பெற்றது. கடைசி போட்டி ‘டை’யில் முடிந்தது.

    இந்நிலையில் இந்தியாவிற்கு எதிராக 260 முதல் 270 ரன்கள் அடித்தால் சிறந்த முறையில் நெருக்கடி அளிக்க முடியும் என வங்காள தேச அணி கேப்டன் மோர்தசா தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து மோர்தசா கூறுகையில் ‘‘இந்தியாவிற்கு எதிராக நாங்கள் 260 முதல் 270 ர ன்கள் அடித்தால், அது நெருக்கடி கொடுக்கும் அளவிற்கான ஸ்கோராக இருக்கும். எனினும், அது வெற்றிக்கான ரன்கள் என்னால் உறுதியாக கூற இயலாது. நாங்கள் முதலில் பந்து வீசினால், அவரைகள் குறைந்த ரன்னில் கட்டுப்படுத்த வேண்டும். அப்படி என்றால்தான் அது சிறப்பானதாக இருக்கும்.

    இந்த தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்தான் வங்காள தேசத்தின் அழகான போட்டியை கண்டேன். முஷ்பிகுர் ரஹிம், மிதுன் பேட்டிங்கிலும், மிராஜ் மற்றும் முஷ்டாபிஜுர் ரஹ்மான் பந்து வீச்சிலும் அசத்தினார்கள்’’ என்றார்.
    ×