search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆவண நகல்"

    • முத்திரைத்தாளில் அண்ணாமலை வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நகல் வெளியீடு.
    • அண்ணாமலை வேட்புமனு தொடர்பாக அதிமுக, நாம் தமிழர் கட்சி சார்பில் புகார்

    கோவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்பு மனு ஏற்கப்பட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில், அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் புகார் அளித்தனர்.

    தேர்தல் விதிகளுக்கு மாறாக அண்ணாமலை, நீதிமன்ற முத்திரைத்தாளில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதை சுட்டிக்காட்டி புகார் அளிக்கப்பட்டது.

    நீமன்ற கட்டணத்துக்கு அல்லாத முத்திரைத்தாளை பயன்படுத்தியே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பது விதி.

    தேர்தல் விதிக்கு முரணாக நீதிமன்ற முத்திரைத்தாளை அண்ணாமலை பயன்படுத்தியுள்ளதால் அவரது வேட்புமனுவை செல்லாது என அறிவிக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

    இந்நிலையில், கோவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்பு மனு தொடர்பான ஆவண நகலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

    நான் ஜூடிஷியல் (Non Judicial) முத்திரைத்தாளில் அண்ணாமலை வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நகல் வெளியிடப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் கிராந்தி குமார் பாடி விளக்கம் அளித்துள்ளார்.

    அதில், "கோவையில் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை எண் 17, எண் 27 என இரண்டு வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளார். எண் 17 வேட்புமனு Court Fee பத்திரத்தில் கையெழுத்து இல்லாமல் இருந்ததால் அது நிராகரிக்கப்பட்டது. மேலும் எண் 27 வேட்புமனுவை Non Judicial பத்திரத்தில் தாக்கல் செய்யப்பட்டதால் அந்த மனு ஏற்கப்பட்டது" என்றார்.

    • தபால் பிரிவு அறை எண் 224 -ல் விண்ணப்பம் அளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
    • விண்ணப்பத்தின் பேரில் 30 நாட்களுக்குள் தகவல் வழங்கப்படும்.

    வீரபாண்டி : 

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பதிவறையில் உள்ள ஆவண நகல் மற்றும் கோப்புகள் பொதுமக்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் நேரடியாக பதிவறையினை அணுகாமல் தபால் பிரிவு அறை எண் 224 -ல் விண்ணப்பம் அளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த விண்ணப்பத்தின் பேரில் 30 நாட்களுக்கு ள்தகவல் வழங்கப்படும் . இது குறித்து சந்தேகம் இருப்பின் மாவட்டகலெக்டரின் நேர்முக உதவியாளரை (பொதுப்பிரிவு)அணுகுமாறு திருப்பூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.  

    ×