search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடுபொருள்"

    • உளுந்து மற்றும் பாசிப்பயறு விதைகள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
    • வேளாண்மை இடுபொருள் தயாரிக்கும் உத்திகள் போன்றவை அட்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை வட்டம், வோண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் அட்மா திட்ட வட்டார விவசாய ஆலோசனை குழு மற்றும் வட்டார தொழில்நுட்ப குழு கூட்டம் மயிலாடுதுறை வேளாண்மை உதவி இயக்குநர் சுப்பையன் தலைமையில் நடைப்பெற்றது.

    இந்த கூட்டத்திற்கு துணை வேளாண்மை அலுவர் பிரபாகரன், பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ச. திருமுருகள் அனைவரையும் வரவேற்றார்.

    கூட்டத்தில் தற்பொழுது ஆண்டிற்கான 2022-23 இரண்டாம் கட்ட நிதி இலக்கில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட கிராம்களில் 80 விழுக்காட்டிற்கு மேல் இலக்கிளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

    மேலும் நடப்பு பருவத்திற்கு தேவையான உளுந்து மற்றும் பாசிப்பயறு விதைகள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் 50 சத மானியத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    விவசாயிகள் வாங்கி பயன் அடையுமாறு கேட்டுக்கொண்டனர்.

    இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வேளாண்மை இணை இயக்குநரும், அட்மா திட்ட இயக்குநர் ஜெ.சேகர் பசுமை போர்வை திட்டத்தில் விவசாயிகள் அனைவரும் பங்கேற்க்க வேண்டும்.

    உழவன் செயலில் பதிவு செய்து மாரக்கன்றுகளை முன்னுரிமை அடிப்படையில் பயன் பெருமாறும் இயற்கை வேளாண்மை பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

    இதற்கு தேவையான பயிற்சி மற்றும் இயற்கை வேளாண்மை இடுபொருள் தயாரிக்கும் உத்திகள் போன்றவை அட்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

    இக்குழு கூட்டத்தின் தலைவர் என்.இளையபெருமாள் கூறும் போது அரசு ஏராளமான நலதிட்டங்களை விவசாயிகளுக்கு வழங்கிவருகிறது.

    அந்த வகையில் தற்பொழுது முடிந்த வடகிழக்கு பருவமழையில் ஏற்ப்பட்ட பாதிப்புகளுக்கு உடனடியாக மாநிலத்திலே அதிகபடியான நிதியை நமது மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு முதல்வருக்கும் வேளாண்மை உழவர்நலத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கும் நன்றியை தெரிவித்தார்.

    குழு உறுப்பினர்கள் அனைவரும் வேளாண்துறையின் மூலம் செல்ப்படுத்தப்படும் திட்டங்களை விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

    இக்கூட்டத்தில் தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகம் மற்றும் அனைத்து சகோதரத்துறை அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

    நிறைவாக அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் விஜய் நன்றி கூறினார்.

    இக்கூட்டத்திற்க்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட தொழில்நுட்ப உதவி மேலாளர் மதுமனா செய்திருந்தார்கள்.

    • அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு கல்வித்திறன், ஆரோக்கியம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
    • வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண் இடுபொருட்களை விவசாயிகளுக்கு வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் ஒன்றியம் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் முதன்மை செயலாளருமான டாக்டர் விஜயகுமார், மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலை மையில் ஆய்வு செய்தார்.

    அப்போது மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் விஜயகுமார் பேசியதாவது :-

    முதல்-அமைச்சர் உத்த ரவுக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் திட்ட பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.

    தஞ்சாவூர் ஒன்றியம் தோழகிரிபட்டி, குருங்குளம் மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ கல்வி பயிற்றுவிக்கப் படுவதையும் ஆய்வு செய்யப்பட்டது.

    தொடர்ந்து தோழகிரிபட்டி குருங்குளம் மேற்கு அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு கல்வித்திறன், ஆரோக்கியம், மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 16 பேர் கொண்ட விவசாய குழுவினர்களுக்கு 23 ஏக்கர் நிலம் பாசன வசதி பெரும் வகையில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும் ஆய்வு செய்து, திருக்கானூர்பட்டி குருங்குளம் மேற்கு அங்காடியில் உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    பாபநாசம் வட்டம் ராராமுத்திரிக்கோட்டை ஊராட்சியில்புதிதாக தூர்வாரி அமைக்க ப்பட்டுள்ள குளங்கரையில் மரக்கன்று நடும் பணியினை யும் பார்வையிட்டு , தொடர்ந்து தஞ்சாவூர் மாநகராட்சி புதிய பஸ் நிலையம் அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ ஆம்னி பஸ் நிலையம் அமைக்கும் பணி நணபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

    இதேபோல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்நோக்கு கலையரங்க புதிய கட்டிட கட்டுமானப் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, மாநகராட்சி காவிரி நகரில் நவீன பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு மேற்கண்ட பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குகொண்டு வர வேண்டும் என சம்பந்தபட்ட்ட அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    முன்னதாக அவர் தோழகிரிபட்டி குருங்குளம் மேற்கு ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண் இடுப்பொருட்களை விவசாயிகளுக்கு வழங்கி னார்.

