search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்"

    வீட்டு வரி உயர்வை ரத்து செய்ய கோரி அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். #PropertyTax

    புதுச்சேரி:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அரியாங்குப்பம் தொகுதி குழு சார்பில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு தொகுதி செயலாளர் பூபதி தலைமை தாங்கினார். துணை செயலாளர் கண்ணன், பொருளாளர் முருகன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

    மாநில துணை செய லாளர் அபிஷேகம், மாநில நிர்வாக குழு சரளா ஆகியோர் கண்டன உரையாற்றினர். தொகுதி நிர்வாகிகள் பச்சையப்பன் இந்து, பாலசுந்தரம், லெனின், ராஜி, வசந்தா, முத்துகுமார், கணேசன், செல்வராஜி, தினேஷ், ஈஸ்வரன் சுகதேவ், ரமணி, ராணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    புதுவையில் வீட்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், குடிநீர் கட்டணம் மற்றும் மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும், குப்பை வரியை ரத்து செய்ய வேண்டும், வீடு இல்லாத மக்களுக்கு வீட்டு மனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட் டம் நடைபெற்றது.

    கிழக்கு கடற்கரை சாலை கொட்டுப் பாளையத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
    புதுச்சேரி:

    புதுவை தட்டாஞ்சாவடி தொகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி குழு சார்பில் கொக்கு பார்க் அரசு அச்சகம் எதிரில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு தொகுதி செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர்கள் ஹேமலதா, எழிலன், துணை செயலாளர் செல்வம், பொருளாளர் தனஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சலீம், நிர்வாக குழு உறுப்பினர் சேது செல்வம் ஆகியோர் கண்டன உரையாற்றினர் ஆர்ப்பாட்டத்தில் கிளை செயலாளர்கள் தென்னரசன், லோகு, ரவிச் சந்திரன், வெங்கடேசன், சிலம்பரசன் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    வீட்டு வரி சொத்து வரி உயர்வை குறைக்க வேண்டும். குப்பை வரியை நீக்க வேண்டும். மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். தொகுதியில் எரியாத மின் விளக்குகளை எரிய செய்ய வேண்டும். சாலை வசதி, கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இலவச மனைப்பட்டா, அடுக்குமாடி குடியிருப்பு கட்டி தரவேண்டும்.

    பாதாள சாக்கடை இணைப்பு வழங்க வேண்டும் சட்டமன்றத்தில் அறிவித்தபடி கிழக்கு கடற்கரை சாலை கொட்டுப் பாளையத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. #tamilnews
    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து செய்துங்கநல்லூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து செய்துங்கநல்லூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் அப்பாக்குட்டி தலைமை வகித்தார். ஒன்றிய குழு உறுப்பினர் குணேஷ்வரி முன்னிலை வகித்தார்.

    இதில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் பலியான மாணவி ஸ்னோலின் உட்பட 11 பேருக்கு அஞ்சலி செலுத்தியும், மத்திய- மாநில அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா பகுதி தலைவர் அப்துல் காதர், மாவட்ட தலைவர் அப்பாஸ், மார்க்சிஸ்ட் கம்னியூஸ்டு ஒன்றிய குழு உறுப்பினர் மணி, கொம்பையா, ஞானமுத்து, சிவசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×