என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இணையவழி பதிவு தொடக்கம்"
- கிளர்க் மற்றும் ஸ்டோர் கீப்பர்(டெக்னிக்கல்) பிரிவுகளில் ஆள்சேர்க்கை நடைபெற உள்ளது.
- ஆள்சேர்க்கை முகாமுக்கான அனுமதிக் கடிதம் ஆகஸ்டு 14-ந் தேதிக்கு பிறகு அனுப்பி வைக்கப்படும்
கோவை :
ராணுவம், கடற்படை, விமானப்படையில் இளைஞர்கள் சேர அக்னிபத் என்ற புதிய திடடத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
17.5 வயது முதல் 23 வயது வரையிலான வயதுள்ள இருபாலரும் முப்படைகளில் சேரலாம். அனைவரும் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் பணியில் நீடிப்பார்கள்.
இத்தி ட்டத்தின் கீழ் ஆள்சேர்க்கை பணிகள் தற்போது தொடங்கியுள்ளது.அதன்படி கோவை, திருப்பூர், திண்டுக்கல், தருமபுரி, ஈரோடு, மதுரை, நாமக்கல், நீலகிரி, சேலம், தேனி, கிருஷ்ணகிரி ஆகிய 11 மாவட்டங்களை சேர்ந்த ஆண்களுக்கான ஆள்சேர்க்கை முகாம் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள டீ பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வரும் செப்டம்பர் 20-ந் தேதி தொடங்குகிறது. அன்று தொடங்கும் ஆள்சேர்க்கை பணி அக்டோபர் 1-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில் அக்னிபத் திட்டத்துக்கான பொதுப்பணி, டெக்னிக்கல், ட்ரேட்ஸ்மேன்(10-ம் வகுப்பு தேர்ச்சி), ட்ரேட்ஸ்மேன்(8-ம்வகுப்பு தேர்ச்சி), கிளர்க் மற்றும் ஸ்டோர் கீப்பர்(டெக்னிக்கல்) பிரிவுகளில் ஆள்சேர்க்கை நடைபெற உள்ளது. வயது, தகுதி, கல்வித்தகுதி மற்றும் பிற விவரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இந்த ஆள்சேர்ப்பு முகாமுக்கான இணையவழி பதிவு நேற்று தொடங்கி உள்ளது. ஆள்சேர்க்கை முகாமில் பங்கேற்க விரும்புவோர் ஆகஸ்டு 3-ந் தேதி வரை joinindianarmy.nic.in என்ற இணைய முகவரியில் பதிவு செய்யலாம்.
பதிவு செய்தவர்களுக்கு ஆள்சேர்க்கை முகாமுக்கான அனுமதிக் கடிதம் ஆகஸ்டு 14-ந் தேதிக்கு பிறகு அனுப்பி வைக்கப்படும் என கோவையில் உள்ள ராணுவத்துக்கான ஆள்சேர்க்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்