search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இங்கிலாந்து அரசு"

    இங்கிலாந்து அரசின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக விஜய் மல்லையா அறிவித்துள்ளார். இதனால் அவரை நாடு கடத்துவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. #VijayMallya
    லண்டன்:

    பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா (வயது 63), இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு வட்டியுடன் திருப்பி செலுத்தாமல், இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு தப்பி விட்டார். அவர் மீது இந்திய கோர்ட்டுகளில் சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் வழக்குகள் போட்டுள்ளன.

    அவரை நாடு கடத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு, அவரை நாடு கடத்த கடந்த டிசம்பர் மாதம் 10-ந் தேதி உத்தரவிட்டது.

    மேலும், அந்த உத்தரவு, முறைப்படி இங்கிலாந்து அரசுக்கு (உள்துறை மந்திரி சஜித் ஜாவித்துக்கு) அனுப்பி வைக்கப்பட்டது.

    அதை இங்கிலாந்து உள்துறை மந்திரி சஜித் ஜாவித் பரிசீலித்து, விஜய் மல்லையாவை நாடு கடத்தும் கோர்ட்டு உத்தரவுக்கு ஒப்புதல் அளித்து உத்தரவிட்டார். இதை இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் உறுதி செய்தது.

    இங்கிலாந்து உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா மேல்முறையீடு செய்வதற்கு 4-ந் தேதி முதல் 14 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மேல்முறையீடு செய்யப்போவதாக விஜய் மல்லையா அறிவித்தார்.

    இதுபற்றி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட்டு கடந்த டிசம்பர் மாதம் 10-ந் தேதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மேல்முறையீடு செய்யும் எனது விருப்பத்தை தெரிவித்தேன். உள்துறை மந்திரியின் முடிவுக்கு முன் மேல்முறையீடு செய்ய முடியவில்லை. இப்போது மேல்முறை செய்யும் நடவடிக்கையை எடுப்பேன்” என கூறி உள்ளார்.

    எனவே அவர் இங்கிலாந்து ஐகோர்ட்டில் விரைவில் மேல்முறையீடு செய்கிறார்.

    இதனால் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது.
     #VijayMallya
    மாணவர்கள் எளிதாக விசா பெறும் பட்டியலில் இருந்து இந்தியாவை இங்கிலாந்து அரசு நீக்கியது. இதனால் இங்கிலாந்து சென்று படிக்க விரும்பும் இந்திய மாணவர்கள் கடுமையான விதிமுறைகளை சந்திக்கும் நிலை உருவாகி உள்ளது. #USVisa #Outrage #StudentVisaRules
    லண்டன்:

    இங்கிலாந்து நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிப்பதற்காக ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் விண்ணப்பிக்கிறார்கள். இவர்கள் விசா பெறுவதற்காக விண்ணப்பிக்கும் விதிமுறைகள் இதுவரை சற்று எளிமையாக இருந்தது.

    இந்த நிலையில் அடுத்த மாதம் (ஜூலை) 6-ந் தேதி முதல் இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய 4 அடுக்கு விசா விதிமுறைகளை அந்நாட்டு அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் வெளிநாட்டு மாணவர்கள் எளிதாக விசா பெறுவதற்கு விண்ணப்பிக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

    4 அடுக்கு விசா தொடர்பான குடியேற்ற கொள்கை இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. அது தொடர்பான பட்டியலில் அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து, சீனா, பஹ்ரைன், செர்பியா உள்ளிட்ட 25 நாடுகள் இடம் பிடித்து உள்ளன. இந்த நாடுகளின் மாணவர்கள் விசாவிற்கு விண்ணப்பம் செய்வதில் மிகவும் தாராளம் காட்டப்பட்டு உள்ளது.

    அதே நேரம் ஏற்கனவே இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்த இந்தியா திடீரென நீக்கப்பட்டு உள்ளது. இதனால் விசா பெற விண்ணப்பிக்க, இந்திய மாணவர்கள் பல்வேறு கடுமையான சோதனைகளை சந்திக்கவேண்டி உள்ளது. மேலும் இதற்காக அவர்கள் ஏராளமான ஆவணங்களை தாக்கல் செய்யும் நிலைக்கும் தள்ளப்பட்டு இருக்கின்றனர். இது இந்தியா மாணவர்களையும், இந்திய அரசையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

    இதுபற்றி இந்திய வம்சாவளி தொழில் அதிபரும், இங்கிலாந்துக்கான சர்வதேச மாணவர்கள் விவகார கவுன்சில் தலைவருமான கரண் பிலிமோரியா கூறுகையில், “இங்கிலாந்தின் இந்த நடவடிக்கை இந்தியாவை அவமானப்படுத்துவதாக உள்ளது. இங்கிலாந்து அரசாங்கம் இந்திய மாணவர்களுக்கு பெரும் அநீதியை இழைத்தும் உள்ளது” என்றார்.

    இங்கிலாந்துக்கான இந்திய தூதர் ஒய்.கே.சின்கா கடந்த வாரம் இங்கிலாந்து பல்கலைக்கழகங்களுக்கான மந்திரி சாம் ஜியிமாவை சந்தித்து இப்பிரச்சினையை எழுப்பிய நிலையில் அந்நாட்டு அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்து உள்ளது.  #USVisa #Outrage #StudentVisaRules  #Tamilnews 
    ×