    மேலும் தஞ்சை தாரகை மகளிர் சுய உதவி குழுவினரின் புவிசார் குறியீடு பெற்ற தஞ்சாவூர் பொம்மைகள் விற்பனை கண்காட்சியினை பார்வையிட்டார்.

    அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து துறை பணிகள் முன்னேற்றம் மற்றும் பேரிடர் முன்னேற்பாடு பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரங்கராஜன், வேளாண்மை இணை இயக்குனர் ஜஸ்டின், தாசில்தார் மணிகண்டன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகளுக்கு உழவர் சந்தைக்கான அடையாள அட்டை
    • கலெக்டர் அரவிந்த் செய்தி குறிப்பில் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக் அரவிந்த விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    கன்னியாகுமரி மாவட் டத்திற்கு தோட்டக்கலை துறையின் கீழ் 2022-23ம் ஆண்டு மாநில தோட்டக் கலை வளர்ச்சித் திட்டத் தின் கீழ் ரூ.60 லட்சத்து 87 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது. அரசு மாணவியர் விடுதிகளில் தோட்டம் அமைத்தல் இனத்தின் கீழ் 8 எண்ணத் திற்கு ரூ.64,000 நிதி ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது.

    அரசு மாணவியர் விடுதி ஒன்றிற்கு 100 சதவீதம் மானியத்தில் ரூ.8,000 மதிப்பிலான பழச் செடிகள். மூலிகை செடிகள், தென்னங்கன்றுகள், காய் கறி விதைகள், தோட்டக் கருவிகள் உள்ளிட்ட இதர இடுபொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும்.

    ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் அரசு மாணவியர் விடுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    உயர் விளைச்சல் துல்லிய பண்ணையத் திட்டத்தின் கீழ் 48 ஹெக்டேருக்கு ரூ 7 லட்சத்து 20 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் துல்லிய பண்ணையம் செயல்படுத்தப்பட உள்ளது. நுண்ணீர் பாசன வசதியை பெற்றுள்ள விவசாயிகள் மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெற இயலும்.

    ஒரு ஹெக்டேருக்கு ரூ.15.000 மதிப்பிலான இடுபொருட்கள் வழங் கப்படும். கூடுதல் வருமானம் ஈட்டும் சிறு தொழில் இனத்தின் கீழ் எண்ணத்திற்கு ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் காளான் வளர்ப்பு கூடம் அமைத்திட 50 சதவீதம் மானியமாக ரூ.50,000 வழங்கப்படும்.

    உழவர் சந்தையில் காய்கறி வரத்தை அதிகரிப்பதற்கான சிறப்பு திட்டத் தின் கீழ் 70 ஹெக்டேருக்கு ரூ.14 லட்சம் நிதி ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது. உழவர் சந்தையை சுற்றியுள்ள கிராமங்களில் காய்கறிகள் சாகுபடி செய்ய ஊக்குவிக்கப்படும். ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 மதிப்பிலான இடுபொருட்கள் வழங் கப்படும்.

    இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகளுக்கு உழவர் சந்தைக்கான அடையாள அட்டை வழங்கப்படும்.

    ஊடுபயிர் சாகுபடி இனத்தின் கீழ் தென்னையில் ஊடுபயிராக வாழை பயிரிடும் விவ சாயிகளுக்கு 70 ஹெக்டே ருக்கு ரூ.18 லட்சத்து 35 ஆயிரம் நிதி ஒதுக்கீடுசெய் யப்பட்டுள்ளது. இதில் பய னாளிக்கு முதலாண்டிற்கு மானியத் தொகையாக ஒரு ஹெக்டேருக்கு ரூ.26.250 மதிப்பிலான இடுபொ ருட்கள் வழங்கப்படும்.

    வாழையில் ஊடுபயிராக காய்கறிகள் பயிரிடும் விவ சாயிகளுக்கு 100 ஹெக்டே ருக்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பயனாளிக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலான் இடுபொருட்கள் வழங்கப்படும்.

    தோட்டக்கலை கரு விகள் மற்றும் உபகரணங் கள் விநியோகம் இனத்தின் கீழ் நெகிழி கூடைகள் 10 எண்ணத்திற்கு ரூ.37,500 அலுமினிய ஏணிகள் 40 எண்ணத்திற்கு ரூ.4 லட் சம். பழங்கள் அறுவடை செய்ய பயன்படுத்தும் வலைக் கருவி 30 எண்ணத்திற்கு ரூ.7,500, மலர் அறுவடைக்கான முகப்பு விளக்கு 50 எண்ணத்திற்கு ரூ.12,500, கவாத்து கத்திரி 100 எண்ணத்திற்கு ரூ.20,000 நாப்ஸாக் தெளிப்பான் (8-12 லிட்டர்) 15 எண்ணத்திற்கு ரூ.57,000 போன்ற அலகுக்கு 50 சதவீதம் மானியத்தில் ஒரு பயனாளிக்கு வழங்கப்படும்.

    இத்திட்டங்களை பற்றி மேலும் தகவலறிய விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார உதவி தோட்டக்கலை அலுவலகங்களை அணுகி பயன் பெறலாம்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ×