search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடுபொருள்கள்"

    • குறுவை சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் விதை உரம், இடுபொருள்கள் வாங்க அதிகாரிகளிடம் கையொப்பம் வாங்க சென்றனர்.
    • சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருக்குவளைக்கு சென்று பெறவேண்டிய சூழ்நிலை இருந்து வருவதால் அவதியடைந்து வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி முச்சந்தியில் பல லட்சம் மதிப்பீட்டில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, துணை வேளாண்மை விரிவாக்க மையம் கட்டிடம் கட்டப்பட்டது. பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டும் திறக்கப்படாமல் மூடியே கிடக்கிறது. மேலும் தற்பொழுது குறுவை சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் விதை உரம் மற்றும் இடுபொருள்கள் மற்றும் அதிகாரிகளிடம் கையொப்பம் வாங்க இங்கிருந்த அலுவலகம் தற்போது மாற்றப்பட்டு சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருக்குவளைக்கு சென்று பெறவேண்டிய சூழ்நிலை இருந்து வருவதால் அவதியடைந்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்மந்தப்பட்ட துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுத்து, அக்கட்டிடத்தை பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×