search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடைநிற்றல்"

    • அறிவுரை கூறி அழைத்து வந்து செஞ்சேரியில் செயல்பட்டுவரும் உண்டு உறைவிடப் பள்ளியில் 5ம் வகுப்பில் சேர்த்தனர்.
    • சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பில் சேர்த்து கல்வி பயில நடவடிக்கை எடுத்தார்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் அருகே கவுள்பாளையத்தை சேர்ந்த மருதமுத்து மகன் சரவணன் (வயது 10), தந்தையை இழந்த இவர் பள்ளிக்குச் செல்லாமல், படிப்பை நிறுத்தி உள்ளார். இது குறித்த தகவலறிந்த கலெக்டர் கற்பகம் உத்தரவின்பேரில் உதவி திட்ட அலுவலர் ஜெயசங்கர் மேற்பார்வையில், ஆசிரியர் பயிற்றுநர் ரமேஷ் கவுள்பா ளையம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், பட்டதாரி ஆசிரியர் துரைசாமி, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் உஷ்மான் அலி, உதவி ஆசிரியர் அகிலாதேவி ஆகியோருடன் குழுவாக கவுள்பாளையம் கிராமத் திற்கு சென்றனர். அங்கு பள்ளிக்கு செல்லாமல் இருந்த சரவணனை சந்தித்து அறிவுரை கூறி அழைத்து வந்து செஞ்சேரியில் செயல்பட்டுவரும் உண்டு உறைவிடப் பள்ளியில் 5ம் வகுப்பில் சேர்த்தனர். இதே போல் நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராமல் இருந்த 5 மாணவர்களையும் பள்ளிக்கு அழைத்து வந்தனர்.

    மேலும் அய்யலூர் பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளியான சோலைமுத்துவின் மகன் பாரதி (14), தாயில்லாத குழந்தையான இவர் பள்ளிக்குச் செல்லாமல் வேலைக்கு சென்றார். தகவறிந்த ஆசிரியர் பயிற்றுநர் ரமேஷ் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருடன் சென்று மாணவன் பாரதியை மீட்டு சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பில் சேர்த்து கல்வி பயில நடவடிக்கை எடுத்தார்.

    • விருதுநகர் மாவட்டத்தில் இடைநிற்றலை தவிர்த்து மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்ல கலெக்டர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
    • மாணவிகளின் படிப்புக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் வட்டம், ரோசல்பட்டி ஊராட்சியில் பள்ளி செல்லா மாணவர்களின் இடைநிற்றலை தவிர்த்து மீண்டும் பள்ளிக்கு செல்ல நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக கலெக்டர் மேகநாதரெட்டி கள ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.

    அதன்படி, ரோசல்பட்டி ஊராட்சியில், விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நாடார் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும், ஆர்த்தி (7-ம் வகுப்பு), அழகுலட்சுமி (7-ம் வகுப்பு), காவியா (8-ம் வகுப்பு) லட்சுமி பிரியா (12-ம் வகுப்பு), பவித்ரா (10-ம் வகுப்பு) கார்த்திகைச்செல்வி (6-ம் வகுப்பு), சுப்புலட்சுமி (10- ம் வகுப்பு) ஆகிய மாணவிகள் பள்ளி செல்லாமல் இருந்தனர்.

    அந்த மாணவிகளை கலெக்டர் மேகநாதரெட்டி நேரில் சந்தித்து, பள்ளி செல்லாமல் இருப்பதற்கான காரணத்தை கேட்டறிந்து, அவர்களை பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், படித்ததால் தான் நாங்கள் இப்பொழுது நல்ல நிலையில் இருக்கிறோம் என்றும், மாணவிகளின் பெற்றோர்களுக்கு அறிவுரை கூறினார். மேலும் மாணவிகளின் படிப்புக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    விருதுநகர் மாவ ட்டத்தில், விருதுநகர், வெம்ப க்கோட்டை, ராஜபாளையம் ஆகிய வட்டங்களில் முதல் கட்டமாக 1032 இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து அவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்ல 16 குழுக்கள் அமைக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    விருதுநகர் மாவட்டம் முழுவதும் இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து அவர்கள் மீண்டும் கல்வி பயில்வதற்கு மாவட்ட நிர்வாகம் முழு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கலெக்டர் மேகநாதரெட்டி. தெரிவித்தார்.

    இந்த நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகவுரி, துணை ஆட்சியர் (பயிற்சி) ஷாலினி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • உயர்வகுப்பு மாணவர்களின் வருகை100 சதவீத அளவில் பூர்த்தியடையாமல் இருந்தது.
    • திருப்பூரில் கடந்தாண்டு 166 குழந்தை திருமணங்கள் பதிவாகின.

    உடுமலை,

    உடுமலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில், பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் பாட வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டது.அப்போது மேல்நிலைபள்ளி மாணவர்கள் சிலர் குடும்ப பொருளாதாரச்சூழல் காரணமாக கட்டுமானம், விவசாயம் சார்ந்த பணிக்குச்சென்றனர்.இதையடுத்து அவ்வப்போது, நேரடி வகுப்புகள் துவங்கிய போதும் மாணவர்கள் சிலர், பல நாட்களாக பள்ளி செல்வதை தவிர்த்து வந்தனர்.

    அவர்களைகட்டாயப்படுத்தி பள்ளிக்கு வரவழைக்க ஆசிரியர்கள் கடும் முயற்சியில் ஈடுபட்டாலும், பயன் இல்லாமல் போனது.அவ்வகையில் பள்ளிகள் முழு அளவில் செயல்பட்டும் உயர்வகுப்பு மாணவர்களின் வருகை100 சதவீத அளவில் பூர்த்தியடையாமல் இருந்தது.

    நடந்து முடிந்த 10, 11 மற்றும் பிளஸ் -2 பொதுத்தேர்வில், ஆப்சென்ட் பட்டியல் அதிகரித்தே காணப்பட்டது.அதில்பெண் குழந்தைகளின் இடைநிற்றல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி கூறியதாவது:-

    கிராமப்புற பள்ளிகளில் குறிப்பாக கொரோனா ஊரடங்கிற்கு பின் பெண் குழந்தைகளின் இடைநிற்றல் அதிகரித்துள்ளது. காரணம் குழந்தை திருமணங்கள். திருப்பூரில் கடந்தாண்டு 166 குழந்தை திருமணங்கள் பதிவாகின.இதில் பெற்றோர்களே பள்ளி படிப்பை நிறுத்தி வற்புறுத்தலின் பேரில் திருமணம் செய்து வைக்கும் சூழல் உள்ளது. அவிநாசி, பல்லடம், திருப்பூர் வடக்கில் அதிக குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. இப்பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×