search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய ரூபாய் நோட்டு"

    நேபாள நாட்டில் புழக்கத்தில் இருந்து வந்த இந்திய அரசின் 200, 500, 2000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. #IndianRupee #nepal
    புதுடெல்லி:

    நேபாள நாட்டில் இந்திய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து வருகின்றன. அங்கு இந்திய ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகும்.

    கடந்த 2016-ம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி எடுத்தார். புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்பின் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய 200, 500, 2000 ரூபாய் நோட்டுகள் தற்போது நேபாளத்தில் புழக்கத்தில் இருந்து வந்தன.

    இந்த நிலையில் இந்திய 200, 500, 2000 ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து நேபாள தகவல் மற்றும் தொடர்பு துறை மந்திரி கோகுல்பிரசாத் பஸ்கோடா கூறியதாவது:-

    நேபாளத்தில் இந்திய அரசின் 200, 500, 2000, ரூபாய் நோட்டுகளை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அந்த ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை விதிக்கப்படுகிறது.

    அதை மக்கள் பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அந்த ரூபாய் நோட்டுகளை கையில் வைத்திருக்க வேண்டாம்.

    200, 500, 2000 இந்திய ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்த நேபாளத்தில் சட்டப்பூர்வம் ஆக்கவில்லை. எனவே தற்போதைய சூழ்நிலையில் இந்திய 100 ரூபாய் நோட்டுக்களை மட்டும் மக்கள் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.

    வருகிற 2020-ம் ஆண்டு “விசிட்நேபாள்” என்ற பெயரில் நேபாள திருவிழா நடக்கிறது. இதனை முன்னிட்டு இந்த ரூபாய் நோட்டு தடை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது நேபாள நாட்டில் கோடிக்கணக்கில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் தேங்கின. அதை இதுவரை இந்திய அரசு நேபாள ரிசர்வ் வங்கியிடம் இருந்து திரும்ப பெற்றுக் கொள்ளவில்லை.

    இதனால் கடும் அதிருப்தி அடைந்த நேபாள அரசு இந்திய புதிய ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்திய எல்லை பகுதி மாநிலங்களில் நேபாள மக்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் இந்திய ரூபாய் நோட்டுகளையே பரிவர்த்தனைக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே நேபாளத்தில் இந்திய புதிய ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்து இருப்பதால் இந்தியா- நேபாளம் இடையே வர்த்தகம் செய்யும் வியாபாரிகளும், அதை பயன்படுத்தும் பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. #IndianRupee #nepal
    இந்திய ரூபாய் நோட்டுகளை கையில் வைத்து இருக்க வேண்டாம் என்று பூடான் மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. #IndianRupees

    பூடான்:

    பிரதமர் நரேந்திர மோடி 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.

    இந்தியாவில் கறுப்பு பணம், கள்ள நோட்டு மற்றும் ஊழல் ஆகியவற்றை ஒழிக்க இந்த நடவடிக்கையை எடுத்ததாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.

    உயர்மதிப்பிலான ரூபாய் நோட்டு வாபஸ் பெற்றதால் கடும்பாதிப்பு ஏற்பட்டது. இதே போல அண்டை நாடான நேபாளம், பூடான் ஆகியவையும் பாதிப்புக்கு உள்ளானது.

    ஏனென்றால் இந்திய ரூபாயை அங்கு மக்கள் தாராளமாக பயன்படுத்திக் கொள்ள மக்களுக்கு அந்த நாட்டு ரிசர்வ் வங்கிகள் அனுமதி அளித்து இருந்தன.

    இந்திய அரசின் திடீர் உத்தரவால் அந்நாட்டில் உள்ள மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி பணத்தை வங்கிகளில் கொடுத்து மாற்றினார்கள். ஏறக்குறைய 1 ஆண்டக்கு பின் அங்கு நிலைமை சீரடைந்தது.


    இந்த நிலையில் இந்திய ரூபாயை கையில் ரொக்கமாக வைத்திருக்க வேண்டாம். எப்போது வேண்டுமானாலும் செல்லாமல் போகலாம் என்று பூடான் ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

    பூடானின் ரிசர்வ் வங்கியான ராயல் மானிட்டர் அதாரிட்டி (ஆர்.எம்.ஏ.) இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்திய ரூபாய் நோட்டுகளை கையில் ரொக்கமாக வைத்திருக்கும் மக்கள் முடிந்தவரை அதை வங்கியில் செலுத்தி தேவைக்கு ஏற்றார் போல் எடுத்து பயன்படுத்துகிறார்கள். இந்த ரூபாயை ரொக்கமாக கையில் வைத்து செலவு செய்வதையும், சேமித்து வைத்திருப்பதையும் தவிர்க்கவும்.

    2016-ம் ஆண்டு இந்தியாவில் கொண்டு வரப்பட்ட பணமதிப்பு நீக்கம் போல் எப்போது வேண்டுமானாலும் செல்லாமல் போகலாம். அது மாதிரி நடைபெற்றால் மக்கள் கையில் வைத்திருக்கும் இந்திய ரூபாய்க்கு பூடான் ரிசர்வ் வங்கி எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

    இந்திய ரூபாய்களில் 500 ரூபாயில் கள்ள நோட்டுகள் அதிகமாக புழுங்குவதால் அந்த ரூபாயை வாங்கும் போது மிகுந்த கவனத்துடன் செயல்படுங்கள்.

    இந்தியாவின் 500 ரூபாய் நோட்டுகளை ரூ.25 ஆயிரத்துக்கு மேல் அதிகமாக வெளியே எடுத்துச் செலவு செய்ய வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இது குறித்து பூடானில் உள்ள இந்திய தூதரக அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, “ரிசர்வ் வங்கி ஏதேனும் நடவடிக்கை எடுக்க போகிறதா? என்பது குறித்து எதுவும் தெரியாது.

    முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய ரூபாயை கவனமாக வைத்திருக்கவும், சேமிக்க வேண்டாம் என்றும் அறிவித்து இருக்கிறார்கள்” என்றார். #IndianRupees

    ×